<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148</id><updated>2012-03-16T18:03:01.118-07:00</updated><title type='text'>ஒற்றைச் சிறகின் பயணம்</title><subtitle type='html'>ஒற்றைச் சிறகோடு காற்றின் திசைதனில் வையத்து சாம்ராஜ்யங்களை வலம் வரும் ஓர் நிச்சயமற்ற பயணமிது!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>34</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-988146290246974764</id><published>2009-06-08T08:17:00.000-07:00</published><updated>2009-06-08T09:37:54.796-07:00</updated><title type='text'>கூரை மீதினிலே ஒரு பூனைக் குட்டி</title><content type='html'>நான் ஒரு அவசர வேலையாக பிரதான சாலை வழியே நடந்துக் கொண்டிருந்தேன். கிழக்குத் தெருவான செட்டியார்களின் ஜாகைகள் இருக்கும் வீதி வழியாக சென்றால் தூரம் பாதியாக குறையும் என்பதால் பாதையை மாற்றினேன். மாணிக்கம் செட்டி வீட்டு வாசல் அருகே ஒரு சிறுமி அழுதுக் கொண்டிருந்தாள். 'ஏன்  பாப்பா அழுகிறாய்?' என்று கேட்டேன். அது நிமிர்ந்து என் முகத்தை பார்த்து, 'ஐயோ! பூச்சாண்டி' என்று மேலும் குரலெடுத்து அழுதது. நான் என் மீசைக்கும், தலை பாகைக்கும் கிடைத்த வரவேற்பினை எண்ணி மனதிற்குள் முறுவலித்தேன். நான் சற்றே முகத்தினை சாந்தப்படுத்தி சிரித்தவாறே, 'நான் பூச்சாண்டி இல்லை பாப்பா. என் பெயர் ஷெல்லிதாசன்' என்றேன் மெல்லிய குரலில். ஆனால் அச்சிறுமிக்கு என் பெயர் தேவை இல்லை போலிருக்கிறது. ஐம்புலன்களையும் அடக்கிய ஞானியை போல் அச்சிறுமியின் பார்வையும், எண்ணமும் மேல் நோக்கியே இருந்தது. சற்று முன் என் மேலிருந்த அச்சம் நொடிகளில் மறைந்து விட்டிருந்தது. குழந்தையின் மனோலயத்தை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'மாமா..எனக்கு அந்த பூனை வேணும்' என என்னிடம் சிறுமி வாஞ்சையாகி விட்டாள். 'நான் தான் பூச்சாண்டி ஆச்சே! என்னிடம் ஏன் கேட்கிறாய்?' என்று மனதில் எழுந்த கேள்வியை கேட்கவில்லை. ஏனென்றால் என் சாமர்த்தியம் மழலைகளிடம் பலிக்காது என நன்றாகவே நான் அறிந்திருந்தேன். பிஞ்சு விரல்கள் காட்டிய திசைதனை தொடர்ந்தால் அது எதிர் வீட்டு கூரையின் மேல் முடிந்தது. அங்கே ஒரு பூனைக் குட்டி எங்களை முறைத்தவாறு சிலை போல் நின்றிருந்தது. சிறுமியின் மேல் நோக்கிய பார்வையின் இரகசியம் புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் பாரதப் போரில் பார்த்திபனுக்கு ஏற்பட்ட மன நிலையில் இருந்தேன். சென்று கொண்டிருக்கும் பணியா? இல்லை கூரை மேலிருக்கும் பூனையா? என்று இருதலை கொல்லி எறும்பு போல் முடிவு எடுக்க முடியாமல் குழம்பினேன். 'மாமா..பூனைய போய் பிடிச்சின்னு வாங்க' என்று அன்பு கட்டளை பிறந்தது. அன்று பார்த்திபனுக்கு கண்ணன் இருந்தான். எனக்கு இன்று இச்சிறுமி போலும். சுயநலம் அழிந்தது. எதன் நிமித்தமாக வீட்டை விட்டு கிளம்பினேனோ அதை முற்றிலுமாய் மறந்தேன். எனது கண்ணிற்கு  என்னை முறைக்கும் பூனை மட்டுமே தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கூரை மீது ஏறி பூனையை பிடித்தால், வீட்டு உரிமையாளன் சண்டைக்கு வந்து விடுவான். பூனை தானாகவும் கீழே இறங்காது. அப்படியே இறங்கினாலும் நம் பக்கம் தான் இறங்கும் எனவும் உறுதி கூற முடியாது. பூனையிடம் தோற்று விடுவோமோ என சிறிய பயம் எட்டி பார்த்தது. குழந்தையின் நம்பிக்கையை பாழாக்கவும் மனம் இடம் கொடுக்கவில்லை. ஏன் தரையில் நடமாடும் ஆடுகளின் மீதெல்லாம் இச்சிறுமிக்கு பிரியம் ஏர்படவில்லை?கடமையை செய் பலனை எதிர்பாராதே என சுலபமாக கண்ணன் சொல்லி விட்டார். மற்றவர்களின் உடைமைகள் மீதேறி கடமையை எப்படி செய்வது? பிரதான சாலை வழியாகவே சென்றிருக்கலாம். குறுக்கு வழி என்றும் உதவாது என்பது சரியாக தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'நான் வேண்டுமானால் வரும் பொழுது புது பூனை வாங்கி வரட்டுமா?' என தோல்வியினை மறைத்து சமாதானம் பேச முயன்றேன். சாது மிரண்டால் என சொல்வார்களே, அது போல கண்களில் அக்னி கனல் வீச,'எனக்கு அது தான் வேண்டும்' என்றாள் பிடிவாதமாக. ம்ம்..திக்கற்றவனுக்கு தெய்வமே துணை. விசித்திரமான மனம் சென்று கொண்டிருந்த வேலையை நினைவுப்படுத்தி அதன் முக்கியத்துவத்தை வேறு வலியுறுத்த ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'சாப்பிட வாம்மா' என வீட்டுக்குள் இருந்து குரல் வந்தவுடனே சிட்டாய் பறந்து விட்டாள் சிறுமி. ஆனால் எனக்கு அந்த குரலினை உள் வாங்கி அர்த்தப்படுத்திக் கொள்வதற்கு சில நொடிகள் ஆனாது. அதற்குள் அவள் வாசற்படியை கடந்து மறைந்து விட்டிருந்தாள். நீர் மேலிருக்கும் தாமரை போன்ற மனம் படைத்தவர்கள் போலும் குழந்தைகள். பூனையின் மீதே முழு கருத்து இருந்தும் அன்னையின் குரல் கேட்டதும் அனைத்தையும் உதறி விட்டு சென்று விட்டாள். அனைவரும் இப்படி இருந்து விட்டால் பிரச்சனை இராது.&lt;br /&gt;&lt;br /&gt;'தெய்வன் மனுஷ ரூபேனாம்' என்று சொல்லுவார்கள். எனக்கு அச்சிறுமியின் தாய் குரல், அசிரீரியாகவே பட்டது. கடைசியாக பூனையை ஒருமுறை பார்த்து விட்டு, கிளம்பலாம் என எத்தனிக்கும் பொழுது சிறுமி வந்து விட்டாள். மின்னலை மிந்தி விடுவாள் போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'நான் சாப்பிட்டு வர்றதுக்குள்ள,பூனக் குட்டிய பிடிச்சு வையுங்க.'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html"&gt;இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-988146290246974764?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/988146290246974764/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=988146290246974764' title='16 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/988146290246974764'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/988146290246974764'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2009/06/blog-post_08.html' title='கூரை மீதினிலே ஒரு பூனைக் குட்டி'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-410573704357069761</id><published>2009-06-07T10:35:00.000-07:00</published><updated>2009-06-08T08:29:53.660-07:00</updated><title type='text'>பொழுது போகாததால்..</title><content type='html'>இன்னுமொரு முயற்சி &lt;a href="http://www.samrajyan.blogspot.com"&gt;www.samrajyan.blogspot.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-410573704357069761?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/410573704357069761/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=410573704357069761' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/410573704357069761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/410573704357069761'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2009/06/www.html' title='பொழுது போகாததால்..'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-6348297938057367222</id><published>2009-05-23T04:20:00.000-07:00</published><updated>2009-06-16T07:49:42.407-07:00</updated><title type='text'>ஊர் உலகம்</title><content type='html'>நமக்கு ரொம்ப வேண்டிய பையன், பக்கத்துல சினிமா எடுக்குறாங்கன்னு கேள்விப்பட்டு வேடிக்கை பார்க்க போயிருக்கான். பக்கத்துல நல்ல டீ கடை எங்க இருக்குன்னு அந்த சினிமாக்கார கும்பலுல யாரோ ஒருத்தவங்க நம்ம பையன்கிட்ட கேட்டிருக்காங்க. அப்படியே பொதுவா நம்ம பையன் சினிமாக்காரங்க கிட்ட பேசினத, தூரத்துல இருந்து அவங்க ஊர் ஆளு ஒருத்தரு பார்த்துட்டாரு.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நம்ம பையன்.. இப்ப நடிகர் ஆயிட்டான். தெரியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு அப்பவே தெரியும்... அவன் முகத்தில அப்படி ஒரு கலை."&lt;br /&gt;&lt;br /&gt;"பரவாயில்ல... கொஞ்ச நாளுலயே ரெண்டு, மூனு படத்துல நடிக்க கூப்பிட்டுட்டாங்களாம்."&lt;br /&gt;&lt;br /&gt;"ரஜினி, கமல் எல்லாம் இவனுக்கு இப்ப ப்ரென்ட்ஸ் ஆயிட்டாங்களாம்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவனவன் முன்னேறுவதற்கு என்னம்மோ பண்றான். நம்ம பையனோ சுலபமாக பெரிய ஆள் ஆகி விட்டேன். அதெப்படி என்று தீவிரமாக யோசித்த பொழுது தான் ஒன்று புரிந்தது. கடின உழைப்போ, திறமையோ தேவையில்லை. ஒரு காதும், ஒரு வாயும் சுத்தி இருக்கிற ஒரு நாலு பேருக்கு இருந்தா போதும். நீங்களும் நம்ம் பையன் மாதிரி பெரிய ஆளு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியெல்லாம் நம்ம பையனை உசுப்பேத்தி உச்சாணி கொம்பில் உட்கார வைத்த ஊர் உலகம்...கடைசியாக அந்த கேள்வியை அவனிடம் கேட்டு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"உன் படம் எப்ப ரிலீஸ் ஆகும்?"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-6348297938057367222?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/6348297938057367222/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=6348297938057367222' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/6348297938057367222'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/6348297938057367222'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2009/05/blog-post_23.html' title='ஊர் உலகம்'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-3462859567082703875</id><published>2009-05-18T06:51:00.000-07:00</published><updated>2009-05-19T00:23:44.650-07:00</updated><title type='text'>சோழியும், குடுமியும்</title><content type='html'>"நமக்கு கிடைத்த தகவல்.. சரி தானா?"&lt;br /&gt;"அது பொய்யாய் இருப்பதற்கான வாய்ப்புகள் ரொம்ப கம்மி சார்" என்றான் இளம் ராணுவ அதிகாரி மிடுக்காக.&lt;br /&gt;சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு, "எப்படியும் நமக்கு கண்டியில இருந்து உதவுவாங்க. கண்டிக்கு போன் பண்ணு" என்றார் தொய்வான குரலில்.&lt;br /&gt;&lt;br /&gt;.............&lt;br /&gt;&lt;br /&gt;மயான அமைதியுடன் இருக்கும் அந்த கிராமத்தில் முதல் குண்டினை வீசினர். எப்பொழுதும் போல் கிராம மக்கள் அலறி அடித்து ஓடி வரவில்லை. இரண்டு, மூன்று குண்டுகளுக்கு பிறகும் எந்த விதமான சப்தமோ, எதிர்ப்போ இல்லை. மூத்த தலைவர்கள் சிலர் ஒன்று கூடி, ஒற்றர் படையினை வேவு பார்க்க அனுப்பினர்.  பதுங்கி பதுங்கி சென்ற ஒற்றர் படை வீரர்கள் விழி பிதுங்கியவாறே வந்தனர்.&lt;br /&gt;"யாருமே உயிரோட இல்ல சார்?"&lt;br /&gt;"எல்லாம் தூங்குற மாதிரி தான் சார் படுத்து இருக்காங்க. ஆனா உயிர் இல்ல."&lt;br /&gt;&lt;br /&gt;.............&lt;br /&gt;&lt;br /&gt;"அவருகிட்ட பேசனும்னா.. கண்டிக்கு நேர்ல போனா தான் முடியும்னு சொல்லிட்டாங்க சார்."&lt;br /&gt;"நாம எங்கிருந்து பேசுறோம்னு தெரிஞ்சுமா, அப்படி சொன்னாங்க."&lt;br /&gt;"தெரிஞ்சதால தான் சார்..சொன்னாங்க" என்றான் இளம் அதிகாரி அழுத்தம் திருத்தமாக.&lt;br /&gt;இளம் அதிகாரியை முறைப்பது போல் பார்த்து விட்டு, "கண்டிக்கு போக ஏற்பாடு பண்ணு" என்றார் ஜன்னலை பார்த்தவாறே.&lt;br /&gt;............ .&lt;br /&gt;&lt;br /&gt;"இது ஒரு வகையான ஸ்லோ பாய்சன். எல்லா உறுப்புகளையும் நிதானமா செயலிழக்க வச்சு, கடைசியில உயிர் போயிடும் சார்" என்றார் மருத்துவர் &lt;br /&gt;பிரேத பரிசோதனை அறிக்கையை கையில் வைத்தவாறு.&lt;br /&gt;"இது கொலையா இல்ல தற்கொலையா?"&lt;br /&gt;"தெரியல. ஆனா இந்த மாதிரி ஸ்லோ பாய்சன் இங்க கிடைக்கறதில்லை. வெளியில இருந்து தான் வந்திருக்கனும்" என்று கிளம்பியவர், "இன்னொரு விஷயம்..சாகுறப்ப யாருக்கும் வலி எதுவும் தெரிஞ்சிருக்காது."&lt;br /&gt;&lt;br /&gt;.............&lt;br /&gt;&lt;br /&gt;அவர் பிரக்ஞையுடன் அமர்ந்திருக்காரா  இல்லையா என்பதே சந்தேகமாக இருந்தது. சிரிப்பது போன்ற உதடுகள், போதையில் இருப்பது போன்ற கண்கள், விழுந்து விடுவது போல் நடுங்கும் தேகம். இவரிடம் என்ன பேசுவது என்று யோசித்துக் கொண்டே, "உங்களுக்கு விஷயம் தெரியும் என்று நினைக்கிறேன்" என்று மூத்த அதிகாரி ஆரம்பித்தார்.&lt;br /&gt;"தெரியாது" என்றார் ஒற்றை வார்த்தையில் உறுதியாக.&lt;br /&gt;"ஒரு கிராமமே மர்மமான முறையில் இறந்திருக்காங்க. அதுல உங்க ஆளு ஒருத்தர் சம்பந்தப்பட்டிருக்கார். அவர நாங்க கூடிய சீக்கிரம் பிடிச்சிடுவோம். ஆயுதம் கடத்த முயன்றார் என்று அவர நாங்க ராணுவ முறைப்படி..." என்று நிறுத்தி, "அதான் உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு" என்று மூத்த ராணுவ அதிகாரி முடித்தார்.&lt;br /&gt;"கொல்லாமையை போதிக்க வேண்டிய எங்கிட்டயே.. கொல பண்ணப் போறேன்னு சொல்லிட்டு செய்றீங்க" என்று வருத்தத்தோடு புன்னகைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.............&lt;br /&gt;&lt;br /&gt;"சார்.. நேத்து நம்ம செக் போஸ்ட் தாண்டி ஒருத்தர் தான் போயிருக்கார்."&lt;br /&gt;"அவர் பெயரு.. மஹிந்தா இந்திரசாரா."&lt;br /&gt;"அனுராதாபுரம் புத்த மடத்துல இருந்து வர்றதா சொன்னார் சார்."&lt;br /&gt;"அவர் ஒரே ஒரு துணி மூட்டை தான் வச்சிருந்திருக்கார். அதுல சில மூலிகைங்க இருந்திருக்கு."&lt;br /&gt;"அனுராதபுரம் மடத்துல விசாரிச்சிங்கீளா?" என்றார் மூத்த அதிகாரி கோபமாக.&lt;br /&gt;"அவர் அந்த மடத்த சேர்ந்தவர் தானாம். ஆனா அவர பத்தி வேறு எதுவும் சொல்ல மறுத்துட்டாங்க."&lt;br /&gt;&lt;br /&gt;.............&lt;br /&gt;&lt;br /&gt;"இது ரொம்ப சீரியசான இஷ்யூ. உலக நாடுகள் எல்லாம் நம்மல உன்னிப்பா பார்த்துக்கிட்டிருக்காங்க. நீங்க மஹிந்தா இந்திரசாராவ பிடிக்க உதவுனீங்கன்னா, எந்த மடத்து பெயரும் வராம நாங்க மறைச்சிடுறோம். உங்களுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது."&lt;br /&gt;"உண்மைய ஏன் மறைக்கனும்? தானாக பழுத்து விழ வேண்டிய சருகுகளை, இலையாய் துளிர ஆரம்பிக்கும் பொழுதே அதை சிவப்பாக்கி கீழே விழ வைக்க பார்த்தீங்க. ஆனா இப்ப அந்த இலைகளை சேதாரமில்லாமல் இந்திரசாரா பறிச்சுட்டார். இதுல மறைப்பதற்கு ஒன்னுமில்லை. அதற்கான அவசியமுமில்லை" என்று புத்தர் சிலையை கம்பீரமாக பார்த்தார். &lt;br /&gt;"அடுத்த தடவையும் நீங்களே தலைமை குருவா வருவதற்கு அரசு உதவி செய்யும்" என்றார் அதிகாரியும் புத்தர் சிலையைப் பார்த்து.&lt;br /&gt;"புத்தம்..சரணம்..கச்சாமி" என்றார் புத்தர் மீதிருந்த பார்வையை எடுத்தவாறே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-3462859567082703875?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/3462859567082703875/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=3462859567082703875' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/3462859567082703875'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/3462859567082703875'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2009/05/blog-post.html' title='சோழியும், குடுமியும்'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-4820246019880918820</id><published>2009-03-24T23:30:00.000-07:00</published><updated>2009-03-25T00:49:32.761-07:00</updated><title type='text'>சாஃப்ட்வேர் இஞ்சினீயரும், அண்ணா யூனிவர்சிட்டி ப்ரொஃபசரும்</title><content type='html'>"நாளைக்கு எனக்கு.. கவுன்சிலிங் சார்."&lt;br /&gt;"எனக்கும் தான்" என்றார் வருத்தமாக.&lt;br /&gt;"என்ன சார்.. என்னம்மோ மாதிரி பேசுறீங்க?" என்று கேள்விக்கு அவர் பதில் எதுவும் சொல்லவில்லை.&lt;br /&gt;"க்யூ பெருசா இருக்கு.. ரொம்ப நேரம் நிக்கனுமேனே யோசிக்கிறீங்கலா? அது ஏதோ சின்ன டெக்னிக்கல் ப்ராப்ளம் தானாம் சார். இன்னும்  கொஞ்ச நேரத்துல சரி பண்ணிடுவாங்க."&lt;br /&gt;அவர் மீண்டும் அமைதியாக இருந்தார். முகத்தில் சிறு எரிச்சல் தோன்றி மறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க..எங்க.. இடம் காலியா இருக்குன்னு பார்த்துட்டேன் சார். முடிஞ்சா இரண்டு பேரும் ஒரே இடத்துக்கு அப்ளை பண்ணலாம். ஆனா என்ன, இடம் ரிஜிஸ்டர் ஆகி கன்ஃபார்ம் ஆனவுடன், நமக்கு பழசெல்லாம் மறந்துடும்."&lt;br /&gt;"அப்படியா?" என்றார் திகைத்தவறாக.&lt;br /&gt;"என்ன சார் அப்படியான்னு கேக்குறீங்க! அப்படி தான ப்ரோகிராம் எழுதி இருக்காங்க."&lt;br /&gt;"உனக்கு ப்ரோகிராம் எழத சொல்லி கொடுத்தவனே நான் தான். ம்ம்... சரி விடு. ஆனா உண்மையிலேயே எனக்கு இந்த ப்ரோகிராம் புரியவே இல்ல. உனக்கு மூனு மாசம் முன்னாடி இங்க வந்தவன் நான். ரொம்பா நாளா பென்ச்சுல உட்கார்ந்துக்கிட்டிருக்கேன். ஆனா ரெண்டே வாரத்துல உனக்கு கவுன்சிலிங் டேட் வந்துடிச்சு!!"&lt;br /&gt;"நீங்க சீனியாரிட்டி படி எல்லாம் நடக்கனும்னு எதிர் பார்க்குறீங்க. ஆன இங்க வரவங்களா டெஸ்ட் பண்ணி, க்வாலிட்டி ரேட்டிங் போட்டு தனி டேட்டா பேஸ் மெயின்டெயின் பண்ணுது. ப்ளஸ் பக்ஸ் கால்குலேஷன் அது, இதுனு ஏதோ ஃபார்முலா யூஸ் பண்ணி கவுன்சிலிங் டேட்டும், ப்ளேசும் அசைன் ஆகுது."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ரெண்டு பேரும் இங்க நின்னு பேசிக்கிட்டிருக்கீங்க. நாளைக்கு பூமியில பொறக்கிறவங்களுக்கு, நாளன்னைக்கு பொறக்க போற நீங்க தான முன்ன நின்னு ஃபேர்வெல் தரனும்."&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-4820246019880918820?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/4820246019880918820/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=4820246019880918820' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/4820246019880918820'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/4820246019880918820'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2009/03/blog-post.html' title='சாஃப்ட்வேர் இஞ்சினீயரும், அண்ணா யூனிவர்சிட்டி ப்ரொஃபசரும்'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-3228609337762431620</id><published>2008-12-18T08:31:00.000-08:00</published><updated>2009-06-07T10:37:51.303-07:00</updated><title type='text'>அவன்</title><content type='html'>இராஜ வீதிக்காரர்கள் உண்மையிலேயே அப்படியொரு முடிவுக்கு வந்திருப்பார்கள் என நினைத்து பார்க்கவே அவனால் முடியவில்லை. அதை நினைக்க நினைக்க அவனுக்கு இரத்தம் கொதித்தது. வேறேதாவது காரணத்திற்காக இம்முடிவு எடுக்கப் பெற்றிருந்தால், அவனே முன்னின்று தலையைக் கொடுத்தாவது செய்து முடித்திருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆயிரத்தி தொள்ளாயிரத்தி பதினொன்னு" என்று கண்களை மூடியவாறே எண்ணிக் கொண்டிருந்தான். தூக்கம் வருவதாக இல்லை. 'பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த கீழ் வகுப்புப் பெண்ணை அவர்கள் வீதி வழியாக  அழைத்து சென்றதற்காக கலெக்டர் ஆஷ் துரையை கொல்லப் போகிறார்கள். இதை மேலிடத்தில் சொல்லி தடுக்கலாம், ஆனால் கலெக்டர் கொல்லப் பட வேண்டியவன். இன்னும் பதினேழு நாட்கள் மீதம் உள்ளது' என்று யோசித்தவாறே சிறிது கண்ணயர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வாஞ்சிநாதனை எதிர்ப்பார்த்து அவன் முன்னதாகவே மணியாச்சி இரயில் நிலையத்திற்கு சென்று விட்டான். இரயில் வந்து நின்ற சில நொடிகளில் எங்கிருந்தோ தோன்றி, வாஞ்சிநாதன் புயலென இரயிலில் ஏறினான். துப்பாக்கி வெடிக்கும் சத்தத்தைத் தொடர்ந்து அங்கே நிலவிய ஆழ்ந்த நிசப்தத்தை திருமதி ஆஷின் அழுகை சத்தம் கலைத்தது. முகமுடியுடன் துரிதமாக வாஞ்சிநாதன் தப்பி ஓடுவதில் குறியாக இருந்தான். முடிந்தவரை தன்னை யாரென வெளிக் காட்டாமல் தப்பிப்பது இல்லையேல் சரணடைவது என்ற முடிவோடு தான் வாஞ்சிநாதன் இருந்தான். அனைவரின் கண்களிலும் மண்ணைத் தூவி விட்டு, அவனிருக்கும் திசை நோக்கி ஒடினான் வாஞ்சிநாதன். மீண்டுமொரு துப்பாக்கி சத்தம். இனிமேல் நன்றாக தூக்கம் வருமென்ற திருப்தியுடன் அவன்  அவ்விடத்தை விட்டு அனைவரும் வரும் முன் ஒடினான்.&lt;br /&gt;&lt;br /&gt;*******************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="https://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;amp;postID=3228609337762431620"&gt;பாரதி புதையல்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-3228609337762431620?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/3228609337762431620/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=3228609337762431620' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/3228609337762431620'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/3228609337762431620'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2008/12/blog-post.html' title='அவன்'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-7867435443235027823</id><published>2008-11-27T04:17:00.000-08:00</published><updated>2008-11-29T02:00:22.368-08:00</updated><title type='text'>அடையாளங்கள்</title><content type='html'>'ஊர சுத்தி ஒரே கடன்..எல்லாம் கழுத்த நெறிக்க ஆரம்பிச்சிட்டாங்கா!' &lt;br /&gt;'எதிர் வீட்ல கார் வாங்கிட்டாங்க..பக்கத்து வீட்ல மோர் வாங்கிட்டாங்கன்னு பொன்டாட்டி ஒரே தொனதொனப்பு.' &lt;br /&gt;'மனுஷன் ரொம்ப மாறிட்டான் சார்..விலைவாசி எல்லாம் ரொம்ப ஏறிப் போச்சு..சமாளிக்க முடியல.' &lt;br /&gt;&lt;br /&gt;இவையாவும் என் பொழுதுப்போக்கின் போது பொதுவாக காதில் விழுபவைகள். முகத்தில் ஒரு பொய்யான ஆர்வத்தோடு இவை அனைத்தையும் கேட்பேன். ஆனால் இதையெல்லாம் நினைத்து பிறகு சிரிப்பேன்.எனது பொழுதுப்போக்கு தெருவில் வித்தியாசமாக போவோரை உரிமையோடு அழைத்து ஒரு வேளை உணவு வாங்கி தருவது. கைகளில் கிழிந்த சாக்குடன், சுருள் சுருளாக அழுக்கு தலை முடியோடு, தனியாக பேசியவாறு செல்வோரை எல்லாம் அணுகி இல்லாத பணிவினை வரவழைத்துக் கொண்டு பவ்யமாக அழைப்பேன். அவர்கள் அனைவரும் என்னை பேயை பார்ப்பது போல் பார்த்து விட்டு, மிக்க யோசனைக்கு பிறகு என்னுடன் அருகிலிருக்கும் உணவகத்திற்கு வருவார்கள். பொதுவாக யாரும் எளிதில் பேசி விட மாட்டார்கள். அரை வயிறு நிறைந்தவுடன் தானாக பேச ஆரம்பிப்பார்கள். விடை பெறும் போது வயிறார வாழ்த்துவார்கள். எனக்கு புண்ணியம் வந்து சேருகிறதோ இல்லையோ ஆனால் மனதில் ஒரு சிறு திருப்தி நிலவும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது இந்த பொழுதுப்போக்கு நன்றாக சென்றுக் கொன்டிருந்தது. அவனை காணும் வரை அல்லது அவர் என்னை குழப்பும் வரை. மிக நிதானமாக சாப்பிட்டு கொண்டிருந்தார். பார்ப்பதற்கும் தூய்மையாக இருந்தார். ஆனால் அவரது ஆடை குறைப்பு கவர்ச்சி நடிகைகளுக்கே சவால் விட்டது. முக்கால் வயிறு நிரம்பியும் அவர் வாயே திறக்கவில்லை. சரி நானே பேசி விடலாம் என்று எனது முதல் கேள்வியைக் கேட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;"உங்கள பத்தி தெரிஞ்சுக்கலாமா?" என்றேன் மரியாதையாக. யாராக இருந்தால் என்ன, மரியாதை அவசியமாகிறதே! ஆனால் அவரிடமிருந்து பதில் இல்லை. இன்னும் என்னென்ன  கேள்விகளோ கேட்டேன். ஆனால் அவர் அசரவில்லை. &lt;br /&gt;முழுவதுமாக உண்டு விட்டு, "நானும் ரொம்ப வருஷமா அத தான் தேடிக்கிட்டிருக்கேன்" என்றார். உண்மைகளை மழுப்பும் இத்தகைய பதில்களை கேட்டால் நான் எரிச்சலாயிடுவேன்.&lt;br /&gt;"வாழ்க்கைய தொலைச்சவங்க சொல்ற சமாதானம் இது" என்றேன் கோபமாக.&lt;br /&gt;"அப்ப உனக்கு நீ யாருன்னு தெரியுமா?" என்றார் ஆச்சரியமாக.&lt;br /&gt;"நல்லாவே தெரியும்.. கெளதம்" என்றேன் கிண்டலாக.&lt;br /&gt;"அது உன் பெயர். யார் நீ?"&lt;br /&gt;கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தவனாக, "ஈ.பி. யில ஜெ.இ.யா வேல செய்றேன்" என்றேன்.&lt;br /&gt;"அது நீ செய்ற வேல?" &lt;br /&gt;எடுபடாது என்று தெரிந்தும் தயங்கியவாறே, "எனக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள் இருக்கு" என்றேன்.&lt;br /&gt;"அது உனக்கிருக்கும் உறவுகள்?"&lt;br /&gt;இப்பொழுது நான் அமைதியானேன்.&lt;br /&gt;"யார் நீ என்று கேட்டால் வெறும் அடையாளங்களாகவே சொல்றியே!" என்று எழுந்து சென்று விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் யார் என்று கண்டுப்பிடிக்க என்னால் முடிகிறதோ இல்லையோ ஆனால் வேறு ஏதாவது பொழுதுப்போக்கினை கண்டுப்பிடிக்கும் சாமர்த்தியம் என்னிடம் இருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-7867435443235027823?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/7867435443235027823/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=7867435443235027823' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/7867435443235027823'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/7867435443235027823'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2008/11/blog-post_27.html' title='அடையாளங்கள்'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-4723547231864971634</id><published>2008-11-14T00:56:00.000-08:00</published><updated>2008-11-14T00:58:22.151-08:00</updated><title type='text'>கடைசி வீரன்</title><content type='html'>"வெற்றி!!!"&lt;br /&gt;...........&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-4723547231864971634?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/4723547231864971634/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=4723547231864971634' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/4723547231864971634'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/4723547231864971634'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2008/11/blog-post_14.html' title='கடைசி வீரன்'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-3433258861468102899</id><published>2008-11-06T19:11:00.000-08:00</published><updated>2008-11-06T19:12:29.985-08:00</updated><title type='text'>ரெண்டு மணி நேரம் தான்</title><content type='html'>"ஏன்டா  பக்கத்து தெருவுல தான் நான் இருக்கேன். எங்கள வந்து பார்க்கக் கூடாதா?"&lt;br /&gt;"டைமே இல்ல மாமா."&lt;br /&gt;"துரை..கலெக்டருக்கு படிக்கிறீங்களோ?"&lt;br /&gt;"காலையில ஆறு மணிக்கு டியூஷன் போறேன். ஏழரை மணிக்கு வந்து அவசர அவசரமா கிளம்பி எட்டே காலுக்கு பஸ்ச பிடிக்கனும். திரும்பி நாலு மணிக்கு வீட்டுக்கு வந்து நாலரை மணி சயின்ஸ் டியூஷனுக்கு போயிட்டு அப்புறம் ஹிந்தி கிளாஸ் எல்லாம் முடிச்சுட்டு எட்டு மணிக்கு தான் திரும்பி வீட்டுக்கு வர்றேன். அப்புறம் ஹோம் ஒர்க் எழுதிட்டு, சாப்ட்டு தூங்கிடுவேன்."&lt;br /&gt;"அது சரி..கலெக்டர் விட நீ பிசி தான். சரி சண்டேல வரலாம் தான?"&lt;br /&gt;"அன்னிக்கு ஃபுல்லா கிரிக்கெட் பிராக்டீஸ் இருக்கு. காலை பதினொரு மணிக்கு போனா சாயந்திரம் ஆறு மணிக்கு தான் வருவேன்."&lt;br /&gt;"இந்த காலத்து பசங்கெல்லாம் ரொம்ப பாவம்டா. சரி..சரி..போய் படி."&lt;br /&gt;ஏதோ யோசித்தவராய் தன் தங்கையை அழைத்து, "ஏம்மா..இப்படியே படி படின்னு சொன்னா என்னம்மா ஆவறது. கொஞ்சம் ப்ரீயா விடுறதில்லையா? பாவம் பையன். என் ப்ரென்ட் ஒருத்தவன் 'யோகா' க்ளாஸ் நடத்தறான். ஞாயித்துக் கிழமை மட்டும் தான். நானே சொல்லி விடுறேன். பையன அனுப்பி வையுங்க. மைன்டுக்கு ரொம்ப நல்லது. படிக்கறதெல்லாம் அப்படியே ஞாபகமிருக்கும். உடம்புக்கும் நல்லது. என்ன..சரியா!" என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-3433258861468102899?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/3433258861468102899/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=3433258861468102899' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/3433258861468102899'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/3433258861468102899'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2008/11/blog-post_8214.html' title='ரெண்டு மணி நேரம் தான்'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-2214016159881801155</id><published>2008-11-06T19:07:00.001-08:00</published><updated>2008-11-14T01:29:33.130-08:00</updated><title type='text'>அர்த்தமுள்ள பொய்கள்</title><content type='html'>"முதல் உலகப் போரோட நூறாவது நாளுக்கும், இரண்டாவது உலகப் போரோட நூறாவது நாளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு தெரியுமா?"&lt;br /&gt;'தெரியாது'  என்று தலையை ஆட்டி விட்டு, "என்ன அது?" என்று கேட்டான்.&lt;br /&gt;"அந்த இரண்டு நாளுலயும் ஜெர்மனியோட கை ஓங்கி இருந்தது."&lt;br /&gt;"ம்" என்று தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.&lt;br /&gt;"ஆனா அந்த இரண்டு நாளோட கடைசியிலயும் ஜெர்மன் தளபதி ஒருத்தர நம்ம ஆளுங்க கொன்னுட்டாங்க."&lt;br /&gt;"ஆமா..எப்பவும் நாஜி ஜெயிக்கிற மாதிரி தான் ஆரம்பத்தில இருக்கும். ஆனா இறுதி வெற்றி எப்பவும் நமக்கு தான்" என்று முக மலர்ச்சியோடு ஜேசனின் கைகளை பற்றியவாறே தூங்கி விட்டான்...நிரந்தரமாக.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுது தான் இரண்டாம் உலகப் போர் முடியுமோ என்றிருந்தது. ஒரு உயிர் பிரிவதை அருகிலிருந்து பார்ப்பது மிக கொடுமையானது. அதற்குள், "ஜேசன்..பக்கத்து அறையில நாலாவது பெட்ல இருக்கிறவன் தன் கடைசி நிமிடத்தில் இருக்கிறான். அவனுக்கு ஷேக்ஸ்பியரும், ப்ரெஞ்ச் வொயினும் பிடிக்குமாம்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஷேக்ஸ்பியரோட நாடகத்தை எல்லாம் படிச்ச ரசிகையான ஒரு செல்வந்தர் வீட்டு பொண்ணு அவருக்கு ஒரு பாட்டில் ப்ரெஞ்ச் வொயின் அனுப்பி தன் வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட்டா. நினைச்சாலே எனக்கு சிரிப்பு வருது. அத பத்தி கேள்விப்பட்டிருக்கியா?"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-2214016159881801155?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/2214016159881801155/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=2214016159881801155' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/2214016159881801155'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/2214016159881801155'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2008/11/blog-post_06.html' title='அர்த்தமுள்ள பொய்கள்'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-3336538556545219594</id><published>2008-11-06T08:55:00.000-08:00</published><updated>2008-11-06T08:57:07.918-08:00</updated><title type='text'>தூர அதிர்ஷ்டம்</title><content type='html'>வானத்தை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தான் கணேசன். நாளைக்கு அவனது அண்ணன் மகன் ராமுவிற்கு பிறந்த நாள். கணேசனுக்கு ராமு என்றால் ரொம்ப பிடிக்கும். அவனுடைய பிறந்த நாளுக்கு சின்ன பரிசு வாங்கி கொடுக்க கூட காசில்லையே என்று நினைத்து கொன்டிருந்தான் கணேசன். &lt;br /&gt;"இந்தா கணேசா...நாளைக்கு காலையில ஆறு மணிக்கெல்லாம் தயாரா இரு. வேல ஒன்னு வந்திருக்கு" என்றார் முனியன்.&lt;br /&gt;'என்ன வேல...திடீரென்னு!' என்பது போல் நம்பிக்கையின்றி முனியனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான் கணேசன்.&lt;br /&gt;"மேக்கப்பட்டிக்கு மினிஸ்டர் வர இருந்தாரில்ல..அது ரத்தாகி இப்ப நம்ம ஊர்ல நடக்கப் போகுது. ஏதோ பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக நம்ம ஊர்ல மேடை அமைக்க போறாங்களாம். எப்படியோ...நமக்கு நாள பொழுது ஓடினா சரி தான்" என்றார் ஒரு வறட்டு திருப்தியுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை ஒன்பது மணிக்கெல்லாம் மேடை தயாராகி விட்டது. பத்து மணி வண்டியில் ஏறினால், கணேசன் இரண்டு மணிக்கெல்லாம் வீட்டில் இருக்கலாம். கூலி தருபவரிடம் சென்ற பொழுது, "நைட்டு பந்தல பிரிக்கிற வரைக்கும் இருந்தா, ரெண்டு வேள சாப்பிடு இன்னுமொரு நூறு ரூபா கிடைக்குமில்ல!?" என்ற படியே கணேசனுக்கு நூற்றைம்பது ரூபாய் தந்து, இரு நூற்றைம்பது ரூபாய் தந்ததாக கையெழுத்து வாங்கிக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மணிக்கெல்லாம் வீட்டிற்கு சென்று ராமுவை பார்த்து விட்டு, மூன்றரை மணி பேருந்தில் ஏறி மீண்டும் பந்தல் பிரிக்கவும் வந்து கூலி வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவோடு பேருந்தில் ஏறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்தில் ஏறி அமர்ந்த சிறிது நேரத்தில், கணேசன் தூக்கத்தின் வாயிலாக கனவு உலகத்திற்கு சென்று விட்டான். சுமார் மூன்று மணி நேர உறக்கத்திற்கு பிறகு விழித்த பொழுது, பேருந்து போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டது தெரிந்தது. அமைச்சர் வந்து செல்லும் வரை இந்த சங்கடங்களும் தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக நான்கு மணி நேரத்தில் பத்து கி.மீ. தொலைவினை பேருந்து கடந்திருந்தது. இனிமேல் ஊருக்கு சென்று வந்தால் ஒருவேளை கூலி பறிப் போகுமென்று எண்ணி பேருந்திலிருந்து இறங்கி விட்டான். அருகிலிருந்த கடையில் தேநீர் அருந்தும் பொழுது, "நடக்க வேண்டிய சமயத்துல ஒண்ணு நடக்கலன்னா, அதுக்கப்பறம் அது நடக்காமலே இருக்கலாம்" என்றொரு பெரியவர் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ஏதோ தோன்றியவனாக கணேசன்  ஊர்ந்துக் கொண்டிருந்த பேருந்தில் நிதானமாக சென்று ஏறிக் கொண்டான். கணேசன் வீடு போய் சேர இரவு எட்டு மணி ஆகி விட்டது. ஆனால் ராமுவும் அவனது அப்பாவும் கணேசனைக் காண சென்றிருந்தனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-3336538556545219594?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/3336538556545219594/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=3336538556545219594' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/3336538556545219594'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/3336538556545219594'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2008/11/blog-post.html' title='தூர அதிர்ஷ்டம்'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-2540104850137373197</id><published>2008-10-01T22:38:00.000-07:00</published><updated>2008-10-20T09:13:40.931-07:00</updated><title type='text'>மனிதர்கள்</title><content type='html'>'சுசிய பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு? கடைசியா பொங்கலப்ப பார்த்தது. இந்த மாதிரி நல்லது, கெட்டதுல தான் எப்பவாவது பார்க்கிறேன். அதுவும் பெரியவங்களுக்கு மத்தியில அவங்க வாய்க்கு காது கொடுத்துட்டு, ச்சே..திரும்பவே மாட்டேங்கிற. அப்படி என்ன புதுசா சொல்லிடப் போறாங்க? மணிமாறன் தாத்தாவும் அவர் தங்கச்சி பவானி பாட்டியும், எப்படி எல்லா கஷ்டத்திலும் ஒத்துமையா வாழ்ந்தாங்கன்னு நான் பொறந்ததிலிருந்து கேக்கிறேன். ம்ம்..மணிமாறன் தாத்தா அந்த காலத்துல பொண்ணுங்க மத்தியில ரொம்ப பிரபலம்னு எங்கப்பாக்கிட்ட அவங்கப்பா சொல்லி இருக்காரு. அவருக்கு இப்ப நூறு வயசுன்னு சொல்றாங்க. ஆனா பார்க்கிறதுக்கு அப்படி தெரியலயே!' என்று நினைத்த சிவராமன் சுசியை விட்டுட்டு  மணிமாறனைத் தேடினான். &lt;br /&gt;&lt;br /&gt;'கொஞ்சம் நஞ்சம் வயசா ஆகுது? இந்த புரட்டாசி வந்த தொன்னூறு பூர்த்தி! அஞ்சு வருஷமா வெளில வராம இருந்தேன். பவானி கூட பிறந்த தோஷத்துக்காக வர வேண்டியாத போச்சு. இந்த மாதிரி கும்பல பார்த்தாலே இப்பெல்லாம் உள்ளுக்குள்ள ஒரு பயம். இதுல வேற என்ன பார்க்கிறவனெல்லாம் நான் எப்ப சாவுவன்னு கணக்கு பண்றதிலேயே குறியா இருக்காங்க. இதெல்லாம் பொறுத்துன்னு இங்க வந்தன்னா, அதுக்கு விசேஷமான ஒரு காரணம் இருக்கு. அது பவானி வீட்டு வைபவத்துக்கு வர்ற மடப்பள்ளி இராமையாப் பிள்ளை தான். அவன் கைப் பக்குவம் இனி ஒருத்தனுக்கு வராது. வயசு ஏற ஏற எல்லா பற்றும் போனாலும், நாக்குல ஒட்டிட்ட இந்த சுவை மட்டும் போக மாட்டேங்குது. அவன தனியா பார்க்க முடிஞ்சா, முந்திரி பருப்ப தூளாக்கி போட்டு ஜவ்வரிசி பாயாசம் கேட்கனும். இல்லன்னா..என் பல்லுக்கு உதவாது" என்று நினைத்தவாறு சுற்றும் முற்றும் இராமையாப் பிள்ளைக்காக நோட்டமிட்டார் மணிமாறன்.&lt;br /&gt;&lt;br /&gt;'இன்னைக்கு முக்கியமான இரண்டு பெரிய இடத்துல வர சொல்லியிருந்தாங்க. அதெல்லாம் விட்டுட்டு, பழகின தோஷத்துக்கு இந்த சின்ன அடுப்படியில மாட்டிகிட்டு அவதிப்படுறேன். இங்க வந்ததும் ஒரு வகையில் நல்லதா போச்சு. சாம்பமூர்த்தி சார நேர்ல பார்த்து பையன் வேலை விஷயமா பேசனும்னு ரொம்ப நாளா நினைச்சிக்கிட்டிருந்தேன். எப்படியும் அவர பார்த்து பேசிடனும்' என்று எண்ணிக் கொண்டே கிண்டிக் கொண்டிருந்தார் இராமையாப் பிள்ளை.&lt;br /&gt;&lt;br /&gt;'இந்தியாவுல மட்டுந்தான் எதுக்கெடுத்தாலும் பணத்தையும், நேரத்தையும் அநாவசியமா விரயம் பண்ணுவாங்க. ஒருத்தன் நிலைமையை அவன் இடத்துல இருந்து பார்க்க மாட்டாங்க. வீண் ஜம்பத்துக்காக இவங்க பண்ற செலவ, செலவு செஞ்சுக்கிட்டு வந்து மத்தவங்க பார்க்கனும். அப்படி தப்பி தவறி வர முடியலன்னா, பார்த்த இடத்துல எல்லாம் கேள்வி கேட்டே உயிர எடுக்க வேண்டியது இல்லன்னா முகத்த திருப்பிக்கிட்டு வர்றவங்க போறவங்ககிட்ட இதப் பத்தி நம்ம முன்னாடி நியாயம் கேட்க வேண்டியது. குழந்தைங்க வேற இவங்கிட்ட மாட்டிக்கிட்டு அவஸ்தை படுறாங்க. அவங்க படிப்பு கெடுது. சந்திராவுக்கு நிச்சயதார்த்தம் என்று காவ்யாவை கூட்டிட்டு போய், இன்ஃபெக்ஷன் வந்து ரொம்ப படுத்திட்டா. இந்த தடவ என்னத்த இழுத்துட்டு வரப் போறாளோ!" என்று விளையாடிக் கொண்டிருந்த காவ்யாவைத் தேடினார் சாம்பமூர்த்தி.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு மொத்தம் எத்தனை டேஸ் லீவ் தெரியுமா? மொத்தம் ஃபைவ் டேஸ். நவின் பாட்டி செத்தப்ப அவன் ஃபைவ் டேஸ் தான் லீவ் போட்டான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-2540104850137373197?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/2540104850137373197/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=2540104850137373197' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/2540104850137373197'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/2540104850137373197'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2008/10/18.html' title='மனிதர்கள்'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-3711334779026016978</id><published>2008-09-25T05:59:00.000-07:00</published><updated>2008-10-01T03:42:57.648-07:00</updated><title type='text'>இன்றைய தினத்தில்</title><content type='html'>"அப்புறம்...எப்படி இருக்க? காலேஜ் படிக்கறப்ப பார்த்தது! ஆளே ரொம்ப மாறிட்டே"&lt;br /&gt;தவிர்க்க முடியாத இந்த சம்பிரதாய வைபவங்களே அரை மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. நான்கைந்து வருடங்களுக்கு பிறகு பார்த்ததால் உண்டான மகிழ்ச்சி இருவர் முகத்திலும் தெரிந்தது. அப்பொழுது நரேனின் செல்பேசி ஒலித்தது.&lt;br /&gt;"ஒரு நிமிஷம்டா...வீட்டிலிருந்து அம்மா பண்றாங்க.வீட்டுக்கு போய் ரெண்டு மாசத்துக்கு மேலாகுது" என்று சிரித்துவிட்டு, மொத்தமாக 'முப்பத்தேழு'  ஒரு நிமிடங்கள் பேசினான். &lt;br /&gt;நேரமின்மை காரணமாக மீதமிருந்த சம்பிரதாயங்களை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு ஒரு கைக் குலுக்கலுடன் விடைப் பெற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"எழுந்திருப்பா..சாப்பிட வேணாமா? மணி பதினொன்னு ஆகப் போகுது பாரு!"&lt;br /&gt;இரவு பன்னிரெண்டு முப்பதுக்கு மேல் தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் நரேன். வேலைக்கு சென்ற பிறகு நரேனுக்கு தூங்குவதற்கே நேரம் கிடைப்பதில்லை. அப்படியே நேரம் கிடைத்து தூங்கினாலும், தூங்கிய திருப்தி எழும் பொழுது இருப்பதில்லை.&lt;br /&gt;"அப்பாவும், நீங்களும் சாப்பிட்டாச்சா?" என்று நரேன் சாப்பிட அமரும் பொழுது கடிகாரத்தின் சின்ன முள்ளும், பெரிய முள்ளும் ஒன்றாய் மேல் நோக்கி பார்த்தது.&lt;br /&gt;சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே, நரேனின் செல்பேசி ஒலித்தது.&lt;br /&gt;"ஹலோ..சொல்லுடா. நல்லா இருக்கேன். நீ?"&lt;br /&gt;......&lt;br /&gt;"இல்ல..இப்ப தான் எழுந்துரிச்சி சாப்பிட உட்காருறேன்."&lt;br /&gt;......&lt;br /&gt;"பரவாயில்ல்..சொல்லு. பண்ணாதவன் பண்ணி இருக்க!"&lt;br /&gt;......&lt;br /&gt;"அடப்போடா...நாலு மணிக்கெல்லாம் கிளம்பிடுவேன்."&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-3711334779026016978?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/3711334779026016978/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=3711334779026016978' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/3711334779026016978'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/3711334779026016978'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2008/09/blog-post.html' title='இன்றைய தினத்தில்'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-7611979693090922498</id><published>2008-06-24T04:47:00.000-07:00</published><updated>2008-06-24T06:13:45.582-07:00</updated><title type='text'>கெளரி வீட்டு பஞ்சாங்கம்</title><content type='html'>"எங்க வச்சேள்?"&lt;br /&gt;சோமு ஐயர் தன் வீட்டில் உள்ளவர்களிடம் ஆயிரம் தடவைக்கு மேல் இந்த கேள்வியை கேட்டு விட்டார். ஆனால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. வீட்டு  வாசலில் அமர்ந்திருக்கும் ஊர் தலைவர் முருகேச முதலியாரிடம் என்ன சொல்வது என்று புரியாமல் தவித்தார் ஐயர். இரண்டு நாட்களாக முருகேச முதலியார் ஐயர் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருக்கிறார். &lt;br /&gt;"நம்பிக்கிட்ட புதுசு வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன். புதன்கிழமை வந்துடும்" என்றார் ஐயர்.&lt;br /&gt;"ஆனா.. பெளர்ணமி செவ்வாய்கிழமை தானே!"&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்களுக்கு முன் நடந்த கோயில் திருவிழாவின் போது, "பாப்பானுக்கு புரோகிதமும், செட்டிக்கு வணிகமும் சொல்லி கொடுக்காமலே வந்துடும் அந்த மாதிரி...." என்று ஏதோ மேற்கோள் காட்டி பேசினார் ஆறுமுக கவுண்டர். அங்கிருந்த முருகேச முதலியார், கவுண்டரின் மேற்கோளை மறுத்தார். அதன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாத முடிவில், கடை ஒன்று வைத்து தன்னாலும் வணிகம் செய்ய முடியும் என்று நிருபிப்பதாக சொல்லி விட்டு வந்து விட்டார் முருகேச முதலியார். சொன்னதோடு நில்லாமல் அனைத்து ஏற்பாடுகளையும் துரிதமாக தொடங்கினார். அவரது ஜாதகப் படி வரும் வளர்பிறைக்குள் கடை வைத்தால் முன்னேறுவார் என்றும், அதன் பிறகு இரண்டு வருடங்கள் தொழில் யோகம் இல்லை என்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்டா கணேசா..முதலியாரு செலவு இல்லாம புரோகிதம் படிச்சிருக்கலாம். இன்னும் நாள் மட்டும் தான் குறிக்கல போலிருக்கு. முப்பது குடும்பம் இருக்கிர ஊர்ல அவர் வேற தொழில் ஆரம்பிச்சா நீ என்னடா பண்ணுவா!"&lt;br /&gt;"நீங்க எதுவும் இத பத்தி எல்லாம்  வெளியில பேசாதீங்கம்மா..! நடக்கிறது நடக்கட்டும். பார்த்துக்கலாம்...விசாலம் மதிய உணவை பையனிடம் கொடுத்து அனுப்பிச்சுடு" என்று கணேச செட்டியார் சொல்லி விட்டு கிளம்பி விட்டார். செட்டியார் கிளம்பியவுடன் கையில் சில வெல்ல கட்டிகளுடன் விசாலாட்சி தோட்டத்திற்கு சென்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயரின் மூன்று வயது மகள் கெளரியிடம், "எப்ப வெல்லம் வேணும்னாலும் எங்கிட்ட கேளு" என்றாள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-7611979693090922498?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/7611979693090922498/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=7611979693090922498' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/7611979693090922498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/7611979693090922498'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2008/06/blog-post.html' title='கெளரி வீட்டு பஞ்சாங்கம்'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-5399840829881398323</id><published>2008-02-25T06:48:00.000-08:00</published><updated>2008-02-25T08:48:11.650-08:00</updated><title type='text'>தனிமை</title><content type='html'>ஊரே பூங்குழலி வீட்டில் துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தது. ஆனால் சத்யசீலன் மட்டும் தனியாய் விளக்கும் ஏற்ற மறந்து இருளில் அமர்ந்து இருந்தான். ஏமாற்றமும் அதனால் ஏற்பட்ட எரிச்சலும் சத்யசீலனை பாடாய்படுத்தியது.  தனக்கு நேர்ந்த அவமானத்தை எப்படி கலைவது என்று புரியாமல் தவித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பியது போல, சத்யசீலன் பூங்குழலிக்கு செய்த நல்லதை அவள் கெட்டதாக மாற்றி விட்டிருந்தாள். கெட்டதில் போய் முடிந்தது. பூங்குழலியை உயிருடன் கொளுத்த விரும்பிய சதிகார கூட்டத்திடம் இருந்து, தனி ஒருவனாக போராடி அவளை மீட்டான். ஆனால் பூங்குழலியோ நன்றி மறந்து, தனது முகத்தில் கரி பூசி விட்டதாக புலம்பிக் கொண்டிருந்தான் சத்யசீலன்.   &lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று தன் பின்னால் யாரோ நிற்பது போல் சத்யசீலனிற்கு தோன்றியது. திரும்பி பார்த்த சத்யசீலனிற்கு கோபத்தில் கண்கள் சிவந்தது. குழந்தை முகம் மாறாத பதிமூன்று வயது பூங்குழலி, மன்னிப்புக் கோறும் பாவனையில் சங்கடத்துடன் சத்யசீலனை பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் இங்க வந்த? இங்கிருந்து போ..உன்ன பார்க்கவே பிடிக்கல.." என்று கத்தி விட்டு முகத்தை திருப்பிக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பூங்குழலி சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு, "அண்ணா.." என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னும் போகலையா நீ?"&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணா...என்னை மன்னிச்சுடுங்க. காலையில நீங்க வந்துட்டு போன பிறகு என்னை ஒரு பாழடைஞ்ச அறையில தள்ளி பூட்டிட்டாங்க. அங்க வெளிச்சமே இல்ல. என் கால் மேல எல்லாம் எலி ஏறி ஓடுச்சு. என்னுடைய துணி எல்லாம் போட்டு கொளுத்திட்டாங்க. புருஷன் போனா எல்லாம் போயிடும்னு பாட்டி கூட ஒரு தடவ சொல்லியிருக்காங்க. ரெண்டே ரெண்டு வெள்ளை புடவை மட்டும் கொடுத்து..இவ்வளவு தான்னு சொல்லிட்டாங்க. நெருப்புன்னா எனக்கு பயம். அதிலிருந்து நீங்க காப்பாத்திட்டீங்க. இருட்டுன்னாலும் பயம். அதுவும் தனியா எப்பவும் அந்த இருட்டு அறையில இருக்கனும்னு நினைக்கவே ரொம்ப பயமா இருந்துச்சு. அதனால தான் உத்திரத்தில் புடவையை சுற்றி உயிரை விட்டு விட்டேன்."&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-5399840829881398323?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/5399840829881398323/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=5399840829881398323' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/5399840829881398323'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/5399840829881398323'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2008/02/blog-post.html' title='தனிமை'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-7715701612909384790</id><published>2008-01-14T08:42:00.000-08:00</published><updated>2008-01-14T17:36:51.552-08:00</updated><title type='text'>கி.பி. -1</title><content type='html'>&lt;கிறிஸ்து பிறந்த 1940 வருடங்களுக்கு பிறகு கிருஷ்ணப்பிள்ளை பிறந்தார். நண்பர்களால் செல்லமாக கி.பி. என்றழைக்கப்பட்டார். சாதாரண குடும்பத்தில் பிறந்து சர்க்கார் உத்தியோகத்தில் சேர்ந்து ஓய்வும் பெற்று விட்டார். அவரது தற்போதைய  நிலை குறித்து எவருக்கும் அக்கறை இல்லை எனினும், அக்கறையோடு சேகரித்ததில் கிடைத்த சுவையான தகவல்களின் தோகுப்பு.&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வுலகிலேயே மிகவும் கடினமான செயல் எதுவென்று கேட்டால், அவரவர்களது வயதிற்கேற்ப தனது அனுபவத்தை சொல்வார்கள். உதாரணத்திற்கு பள்ளி பருவத்தில் பள்ளிக்குப் போவது, கல்லூரி பருவத்தில் அழகிய பெண்கள் பாராமுகமாக இருப்பது, இளைஞர் பருவத்தில் வேலைக் கிடைக்காமல் இருப்பது, கல்யாணமானவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருப்பது, முதுமையில் ஒதுக்கப் படுவது என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவையெல்லாம் கிருஷ்ணப்பிள்ளைக்கு குழந்தைத்தனமான செயல்களாக தோன்றின. அவரை பொறுத்தவரை இப்பிரஞ்சத்திலியே கடினமான செயல் அழுகின்ற குழந்தையை சமாளிப்பது தான். அழுகின்ற குழந்தையை தேற்றி சமாதானப்படுத்துவது என்றால் அந்த குழந்தையும், நம்மையும் படைத்த பிரம்மாவிற்கே கைக் கூடாத காரியம். அப்படியிருக்கும் பொழுது, சாமான்ய மனிதர்களான நாம் எம்மாத்திரம் என்பதே கிருஷ்ணப்பிள்ளையின் ஆணித்தரமான வாதம். சேவலின் கூவலைக் கூட காதில் வாங்காமல் தூக்கத்தைத் தொடரலாம். ஆனால் இரவில் குழந்தை வீறிட்டு அழும் இன்னிசை அபாய ஒலி மனிதனை ஒரு உலுக்கு உலுக்கி எழுப்பிவிட்டு விடுகிறது. முதுமையில் தூக்கம் வருவதே அரிது, அப்படியும் தன்னை மீறி கண்ணிழுக்கும் பொழுது குழந்தை கெடுத்து விடுகிறது. ஒன்றிரண்டு நாட்கள் தான் என்றால் கிருஷ்ணப்பிள்ளை பொறுத்திருப்பார். ஆனால் தொடர் ரோதனையாக அல்லவா உள்ளது. ஓய்வு கிடைத்த பிறகும் நிம்மதியாக தூங்க முடியவில்லையே என்று உள்ளுக்குள் மிகவும் சங்கடப்பட்டார். பேத்தி தான் என்றாலும் தனது சுதந்திரத்தில் தலையிடுவதாக கிருஷ்ணப்பிள்ளைக்கு பட்டது. மிகவும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவராய், முதியோர் இல்லத்திற்கு செல்லப் போவதாக தனது மகனிடம் தெரிவித்தார். ஏன் ஏனென்று இரவு பகலாக மாற்றி மாற்றி கேள்விக் கனைகளால் கிருஷ்ணப்பிள்ளையை அவரது குடும்பத்தினர் துளைத்தெடுத்து விட்டனர். சரி போகட்டும் என்று வீட்டிலேயே இருக்க சம்மதித்தால், மகள் அவரது மகனுடன் ஒரு வாரம் தங்குவதாக வந்து சேர்ந்தாள். பாஞ்சஜன்யம் என்ற கிருஷ்ணனின் சங்கை விட பலம்பொருந்திய தொண்டையை பெற்றிருந்தான் கிருஷ்ணப்பிள்ளையின் பேரன். ஒன்றிற்கு ரெண்டா என்ற திகிலுடன் தான் படுத்தார். ஆனால் அன்றைய இரவு அவர் நினைத்தது போல் மோசமில்லை. ஒரு மாபெரும் உண்மையை கண்டுபிடிக்க உதவிய அற்புத இரவாகவே அமைந்தது. ஒற்றுமைக்கு பெயர் போனவர்கள் காக்கைகள் மற்றும் பஞ்ச பாண்டவர்கள் என்று தான் அது நாள் வரை கிருஷ்ணப்பிள்ளை நினைத்திருந்தார். ஆனால் இரவில் ஒரு குழந்தை அழ ஆரம்பித்தவுடன், இன்னொன்றும் சேர்ந்துக் கொள்கிறது. தனது பேரனிடமும், பேத்தியிடமும் காணப்பட்ட தெய்வீக ஒற்றுமையை எண்ணி மெய் சிலிர்த்தார் கிருஷ்ணப்பிள்ளை. கடல், கடல் அலைகள், திமிங்கலம் ஏன் இந்த பிரபஞ்சத்தை விடவும் தனது பொறுமை தான் பெரிது என்ற பெருமை மட்டுமே கிருஷ்ணப்பிள்ளைக்கு மிஞ்சியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-7715701612909384790?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/7715701612909384790/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=7715701612909384790' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/7715701612909384790'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/7715701612909384790'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2008/01/1.html' title='கி.பி. -1'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-4987412555801033111</id><published>2008-01-14T08:41:00.000-08:00</published><updated>2008-01-14T17:01:33.516-08:00</updated><title type='text'>கி.பி. -2</title><content type='html'>எவ்வளவு முயன்றாலும் கிருஷ்ணப்பிள்ளைக்கு நாட்கள் திருப்திக்கரமாக நகர்வதாக இல்லை. புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை எனினும், புத்தகம் உற்ற துணை என்று கேள்விப்பட்டிருக்கார். எப்படிப்பட்ட புத்தங்களை படிக்கலாம் என்று கிருஷ்ணப்பிள்ளை  ஆழ்ந்து யோசித்து, தனது வயதிற்கு ஆன்மீக புத்தகம் தான் சரி என்று முடிவு செய்தார். வீட்டு பரணையிலிருந்து அவர் தந்தை உபயோகித்திருந்த 'அத்வைதம்' என்னும் புத்தகத்தை தூசி தட்டி எடுத்தார். அனைவரும் கடவுள் என்ற அத்வைத கொள்கை கிருஷ்ணப்பிள்ளைக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்த கொள்கையின்படி எல்லாம் கடவுளாக தோன்ற வேண்டும், ஆனால் கிருஷ்ணப்பிள்ளைக்கு தான் மட்டுமே கடவுளென தோன்றியது. கண்ணாடி முன் நின்று கொண்டு தலையை சுற்றி ஏதாவது ஒளிவட்டம் தோன்றுகிறதா என்று அடிக்கடி சோதித்து பார்த்தார். தான் கடவுளாகி விட்டதை யாரிடமாவது சொல்ல வேண்டுமென ஆவல் கிருஷ்ணப்பிள்ளையை வாட்டி எடுத்தது. தனது அலுவலக நண்பர் ஒருவரிடம் தனது மாற்றத்தை சொல்லி விட வேண்டுமென கிளம்பினார். அவரது நண்பர் எது சொன்னாலும் அது சரியாக தானிருக்கும் என கிருஷ்ணப்பிள்ளை எப்பொழுதும் நம்பினார். வழியில் நடுத்தர வயதுடைய ஒருத்தர் தனது பணம் திருடுப் போனதை குறித்து வருத்ததோடு புலம்பினார். அவர் புலம்பும் பொழுது, "கடவுளுக்கு கண்ணும் இல்ல...ஒரு மண்ணும் இல்ல. கடவுள்னு ஒருத்தவன் இருந்திருந்தா எனக்கு இப்படி நடந்திருக்குமா? என்னை கஷ்டப்படுத்தி வேடிக்கை பாக்கிறதுக்கு ஒரு கடவுளா? அதெல்லாம் வெறும் கல்" என்றெல்லாம் கோபத்தில் மண்ணை வாரி இறைத்து திட்டிக் கொண்டிருந்தான். அவன் தன்னை தான் திட்டுவதாக ஆத்திரப்பட்டார் கிருஷ்ணப்பிள்ளை. 'பணத்த பத்திரமா வச்சுக்க துப்பில்லாம என்னை திட்ட வந்துட்டான். கலி காலம். நம்பிக்கை இல்லாம போச்சு' என்று முனறிக் கொண்டே கடந்தார். கிருஷ்ணப்பிள்ளைக்காக அவரது நண்பர் பூங்காவில் காத்திருந்தார். கிருஷ்ணப்பிள்ளைக்கு தற்பெருமை பிடிக்காது.  அதனால் சிறிது நேரம் பொதுவாக பேசி விட்டு, கடவுளை பற்றிய பேச்சை தொடங்கினார். அவரது நண்பர், "கடவுளும், குழந்தையும் ஒன்னு. ரெண்டு பேருக்கும் தான் மனசுல ஒன்னுமே இருக்காது. இந்த சாமியாருங்க, நான் தான் கடவுளுன்னு சொல்றவங்க எல்லாம் தன்னையும் ஏமாத்திக்கிட்டு மத்தவங்களையும் ஏமாத்திக்கிட்டு திரிறாங்க" என்று தெளிவாக கிருஷ்ணப்பிள்ளையின் ஆர்வத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். கிருஷ்ணப்பிள்ளைக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. அவரது நண்பர் சொல்றது உண்மையாக தான் இருக்கும் என சமாதானப்படுத்திக் கொண்டார். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தை இருக்கும் பொழுது ஏன் அனைவரும் கோவிலுக்கு செல்கின்றனர் எனப் பெரிய சந்தேகம் கிருஷ்ணப்பிள்ளைக்கு எழுந்தது. 'தினமும் ராத்திரியில எல்லார் தூக்கத்தையும் கெடுக்கும் என் பேத்தி அப்ப கடவுளா! மத்தவங்கள கஷ்டப்படுத்தி வேடிக்கை பார்க்கிறது தான் கடவுளுக்கும், குழந்தைக்கும் வேலை போலிருக்கு. அப்ப ரெண்டு பேரும் சொன்னதும் உண்ம தான். அப்ப நான் கடவுள் இல்லை. ஏன்னா...நான் யாரையும் கஷ்டப்படுத்துல' என தனது நண்பன் சொன்னதில் இருக்கும் உண்மையை ஊகித்தார் கிருஷ்ணப்பிள்ளை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-4987412555801033111?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/4987412555801033111/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=4987412555801033111' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/4987412555801033111'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/4987412555801033111'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2008/01/2.html' title='கி.பி. -2'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-4452930799638209978</id><published>2008-01-14T08:39:00.000-08:00</published><updated>2008-01-16T06:59:38.097-08:00</updated><title type='text'>கி.பி. -3</title><content type='html'>மதர் தெரசாவின் சேவையை பாராட்டி செய்தி தாளில் ஒரு நினைவு கட்டுரை வெளிவந்திருந்தது. கிருஷ்ணப்பிள்ளை தமது வாழ்க்கையை அந்த புண்ணிய ஆத்மாவோடு ஒப்பிட்டு பார்த்தார். இதுவரை சமூகத்திற்கென ஒரு நல்லது கூட செய்ததில்லை என்ற உண்மை, பெரும் குற்ற உணர்ச்சியாக மாறி கிருஷ்ணப்பிள்ளையை போட்டு வாட்டியது. இனிமேல் தினமும் நாட்டிற்கோ, சமூகத்திற்கோ ஒரு நல்லதாவது செய்து விட வேண்டுமென சபதம் மேற்கொண்டார். அன்று மாலை காலார நடந்துக் கொண்டிருக்கும் பொழுது, சாலையோர மரத்தடியில் நோய்வாய்ப்பட்ட நொண்டி நாய் ஒன்று ஈனஸ்வரத்தில் முனகி கொண்டிருந்தது. நாயின் மீது கிருஷ்ணப்பிள்ளைக்கு பரிதாபம் பொங்கியது. அந்நாயினுடைய ஒருவேளை பசியையாவது போக்கி விட வேண்டுமென்ற நல்லெண்ணத்தில், பக்கத்து கடையிலிருந்து ரொட்டித் துண்டுகள் வாங்கி நாயிற்கு போட்டார். நாய் சாப்பிடும் அழகினை பார்க்க, ஆயிரம் கண்கள் வேண்டுமென நினைத்துக் கொண்டார். கிருஷ்ணப்பிள்ளை தலை கால் புரியாத மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தார். தனது மனிதாபிமான செய்கையை சாலையில் யாராவது கவனித்தார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் பார்க்காதது பெரும் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் நாய் மட்டும் நன்றியோடு வாலாட்டியது. மனநிறைவோடு வீட்டை நோக்கி நடந்தார் கிருஷ்ணப்பிள்ளை. அவரை அந்த நாய் பின் தொடர்ந்தது. நாயும் பின் தொடர்வதை பார்த்து, 'சூ..' என்று விரட்டினார். கல் எடுத்து அடித்தும் பார்த்தார். நாய் எதற்கும் மசியாமல் வீடு வரை வந்து விட்டது. 'இந்த சனியன எங்க பிடிச்சிட்டு வந்தீங்க?' என்று சகதர்மணியிடம் சக்கையாக வாங்கி கட்டிக் கொண்டார். 'சொறி பிடிச்ச நாயால குழந்தைக்கு இன்ஃபெக்'ஷன் கின்ஃபெக்'ஷன் வந்துடப் போகுது. ஏதாவது பண்ணி அத முதல்ல துரத்தி விடுங்க' என்று கிருஷ்ணப்பிள்ளைக்கு அவரது மனைவி கட்டளையிட்டாள். ஏதேதோ செய்துப் பார்த்து நாயிடம் தோற்றார் கிருஷ்ணப்பிள்ளை. பிறகு, ஏதோ யோசனை வந்தவராக கார்ப்பரேஷனுக்கு போன் பண்ணினார். அவர்கள் வந்து நாயை கதற கதற வேனில் அடைத்து அழைத்து சென்றார்கள். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணப்பிள்ளையின் மருமகள், 'அந்த நாயை எப்படியும் கொன்னுடுவாங்க. பாவம்..அது சாகறதுக்கு நீங்க காரணம் ஆயிட்டீங்களே மாமா!' என்று வருத்தப்பட்டாள். கிருஷ்ணப்பிள்ளைக்கு தூக்கி வாரி போட்டது. சேவை புரிந்து புண்ணியம் தேட போய் பாவத்தில் வந்து முடிந்து விட்டதே என்று குழம்பினார். ஏணி வைத்தாலும் மதர் தெரசா அளவுக்கு உயர முடியாது என்று கிருஷ்ணப்பிள்ளைக்கு புரிந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-4452930799638209978?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/4452930799638209978/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=4452930799638209978' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/4452930799638209978'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/4452930799638209978'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2008/01/3.html' title='கி.பி. -3'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-8286291831885745950</id><published>2008-01-14T08:38:00.000-08:00</published><updated>2008-01-14T17:23:53.735-08:00</updated><title type='text'>கி.பி. -4</title><content type='html'>வயதானதால் கிருஷ்ணப்பிள்ளைக்கு மறதி அதிகமாகி விட்டதென வருவோர் போவோர்களிடம் அங்கலாய்த்து கொண்டாள் அவரது மனைவி. கிருஷ்ணப்பிள்ளைக்கு ஆத்திரம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. 'என்ன பெருசா மறதிய கண்டுட்ட? இன்னோர் தடவ அப்படி சொன்னா பாரேன்!' என்று கிருஷ்ணப்பிள்ளை கோபித்துக் கொண்டார். 'ஆயிரந்தடவ சொல்வேன்' என்று பதில் வந்தது. நல்லவேளையாக வாக்குவாதம் முற்றி போராக மாறாமல் போட்டியில் முடிந்தது. 'நல்லா கேட்டுக்கோங்க...பச்ச மொளகா வேண்டாம். காஞ்ச மொளகா 50 கிராம் வேணும். தலைக்கு தேங்க எண்ணெய் வேணும். சமைக்கறதுக்கு நல்லெண்ணெய் ஒரு லிட்டர் வேண்டாம். கொஞ்சமா வீட்டுல துவரம்பயிர் இருக்கிறதால, கடலப்பயிர் வேண்டாம். துவரம்பயிர் மட்டும் 500 கிராம் வாங்கிட்டு வாங்க. துணி தோய்க்கிற சோப்பு பெருசு ஒன்னு, குளிக்கிற சோப்பு நாலு. பெருங்காயம் சின்ன வெங்காயம் வேணாம். பெரிய வெங்காயம் கால் கிலோ. ஒரு லிட்டர் பால். குழந்தைக்கு பேபி ஷாம்பூ, சோப்பு. அப்படியே உங்களுக்கு எதாவது தேவன்னா வாங்கிட்டு வந்துடுங்க. இன்னொரு தடவ சொல்லட்டுமா?' என்று கேட்டாள் கிருஷ்ணப்பிள்ளையின் மனைவி. வீராப்பாக எதுவும் சொல்லாமல் வீம்பாக வெளியேறினார். எப்படியும் தோற்று விடுவார் என்பது கிருஷ்ணப்பிள்ளையின் மனைவியது எண்ணம். ஏனென்றால் முன்ன பின்ன கடைக்கு சென்று பழக்கம் இல்லாதவர். கடைக்கு செல்லும் வழியில், பலத்த யோசனையில் ஆழ்ந்தார் கிருஷ்ணப்பிள்ளை. கல்யாணமான புதிதில், அவரது மனைவி 'களத்தூர் கண்ணம்மா' என்ற புது படம் வந்திருப்பதாக சொல்லி அழைத்தாள். சமய சந்தர்ப்பங்கள் கூடி வராததால் அவளது விருப்பத்தை கிருஷ்ணப்பிள்ளையால் அன்று நிறைவேற்ற முடியாமல் போனது. கிருஷ்ணப்பிள்ளை அந்தப் படத்தின் குறுந்தகட்டினை வாங்கி தன் மனைவியின் கையில் வைத்து ஆச்சரியப்பட வைக்க வேண்டுமென விரும்பினார். கிருஷ்ணப்பிள்ளையின் மனைவியோட தங்கை மகள், அதே ஊரின் மற்றொரு எல்லையில் வசிக்கிறாள். அவரது மனைவிக்கு தங்கை மகளை மிகவும் பிடிக்கும். அத்தகைய சிறப்பு வாய்ந்த மைத்துனி மகளுக்கு மறுதினம் பிறந்த நாள் என்று ஞாபகம் வந்தது. 'கோயிலுக்கு போகலாம்' என்று கூறி, மகள் வீட்டுக்கு மனைவியை அழைத்துக் கொண்டு போய் அசத்தலாம் என்று திட்டமிட்டுக் கொண்டார். வெறும் கையோடு போனால் நல்லாயிருக்குமா? அதனால் மைத்துனி மகளுக்கு ஒரு புடவை எடுக்க வேண்டும் என நிச்சயித்துக் கொண்டார். இப்படி யோசித்துக் கொண்டே மளிகைக் கடைக்கு வந்து சேர்ந்தார். பணம் எடுத்து வரவில்லை என்று அப்பொழுது தான் ஞாபகம் வந்தது. வீட்டிற்குப் போய் பணம் எடுத்தால், மனைவி வென்றதாகி விடும். அவளோ படிக்காதவள். ஞாபகம் இல்லாததையும், மறதியையும் ஒன்றென நினைத்து குழப்பிக் கொள்வாள். மளிகை கடை தெரிந்த கடை தான்.  வேண்டியதை சொல்லி, கடைப் பையனையே எடுத்துக் கொண்டு போய் வீட்டில் தர சொல்லலாம். மனைவியும் பணம் தந்து விடுவாள். சிறிது நேரம் பூங்காவில் ஓய்வெடுத்து விட்டு, பிறகு வீட்டிற்கு சென்று பணத்தை எடுத்து குறுந்தகடு மற்றும் புடவையினை வாங்கிக் கொள்ளலாம் என்று நிலைமைக்கு தகுந்தவாறு யோசனையை மாற்றினார். சொன்ன பொருட்கள் எல்லாம் சொன்னப்படி வந்ததில் கிருஷ்ணப்பிள்ளையின் மனைவிக்கு மிகுந்த ஆச்சரியம். கிருஷ்ணப்பிள்ளைக்கு மறதியோ என்று சந்தேகப்பட்டதை எண்ணி வருந்தினாள். பூங்காவில் இருந்து வேகமாக வந்த கிருஷ்ணப்பிள்ளை, சட்டையை அவிழ்த்து விட்டு படுத்துக் கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டார். பாவம், கிருஷ்ணப்பிள்ளைக்கு குறுந்தகடு மற்றும் புடவை பற்றி மறந்து விட்டது. இல்லை..இல்லை.. ஞாபகம் இல்லாமல் போய் விட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-8286291831885745950?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/8286291831885745950/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=8286291831885745950' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/8286291831885745950'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/8286291831885745950'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2008/01/4.html' title='கி.பி. -4'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-5396386642725495915</id><published>2008-01-14T08:36:00.000-08:00</published><updated>2008-01-14T23:23:50.100-08:00</updated><title type='text'>கி.பி. -5</title><content type='html'>கிருஷ்ணப்பிள்ளை, அவரது மனைவி, அவரது மருமகள் மூவரும் தொலைக்காட்சியில் ஆர்வமாக மதிய உணவினையும் மறந்து தொடர் ஒன்றினை பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களை தவிர, நான்காவதாக ஒருவரும் யாருக்கும் தெரியாமல் தொலைக்காட்சியை பார்த்தார். அது தொட்டிலில் இருந்த கிருஷ்ணப்பிள்ளையின் பேத்தி. கால்களால் நெம்பி நெம்பி தலையை மட்டும் வெளியில் நீட்டி பார்த்துக் கொண்டிருந்தது. கருவில் இருக்கும் பொழுதே அத்தொடரின் கதாநாயகியோட வேதனையும், போராட்டமும் குழந்தைக்குத் தெரியும். பிரசவத்திற்காக மருத்துவமனையில் இருந்த பொழுது கூட, அறையில் இருந்த தொலைக்காட்சியில் கிருஷ்ணப்பிள்ளையின் மருமகள் விடாமல் தொடரினைப் பார்த்தாள். தொடரினால் ஏற்பட்ட பாதிப்புகள் குழந்தையை சென்று அடைந்தன. ஒரு பெண்ணின் மனம் மற்றொரு பெண்ணிற்கு தான் புரியும் என்பதற்கேற்ப மருத்துவர் பிரசவ தேதி செவ்வாய்க்கிழமை என்று குறிப்பிட்டு இருந்தும், தாயின் மனதை புரிந்து ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே கருவிலிருந்து வெளிநடப்பு செய்தது குழந்தை. அத்தகைய குழந்தை தொட்டிலில் இருந்து தலையை நீட்டி தொடரினை பார்த்தது என்பது கற்பனை கலக்காத அப்பட்டமான உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;'ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு தனி திறமை இருக்கும். உனக்கும் இருக்கும். அது என்னென்னு உனக்குள்ள தேடு' என்று கதாநாயகி கதாநாயகனுக்கு அறிவுறைத்தாள். உடனே விளம்பரங்கள் வந்தன. பல நிமிடங்களுக்கு பின் மீண்டும் தொடர் தோன்றி, கதாநாயகனின் முகத்தை பல்வேறு கோணங்களில் காட்டி விட்டு முடித்து விட்டனர். பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணப்பிள்ளைக்கு பெருங்கோபம் வந்து விட்டது. 'இன்னிக்கு என்ன போட்டுட்டானுங்க பெருசா.. இதுல ஆயிரம் விளம்பரம் வேற நடுவுல' என்று புலம்பிக் கொண்டு வேகமாக எழுந்தார். ஆனால், இந்த கோபத்தை எல்லாம் மறந்து நாளைக்கும் பார்ப்பார். மதிய உணவினை முடித்து விட்டு படுத்தால் தூக்கம் வரவில்லை. கதாநாயகி சொன்னது காதில் கேட்டது. பள்ளி, கல்லூரி, கல்யாணம், வேலை, ஓய்வு- இதில் எங்கே தனி திறமை இருக்கிறது என்று யோசிக்களானார். சிறு வயதில் நீச்சலில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். கிணறு, கால்வாய், குளம்,ஆறு, கடல் என்று ஒன்றையும் விடுவதில்லை. அதற்காக பல பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றிருக்கார். நீச்சல் தான் தனது தனி திறமை என்ற நினைப்பிலேயே தூங்கி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை ஆறு மணிக்கு பக்கத்து வீட்டம்மாள் அழுதுக் கொண்டே வந்தாள். 'அம்மா...என் பையன் கிணத்துல விழுந்துட்டானே! நான் என்ன பண்ணுவேன்? எனக்கு பயமா இருக்கு' என்று கிருஷ்ணப்பிள்ளையின் மனைவியை கட்டிக் கொண்டு அழுதாள். தூங்கி கொண்டிருந்தவரின் காதில் இவையெல்லாம் விழுந்தது. கிருஷ்ணப்பிள்ளை எழுந்து மின்னல் வேகத்தில் ஓடி, சுவர் ஏறி குதித்து, பக்கத்து வீட்டு கிணற்றை எட்டி பார்த்தார். பாதி கிணறு தான் தெரிந்தது. மீதி இருட்டாக இருந்தது. மூக்கு கண்ணாடி எடுத்து வர மறந்து விட்டார். பையனோட உயிர் தான் முக்கியம் என்று எதுவும் யோசிக்காமல் குதித்து விட்டார். உடம்பெல்லாம் ஒரே வலி. மெதுவாக கண்ணை திறந்தால், மருத்துவமனையில் இருப்பது புரிந்தது. 'அந்த பையன் எப்படியிருக்கான்?' என்று மனைவியிடம் கேட்டார் கிருஷ்ணப்பிள்ளை. 'அவனுக்கு என்ன! நல்லா தான் இருக்கான்' என்றாள் கோபமாக. அருகிலிருந்த மகன் குனிந்து, 'ஏம்ப்பா இப்படி இருக்கீங்க? அவன் ஏதோ ஒரு ஊர்ல, ஹாஸ்டலுல இருக்கிற கிணத்துல விழுந்ததற்காக, நீங்க காப்பத்துறேன்னு இங்க விழுந்து இப்படி ஹாஸ்பிட்டலுல இருக்கீங்களே! அதுவும் அந்த கிணத்துல தண்ணியும் இல்ல. சும்மா வீட்ல இருக்கலாம்னு இல்லாம, இப்படி நீங்களும் கஷ்டப்பட்டுக்கிட்டு, கூட இருக்கிற எங்களையும் கஷ்டப்படுத்துறீங்களே!?' என்று குரலில் கோபத்தை காட்டாமல், சாந்தமாக கேட்டான். இதுவே கிருஷ்ணப்பிள்ளை பிறந்த கிராமமாக இருந்திருந்தால், பக்கத்து வீட்டு பையன் எங்கு படிக்கிறான் என்றும், கிணற்று நீர் பற்றியும் தெரிந்திருக்கும். இதெல்லாம் நகரத்திலேயே பிறந்து வளர்ந்த கிருஷ்ணப்பிள்ளையின் மகனுக்கு எப்படித் தெரியும்?&lt;br /&gt;&lt;br /&gt;அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை. கிருஷ்ணப்பிள்ளை எது செய்தாலும் ஏறுக்கு மாறாகவே எல்லாம் நிகழ்கின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-5396386642725495915?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/5396386642725495915/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=5396386642725495915' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/5396386642725495915'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/5396386642725495915'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2008/01/5.html' title='கி.பி. -5'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-3730723461999905576</id><published>2008-01-02T19:38:00.000-08:00</published><updated>2008-01-02T22:26:16.969-08:00</updated><title type='text'>அவன் அமெரிக்கா போறான்</title><content type='html'>நரேந்திரன் வீட்டிற்கு வந்ததும் அவன் கண்களில் அந்த பத்திரிக்கை விழுந்தது. அவனது பால்ய நண்பன் தயாளனின் திருமண அழைப்பிதழ் அது. நரேந்திரனுக்கே தாமதமாக தான் கல்யாணம் நடந்தது. சந்நியாசம் தான் தனக்கு என்று முடிவு செய்து கவலைப்பட்டு கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக கல்யாணம் ஆனது. கல்யாணம் ஆகி எட்டு வருடங்கள் முடிந்த நிலையில், சந்நியாசி ஆகாமல் போய் விட்டோமே என்று கவலைப்பட்டான். இரண்டு விஷயங்களில் அனைவரையும் விட மிக திறமைசாலியாக இருந்தான். ஒன்று மற்றவர்களுக்கு நடந்த நல்லதை நினைத்து புலம்புவது. மற்றொன்று தனக்கு அந்த நல்லது நடக்கவில்லையே என்று கவலைப்படுவது. எப்படியும் தனது சந்நியாசி ஆகும் கனவை தயாளனாவது நிறைவேற்றுவான் என்ற நரேந்திரன் நம்பினான்.&lt;br /&gt;'இப்ப இவன் கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போறான்? படிப்பும் ஸ்கூல் தாண்டல. இன்னும் அதே பழைய விவசாயத்தையே தான் பண்ணிக்கிட்டிருக்கான். அறிவு கெட்டவன்....மரியாதையும் தெரியல. நேர்ல வந்து கூப்பிட்டிருந்தாலாவது போறத பத்தி நினைச்சிருப்பேன்' என்று பத்திரிக்கையை முழுவதுமாக பார்க்காமலேயே வீசி விட்டான் நரேந்திரன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் காலையில் ஆறு மணிக்கெல்லாம் நரேந்திரன் வீட்டு வாசலில் தயாளன் வந்து நின்றான். கதவை திறந்த நரேந்திரனின் மனைவி, நரேந்திரனிடம் செய்தியை சொல்லி எழுப்பி விட்டாள். தூக்க கலக்கத்தில் எழுந்து வந்த நரேந்தி்ரனுக்கு, வாசலில் தலை சொறிந்தவாறு திரும்பி நின்றுக் கொண்டிருந்த தயாளனை பார்த்ததும் கோபம் வந்து விட்டது.&lt;br /&gt;'கல்யாணத்துக்கு பணம் கடனா வாங்க வந்திருக்கான் போலிருக்கு...இவ வேற ஊர்ல இல்லன்னு சொல்லி அனுப்பாமா....' என்று நினைத்துக் கொண்டே,"வா...தயாளு. ஏன் நிக்கிற? உள்ள வந்து உட்காரு" என்று முகம் முழுவதும் பல்லாக வரவேற்றான். நரேந்திரனை பார்த்து புன்னகைத்தவாறே உட்கார்ந்த தயாளனின் கண்களில் அவனது திருமண அழைப்பிதழ் விழுந்தது.&lt;br /&gt;"அடாட... பத்திரிக்கை வந்துடுச்சா? நீ ஆபீஸ் போறதுக்கு முன்னாடி நேர்ல பார்த்து கூப்பிடலாம்னு தான் காலையிலியே வந்தேன். டைரியில இருந்த மத்தவங்க அட்ரசோடு உன் அட்ரசையும் சேர்த்து அம்மா அனுப்பிட்டாங்க போலிருக்கு" என்றான் தயாளன்.&lt;br /&gt;"பரவாயில்ல...இதுல என்னயிருக்கு" என்று சொல்லி விட்டு,'சரியான தொல்லை...பணமும் உடனடியா ஏற்பாடு பண்ண முடியாது. சாயந்திரம் தான் கிடைக்கும். அதுவரைக்கும் இங்கயே சாப்பிட்டு வேற உயிர எடுப்பான்' என்று நினைத்தவாறே சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி தயாளனை அனுப்பலாம் என நரேந்திரன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவன் வீட்டு வாசலில் கார் ஒன்று வந்து நின்றது.&lt;br /&gt;"எப்பவும் இப்படி தான் யாராவது உதவி கேட்டு வந்து தொந்தரவு செஞ்சுட்டே இருப்பாங்க. என் சூழ்நிலைய சொன்னா கூட புரிஞ்சுக்க மாட்டாங்க. சரி, நான் அனுப்பி வச்சுட்டு வர்றேன்" என்று எழுந்தான் நரேந்திரன். யாராவது அட்ரஸ் கேட்க வந்திருப்பாங்க, ஆங்கிலத்திலேயே பேசி தயாளனை பயமுறுத்தனும் என்று நரேந்திரன் எண்ணிய பொழுது, காரில் இருந்து வெளிநாட்டுக்கார பெண் ஒருத்தி இறங்கினாள். நரேந்திரனுக்கு படிக்காதவர்களை பார்த்தால் தான் ஆங்கிலம் வரும். வெளிநாட்டு பெண் நரேந்திரனை பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்.&lt;br /&gt;'நீங்க யாரு?' என்பதற்கான ஆங்கில வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்தான் நரேந்திரன்.&lt;br /&gt;"இவள தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். பத்திரிக்கையில் பெயர் படிச்சிருப்பியே..அர்லீன். அமெரிக்காவுல கம்ப்யூட்டர்ல பெரிய வேல பார்க்கிறா. நீ இருக்கியா, இல்லயான்னு தெரிஞ்சுக்க கார தெரு முனையிலேயே விட்டுட்டு நான் நடந்து வந்துட்டேன்" என்றான் தயாளன்.&lt;br /&gt;கார் ட்ரைவர் இரண்டு கூடை நிறைய பழங்களும், காய்கறிகளும் எடுத்துக் கொண்டு போய் வீட்டிற்குள் வைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"எப்படி?"&lt;br /&gt;"டூரிஸ்ட்டா வந்த அர்லீனுக்கு என்னை பிடிச்சிடிச்சு" என்று சொல்லி விட்டு அர்லீனைப் பார்த்து சிரித்தான் தயாளன்.&lt;br /&gt;'எட்டு வருஷத்துக்கு முன்னாடி நான் எந்த டூரிஸ்ட் கண்ணிலும் படாம போயிட்டேனே!'&lt;br /&gt;"ஆனா அது உண்மை இல்ல" என்று சிரிப்பை நிறுத்தி விட்டு, "உண்மைய சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. அதனால எல்லார்கிட்டயும் அப்படி சொல்லியிருக்கோம்" என்று மீண்டும் சிரித்தான் தயாளன். நரேந்திரனுக்கு கோபம் வந்தது. ஆனால் எப்பவும் போல் வெளிக்காட்டாமல், "எங்கிட்டயாச்சும் சொல்லுவியா?" என்றான்.&lt;br /&gt;"உங்கிட்ட சொல்லாமலா? ஆனா நீயும் நம்புவியான்னு தான் சந்தேகமா இருக்கு."&lt;br /&gt;"ப்ச்...நான் உன்ன நம்பாம இருப்பனா?" என்று சொல்லி விட்டு, 'சாவடிக்காம சொல்ல மாட்டான் போலிருக்கு' என்று மனதிற்குள் திட்டினான் நரேந்திரன்.&lt;br /&gt;&lt;br /&gt;"லாரில ட்ராக்டர் மோதி மூனு மாசத்துக்கு முன்னாடி ஹாஸ்பிட்டலுல இருந்தேன் ஞாபகமிருக்கா? பிழைக்க மாட்டேன்னு எல்லாருக்கும் சொல்லியே அனுப்பிச்சிட்டாங்க. அப்ப நான் மூனு நாள் கோமாவுல இருந்தேன். அது தெளிஞ்சவுடன் ஆப்ரேஷன் பண்ணாங்க. அப்ப எனக்கு ஏதோ சத்தம் கேட்டுச்சு. என் உடம்புல இருந்து நான் வெளியே வந்துட்டேன். எங்கயோ மிதக்கிற மாதிரி இருந்துச்சு. கருப்பான ஒரு பைப்புக்குள்ள கொஞ்ச நேரம் போயிட்டேயிருந்தேன், அப்புறம் சுரியன் மாதிரி ஏதோ ரொம்ப வெளிச்சமானா இடம் வந்துச்சு. ஆனா அது கண்ணெல்லாம் கூசல. எங்கப்பா அங்க நிக்கிறாரு. 'உனக்கு இன்னும் நேரம் வரல. நீ போ'ன்னு என்னை திருப்பி அனுப்பி வச்சுட்டார். திரும்பி கருப்பு பைப்புக்குள்ள நடந்து வரும் பொழுது அர்லீன பார்த்தேன். இப்ப இருக்கிறத விட ரொம்ப அழகா இருந்தா. அவ ஏதோ கேட்டா, நானும் என்னமோ சொன்னேன். திரும்பி நான் ஹாஸ்பிட்டலுக்கு வந்து என் உடம்புக்குள்ள போயிட்டேன்.&lt;br /&gt;நினைவு வந்தவுடனே நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருந்தது. நானும் அதை கனவுனே முடிவு பண்ணிட்டேன். செத்து போன அப்பாவ பார்த்தன்னு சொன்ன யாராவது நம்புவாங்களா?திடீரென்னு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி இவ எங்க வீட்டு வாசல்ல நிக்கிறா. கனவுல பார்த்த பொண்ணாச்சேன்னு எனக்கு ரொம்ப ஆச்சரியம்.&lt;br /&gt;இவளுக்கு மூளையில ரத்தம் போகாம அடச்சிக்கிச்சாம். ஆப்ரேஷன் பண்றப்ப இவளுக்கும் அதே மாதிரியே சத்தம் கேட்டிருக்கு. இவளும் செத்துப் போன அவங்க பாட்டிய பாத்திருக்கா. வர்றப்ப என்ன பத்தியும், என்னோட ஊர பத்தியும் எல்லாம் கேட்டாளாம். ஆனா எனக்கு பேசினத பத்தி எல்லாம் ஞாபகமில்ல. இந்த மாதிரி செத்து பிழைச்சவங்க அனுபவத்தையெல்லாம் வெளிநாட்டுல மும்மரமா ஆராய்ச்சி செய்றாங்களாம். அதுக்கு பெயர் கூட என்னம்மோ சொன்னியே!" என்று அர்லீனைப் பார்த்தான் தயாளன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவுட் ஆஃப் பாடி எக்ஸ்பீரியன்ஸ் (OOBE - Out Of Body Experience)" என்றாள் அர்லீன்.&lt;br /&gt;நரேந்திரனுக்கு வியப்பாக இருந்தது. ஆனால் வியப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "ஆங்... நான் கூட இத பத்தி படிச்சிருக்கேன். சரி, இவங்க பேசுறது உனக்கு புரியுதா?" என்று கேட்டான்.&lt;br /&gt;"கொஞ்சம் புரியும். கொஞ்சம் நானே புரிஞ்சுப்பேன். கொஞ்சம் சைகையில புரிய வைப்பா. ரொம்ப மெதுவா குழந்தக்கிட்ட பேசுற மாதிரி தான் பேசுவா. நான் இங்கிலீஷ் கத்துக்கிறேன். அவளுக்கு நான் தமிழ் சொல்லி தர்றேன்" என்று சிரித்தான் தயாளன்.&lt;br /&gt;"நீ எப்படி கிராமத்துல விவசாயமே பண்ணிக்கிட்டு இருக்க போறியா?"&lt;br /&gt;"இல்ல..நானும் அம்மாவும் இவக் கூட அவங்க ஊருக்கு போயிடப் போறோம். நம்ம வழக்கப் படி இங்க ஒரு கல்யாணம் பண்ணிட்டு, அங்க போய் அவளோட பெத்தவங்க முன்னாடி அவங்க வழக்கப் படி இன்னொரு கல்யாணம் பண்ணப் போறோம். இவங்களுக்கும் அங்க நிறைய நிலம் இருக்காம். அப்படியே அத நான் பார்த்துப்பேன்."&lt;br /&gt;'ச்சே...கொடுத்து வச்சவன். ஆக்சிடென்ட்ல போவ கிடந்தவனுக்கு இப்படியொரு வாழ்வு.'&lt;br /&gt;&lt;br /&gt;தயாளன் விடை பெற்றுக் கொண்டு கிளம்பும் பொழுது, அர்லீன் அவனிடம் ஏதோ ரகசியமாக கேட்டாள். தயாளனும் மெல்லிய குரலில் அவளுக்கு பதிலளித்தான். அர்லீன் திரும்பி நரேந்திரனைப் பார்த்து, "நீங்க அமெரிக்கா வந்தா, எங்க வீட்டுக்கு...."என்று திக்கி தயாளனைப் பார்த்தாள்.&lt;br /&gt;"கண்டிப்பா வரனும்."&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-3730723461999905576?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/3730723461999905576/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=3730723461999905576' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/3730723461999905576'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/3730723461999905576'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2008/01/blog-post.html' title='அவன் அமெரிக்கா போறான்'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-1512370952019041505</id><published>2007-12-28T03:09:00.000-08:00</published><updated>2007-12-29T22:33:43.685-08:00</updated><title type='text'>சிவனும் சிவனடியாரும்</title><content type='html'>சுந்தரமூர்த்தி அர்த்த சாம பூசையை முடித்து விட்டு, கருவறையினை மூடும் பொழுது சிவலிங்கம் ஆடுவது போலிருந்தது. தூக்க கலக்கத்தில் இருக்கும் பொழுது, எப்பொழுதும் அவர் கண்களுக்கு அப்படி தான் தெரியும்.&lt;br /&gt;"சுந்தரமூர்த்தி!!"&lt;br /&gt;'வீட்டுக்கு நேரமாகுது. இப்ப போய் ஏதோ ஏதோ தோனுது..' என்று பூட்டுவதை துரிதமாக்கினார்.&lt;br /&gt;"உனக்கு த்ரேதா யுகத்தில் கொடுத்த வாக்கு படி, உனக்கு காட்சி கொடுக்க வந்திருக்கேன். அவசரமாக எங்கே செல்கிறாய் சுந்தரமூர்த்தி?"&lt;br /&gt;சுந்தரமூர்த்தி சிறிது நேரம் கண்ணை கசக்கி கொண்டு சிவனே என்று பார்த்துக் கொண்டிருந்தார். கதவு வழியாக கங்கை நீர் வந்து சுந்தரமூர்த்தியின் காலை நனைத்தது. எல்லாம் உண்மை தானோ என்று பதறி கதவை வேகமாக திறந்து சாஷ்டாங்கமாக சிவனாரின் காலில் விழுந்தார் சுந்தரமூர்த்தி.&lt;br /&gt;பயபக்தியுடன் எழுந்து," அனைவரும் நல்லா இருக்காங்களா?" என்று விசாரித்தார் சுந்தரமூர்த்தி.&lt;br /&gt;"அனைவரும் என்றால்?" என்று கேட்டு சிரித்தார் பெருமான்.&lt;br /&gt;சிறிது நேரம் யோசித்து விட்டு, "தாங்கள், லோக மாதாவான அம்பாள், சிவக்குமாரர்கள், சிவ கணங்கள்" என்று இழுத்தார்.&lt;br /&gt;"அனைவரும் நலம். உன் நலம் எப்படி?"&lt;br /&gt;"ஈசுவரனான தங்கள் புண்ணியத்தில் நாங்கள் அனைவரும் நலம். ஆனால்..."என்று தொடராமல் நிறுத்தி விட்டார் சுந்தரமூர்த்தி.&lt;br /&gt;"ஆனால்?"&lt;br /&gt;"எப்பொழுதையும் விட தற்போது மக்களின் துன்பம் அதிகரித்து விட்டது. தாங்கள் மனம் வைத்தால் அவையனைத்தையும் தீர்த்து விடலாம்."&lt;br /&gt;"ஆனால் அவையெல்லாம் அவர்களின் சென்ற பிறவி வினையின் தொடர்ச்சி. நான் குறுக்கிட முடியாது.உனக்கு ஏதாவது வேண்டும் என்றால் கேள்."&lt;br /&gt;"தாங்களும் சாதாரண மனிதர் போல் பேசலாமா?"&lt;br /&gt;"அது..சொன்னால் உனக்கு புரியாதே! நீ என் இடத்திற்கு வந்து பார்த்தால் தான் என் நிலைமை உனக்கு புரியும். வேண்டுமானால் இன்று நீயும் என்னுடன் சிவலோகம் வா. இல்லையென்றால் நீயும் நாத்திகனாகி விடப் போகிறாய்."&lt;br /&gt;"எனது வீட்டில் தேடுவார்களே!"&lt;br /&gt;சிவனார் சிறிது நேரம் யோசித்து விட்டு, "சரி, நான் உன் வீட்டிற்கு செல்கிறேன். நீ சிவலோகம் செல். விடியும் முன் நாம் இருவரும் மீண்டும் மாறி விடலாம்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவன் வேடத்தில் சுந்தரமூர்த்தி சிவலோகத்திற்கு சென்றார். சிவலோகம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அறுபதாயிரம் வருடங்களுக்கு பிறகு பிறக்கப் போகிறவர்களுக்கு தலை எழுத்தினை எழுதிக் கொண்டிருந்தனர். நான்கு முகம் கொண்ட பிரம்மா எழுத்து பணிக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தார். சிவனைப் பார்த்தவுடன் மரியாதை நிமித்தமாக எழுந்து புன்னகை புரிந்தார். சுந்தரமூர்த்தியும் பதிலுக்கு சிரித்து வைத்தார். சுந்தரமூர்த்தி பக்கமாக நாராயணன் வேகமாக வந்தார்.&lt;br /&gt;"நீங்கள் வரம் கொடுத்த அசுரனை நான் பதினேழாவது அவதாரத்தில் சிவ பக்தனாக வந்து அழிக்கனும் என அனைவரும் பிரியப்படுகின்றனர். தங்களிடம் நான்முகன் இது பற்றி பேசினாரா?"&lt;br /&gt;"பூலோகத்தில் தற்போது நிறைய பிரச்சனை நிலவுகிறதே!" என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டார் சுந்தரமூர்த்தி.&lt;br /&gt;"ஆமாம்..நான் கல்கி அவதாரம் எடுக்கும் சமயம் வந்து விட்டது போலிருக்கு."&lt;br /&gt;"ஆனால் அசுரர்கள் என்று யாரும் இல்லையே! தாங்கள் அவதரித்து என்ன செய்வீர்கள்?" என்று தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தினை கேட்டார் சுந்தரமூர்த்தி.&lt;br /&gt;"தங்களின் சாபம் காரணமாக சிவ கணம் ஒன்று பூலோகத்தில் பிறக்கப் போகிறதே! அப்படி தானே நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் நாம் கலந்தாலோசித்து எழுதினோம். அந்த அசுரனின் அட்டூழியம் எல்லை மீறும் பொழுது நாம் அவனை அழித்து உலகினை காப்போம்."&lt;br /&gt;'அடப்பாவமே! இனிமே ஒரு அசுரன் வேறு பிறந்து அட்டூழியம் பண்ணுவானா?'&lt;br /&gt;&lt;br /&gt;சிவன் சுந்தரமூர்த்தியாக  மனித உருவெடுத்து வீட்டிற்குள் நுழைந்தார். வீட்டில் ஒரு நிசப்தம் நிலவியது. எப்பொழுதும் சத்தமாக இருக்கும் வீடு அமைதியாக இருந்தால், சின்னவன் ஏதாவது தவறு புரிந்திருப்பான் என்பது அந்த வீட்டின் எழுதப்படாத விதி. அதற்கு தகுந்தாற்போல், சின்னவன் காலில் இரத்த கறையுடன் கட்டு இருந்தது.&lt;br /&gt;"என்னடா இது?" என்று சுந்தரமூர்த்தியாய் முழுவதும் மாறின சிவனார் அதட்டலான குரலில் கேட்டார்.&lt;br /&gt;"விளையாடுறப்ப அடிப் பட்டுடிச்சு."&lt;br /&gt;"படிக்காம ஏன் விளையாட போன?"&lt;br /&gt;"விளையாடிட்டு வந்து படிச்சா நல்லதுன்னு மெடிக்கல் ரிப்போர்ட் சொல்லுது. அப்ப தான் மூளை சுறுசுறுப்பா இருக்குமாம். மண்ணுல விளையாடுற பசங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகுதாம்."&lt;br /&gt;"தப்பு செஞ்சுட்டு அதுக்கு வியாக்கியானம் வேறு தர்றியா?" என்று நெற்றிக் கண் திறக்காத குறையாக கேட்டார்.&lt;br /&gt;"நான் சொல்றதுல இருக்கிற தாத்பரியத்த புரிஞ்சிக்கோங்க. கருவறைக்குள்ள சிவனை பார்த்தால் சிவன், கல்லை பார்த்தால் கல். அந்த மாதிரி நீங்க கொஞ்சம் என் நிலையில் இருந்து யோசியுங்க."&lt;br /&gt;'என்ன ராசியோ தெரியல...எனக்கு சின்ன பையனா யார் வந்தாலும், புத்தி சொல்றதிலியே குறியா இருக்காங்க.'&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-1512370952019041505?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/1512370952019041505/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=1512370952019041505' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/1512370952019041505'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/1512370952019041505'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2007/12/blog-post_28.html' title='சிவனும் சிவனடியாரும்'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-5296826301665148741</id><published>2007-12-19T21:53:00.000-08:00</published><updated>2007-12-26T06:57:31.105-08:00</updated><title type='text'>எதிர்கரை</title><content type='html'>"அண்ணா தூங்கிட்டியா?"&lt;br /&gt;கண்களும், நினைவுகளும் மெல்ல சுருங்கி புதிய உலகத்தின் வாசற்படியில் கால் வைக்கப் போகும் பொழுது, பட்டென்று கார்த்திக்கை அவன் தங்கையின் குரல் இழுத்து வந்து விட்டது. இதே போன்ற சூழ்நிலையில், பெற்றோர் எழுப்பியிருந்தால் கார்த்திக் முறைத்தவுடன் அங்கிருந்து நகர்ந்துக் கொள்வார்கள். ஆனால் தங்கையை முறைத்தால், தலை முடியை பிடித்துக் கொண்டு,'என்னடா முறைக்கிற!' என்று கொட்ட ஆரம்பித்து விடுவாள். கண்ணை கசக்கிக் கொண்டே, என்னவென்று தலையை ஆட்டி கேட்டான்.&lt;br /&gt;"உங்கிட்ட ஒன்னு சொல்லனும்" என்று வாசற்படியை ஒட்டியபடி தலை குனிந்துக் கொண்டு நின்றாள்.&lt;br /&gt;தலை குனிவை கண்டு கனவு காண்கிறோமோ என்ற சந்தேகம் கார்த்திக்கிற்கு வந்து விட்டது. இருந்தாலும் சற்று தைரியமாக, "ச்சீ..லூசு! போடி காலையில பேசிக்கலாம்" என்று படுத்துக் கொண்டான். இது கனவாக இருந்தால் உதை விழாது. அவள் உண்மையாகவே எழுப்பி, இவன் திட்டியிருந்தால், இந்நேரம் மேலே விழுந்து சண்டைப் போட்டிருப்பாள்.&lt;br /&gt;'இவ்வளவு நேரம் அடிக்காம இருக்கிறத பார்த்தா, இது கனவு தான் போலிருக்கு' என்று ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தான். அவள் இன்னும் வாசலிலயே நின்றுக் கொண்டிருந்தாள். சட்டென்று எழுந்து அமர்ந்துக் கொண்டான். அவள் குனிந்த தலை நிமிரவே இல்லை. கார்த்திக் தொண்டையை சரி செய்து, தான் விழித்துக் கொண்டிருப்பதை அவளுக்கு உணர்த்தினான். மின் விசிறி ஓடும் சத்தத்தை தவிர, வேறு எதுவும் சில நிமிடங்களுக்கு அந்த அறையில் எதுவும் கேட்கவில்லை.&lt;br /&gt;நிதானமாக அங்கு நிலவிய மெளனத்தை கிழித்து, "நான் உன் ப்ரென்ட் சரவணன லவ் பண்றேன்" என்றாள் மெல்லிய குரலில்.&lt;br /&gt;அரை தூக்கத்தில் இருந்தவன், அவள் சொன்னதைக் கேட்டு தூக்கி வாரி போட்டது போல் முழுவதுமாக எழுந்தான்.&lt;br /&gt;"சரவணனா? அவன் ரொம்ப நல்லவனாச்சே!"&lt;br /&gt;இன்றைய தினத்தில் நல்லவன் என்று பெயர் எடுத்தவனை தான் கெட்டவன் போல் பார்ப்பார்கள்.&lt;br /&gt;"எவ்வளவு நாளா?"&lt;br /&gt;அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. எதிர்பார்த்தது தான். எதுவும் அவளாக தான் சொல்வாள். கேள்வி கேட்டால் அவளுக்கு பிடிக்காது.&lt;br /&gt;சிறிது நேரம் யோசித்து விட்டு, "நான் போய் வேணும்னா சொல்லட்டுமா?" என்று கேட்டான்.&lt;br /&gt;"அதெல்லாம் வேணாம். நானே பார்த்துக்கறேன். சும்மா உங்கிட்ட சொல்லனும்னு தோனுச்சு" என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.&lt;br /&gt;'சொல்லனும்னா தோனுச்சா?' என்று அதிசயித்து படுத்துக் கொண்டான். ஆனால் தூக்கமே வரவில்லை. தன் தங்கையின் தைரியத்தைக் கண்டு வியந்தான். இவனும் தான் பின் வீட்டு சுபாவை காதலிக்கிறான். ஆனால் யாரிடமும் சொல்லவில்லை. தனக்கு தன் தங்கை பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டான். எப்படியும் அடுத்த நாள் காலையில் விடிந்தவுடன் சுபாவை பார்த்து சொல்லி விட வேண்டும் என்று முடிவெடுத்தான். ஓரே வகுப்பில் தான் படிக்கிறாள். வகுப்பில் சொன்னால் ரம்யாவிற்கு தெரிந்து விடும். ரம்யாவிற்கு தெரிந்தால் சும்மா விட மாட்டாள். இதுவரை எதுவும் மறைத்ததில்லை. பள்ளியில் இருந்தே நிழல் போல் உடன் வரும் தோழி அல்லது தொல்லை. அப்படியே ஏதோ ஏதோ நினைத்துக் கொண்டே தூங்கி விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ காலையில் சீக்கிரம் எழுந்துக் கொண்டான். சுபாவிற்காக சுவர் அருகே காத்திருந்தான். அப்படியே நின்றுக் கொண்டே தூங்கினான்.&lt;br /&gt;"என்ன... இன்னும் தூக்கம் கலையலையா?" என்று சுபா வந்து எழுப்பினாள். அசட்டுத்தனமாக சிரித்தான் கார்த்திக்.&lt;br /&gt;"சரி...உங்கிட்ட ஒன்னு சொல்லனும்" என்றாள் சுபா.&lt;br /&gt;'ஒருவேள நம்மள மாதிரி தானோ!' என்று அதிசயித்தான். பழன் நழுவி பாலில் விழ போகிறது என மகிழ்ந்தான்.&lt;br /&gt;"நம்ம சரவணன் இல்ல..." என்று ஆரம்பித்தாள். இது ஒன்று போதாதா! கார்த்திக்கிற்கு சகலமும் புரிந்தது. யாரோ நெஞ்சை அழுத்துவது போலும், கண்கள் இருண்டது போலும் இருந்தது.&lt;br /&gt;சுதாரித்து கொண்டு, "நீ அவன லவ் பண்ற... அதானே!" என்று கேட்டு சிரிக்க முயன்றான்.&lt;br /&gt;"ஐயோ...! அதெல்லாம் இல்ல."&lt;br /&gt;"சரி...நம்பிட்டேன்."&lt;br /&gt;"அவன்கிட்ட ஒரு புக் கேட்கனும். நான் இதுவரைக்கும் பேசினதில்லை. அதான் நீ ஹெல்ப் பண்ணுவேன்னு கேட்டா...இப்படி பேசுறியே!"&lt;br /&gt;"ஐ..அதான் உன் கதை காலேஜூக்கே தெரிஞ்சுடுச்சே!"&lt;br /&gt;"ஐய்யய்யோ... நன் இன்னும் யாருகிட்டயும் சொல்லவே இல்லியே?"&lt;br /&gt;"அப்ப உண்மன்னு ஒத்துக்கிற" என்று சிரித்தான்.&lt;br /&gt;"இல்ல" என்று சிரித்து விட்டு, "ஏய்..ப்ளீஸ்ப்பா யாருகிட்டயும் சொல்லிடாத. முக்கியமா ரம்யா கிட்ட சொல்லிடதா" என்று வீட்டுக்குள் ஓடி விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னாச்சு ரொம்ப டல்லடிக்கிற?" என்று கேட்டாள் ரம்யா.&lt;br /&gt;"எல்லாம் தப்பு தப்பா நடக்காம சரியா நடக்கிறதால...எல்லாம் தப்பா தெரியுது."&lt;br /&gt;"ச்சே...இதுக்கா ஃபீல் பண்ற?"&lt;br /&gt;"சரி, உனக்கும் ரேவதிக்கும் என்ன சண்டை?"&lt;br /&gt;"உங்கிட்ட சொல்லல? நம்ம கிளாஸ் சரவணன ப்ரொப்போஸ் பண்ணி ஃபெயிலியர் ஆயிடுச்சு ரேவதிக்கு. ரொம்ப அழகின்னு நினைப்பு. "என்னாலயே முடியல...வேறு யாரால முடியும்?'னு கேட்டா. 'என்னால முடியும்டி'ன்னு சவால் விட்டிருக்கேன்."&lt;br /&gt;இரவில் இருந்து ஒரே பெயரை மாற்றி  மாற்றி கேட்டுக் கொண்டிருக்கிறான். இதெல்லாம் எங்க போய் முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தான். தன்னையும், சரவணனையும் ஒப்பிட்டு பார்த்தான்.&lt;br /&gt;"ஏய்...ஏன் எதுவும் சொல்ல மாட்டேங்கிற?"&lt;br /&gt;"பார்த்து. விளையாட்டு வினை ஆயிடப் போகுது."&lt;br /&gt;"என்னால முடியாதுன்னு நினைக்கிறியா?" என்று கேட்டாள்.&lt;br /&gt;"அப்படியில்ல. சொல்ல தெரியல. சரி, ஒருவேள க்ளிக் ஆயிடுச்சுன்னா....என்ன பண்ணுவ?"&lt;br /&gt;"ரொம்ப நல்லதா போச்சு...அப்படியே செட்டில் ஆயிடுவேன்" என்று சிரித்தாள்.&lt;br /&gt;ஒரே நாளில் கார்த்திக்கிற்கு தனி ஆள் ஆகி விட்டது போலிருந்தது. கைக்கு அருகில் இருந்தவர்கள் எல்லாம் இன்று சரவணனோடு உள்ளனர். தான் யாருக்கும் வேண்டாதவனாகி விட்டதாக எண்ணி வருந்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரம் யாரிடமும் பேசாமலும், குறிப்பாக அந்த மூவர் கண்ணில் படாமல் இருக்கவும் பெரிதும் முயன்றுக் கொண்டிருந்தான். திடீரென்று வழியில் வந்த சரவணன், கார்த்திக்கை தடுத்து நிறுத்தினான். கார்த்திக் விலக முயற்சித்தும் முடியவில்லை. நீண்ட நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர். கார்த்திக் வேண்டா வெறுப்பாக நின்றுக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;"ஆனா...உன்ன பார்த்தா எனக்கு பொறாமையா இருக்குடா."&lt;br /&gt;ஆச்சரியத்தில் மூழ்கிய கார்த்திக், "ஏன்?" என்று கேட்டான்.&lt;br /&gt;"ரொம்ப ஜாலியான லைஃப்டா உன்து. சண்ட போடுறதுக்கு வீட்ல தங்கச்சி, எல்லாத்தையும் மனசு விட்டு ஷேர் பண்றதுக்கு ரம்யா மாதிரி ஒரு நல்ல ஃப்ரென்ட், எந்த டவுட்டா இருந்தாலும் க்ளியர் பண்றதுக்கு பின்னாடி வீட்ல சுபா இருக்கா. ஆனா என்னை பாரு. தனிமை. மனசு விட்டு பேசுறதுக்கு ஆள் இல்ல. யாருக்கும் என்னை பிடிக்க மாட்டேங்குது. நம்ம க்ளாஸ் ரேவதி கூட என்னை லவ் பண்றதா கிண்டல் செய்றா. உடனே மத்த கேர்ல்ஸ் எல்லாம் சிரிக்கிறாங்க. எனக்கு எதுவுமே பிடிக்க மாட்டேங்குது" என்று ஒரு மாதிரி வருந்துவது போல் பேசினான் சரவணன்.&lt;br /&gt;கார்த்திக் கதி கலங்கி போனான்.&lt;br /&gt;'என்ன இவனும் ஃபீல் பண்றான்!' என்று நினைத்த கார்த்திக்கிற்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.&lt;br /&gt;"சாரிடா...எங்கயோ போன உன்ன வேற நிறுத்திட்டேன்."&lt;br /&gt;"ஏய்...என்ன இது? சின்ன விஷயத்துக்கு எல்லாம் ஃபீல் பண்றியோன்னு தோனுது" என்று சரவணின் தோள் மேல் கை போட்டு அழைத்து சென்றான் கார்த்திக்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-5296826301665148741?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/5296826301665148741/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=5296826301665148741' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/5296826301665148741'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/5296826301665148741'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2007/12/blog-post_19.html' title='எதிர்கரை'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-8413406038447428335</id><published>2007-12-17T05:33:00.001-08:00</published><updated>2007-12-17T08:36:24.152-08:00</updated><title type='text'>மேற்கு</title><content type='html'>'ஏன் நீ வேலைய விட கூடாதா?'&lt;br /&gt;&lt;br /&gt;ஜான்சனிற்கு ஒன்றரை வயது இன்னும் முழுமையாக ஆகவில்லை, ஆனால் அவன் உடைத்த பொருட்களின் விலை ஒன்றை லட்சத்தை தாண்டியது. ஜெனிலியா இதற்காகவே அலுவலக விடுமுறையை ஒரு வருடத்திற்கு மேல் நீடிக்க வேண்டியதாகி விட்டது. ஜேம்ஸ் எவ்வளவோ சொல்லியும் ஜெனிலியா வேலையை விட சம்மதிக்கவில்லை.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;"இனிமே நீ வேலைக்கு போலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் பிரபலமாகி வரும் 'மிஸ்டர். மாம்' கலாச்சாரத்திற்கு ஜேம்சும் மாறி விட்டான். கட்டாய ஓய்வினை வாங்கிக் கொண்டு ஜான்சனை நேருக்கு நேராக சமாளிப்பதென முடிவுக்கு வந்து விட்டான். &amp;nbsp; ஜெனிலியாவிற்கு இந்த முடிவு பிடிக்கவில்லை எனினும், ஜேம்சிற்கு ஜான்சனுடன் பொழுது நன்றாக போனது. வீட்டு வேலைகள் அனைத்தும் இரண்டு நாட்களிலயே பழகி விட்டது.&amp;nbsp; மாதத்திற்கு ஒருமுறை நடக்கும் மருத்துவ ஆலோசனைக்கு ஜான்சனை அழைத்து சென்றான் ஜேம்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மருத்துவமனையில் இருந்து ஜெனிலியாவை தொடர்புக் கொண்டனர். ஜான்சனுக்கு தான் ஏதோ ஆபத்து போலிருக்கு என பதற்றத்துடன் மருத்துவர் முன் அமர்ந்திருந்தாள் ஜெனிலியா. மருத்துவர் சிறிது நேர மெளனத்திற்குப் பிறகு, "பதட்டப்படாம சொல்றத கேளுங்க. உங்க புருஷன் 'நெக்ரோபிலியா(Necrophilia)'வால பாதிக்கப்பட்டிருக்கார்" என்றார்.&lt;br /&gt;"அப்படின்னா?" என்றாள் பயந்தவாறே.&lt;br /&gt;"ம்ம்...அது ஒரு வகையான மன நோய். செத்தவங்க மேல ஏற்படற ஆசை. இன்னும் தெளிவா சொல்லனும்னா பிரேதத்தோட உறவு வச்சிப்பாங்க."&lt;br /&gt;வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு எழுந்தாள் ஜெனிலியா.&lt;br /&gt;"அவசரப்படாதீங்க. எங்கக்கிட்ட ஆதாரம் இருக்கு" என தனது கணினி திரையினை ஜெனிலியா பக்கம் திருப்பிய மருத்துவர் "இது மார்ச்சுவரியில இருக்கும் கேமராவுல பதிவாயிருக்கு" என்றார்.&lt;br /&gt;ஜெனிலியாவிற்கு அழுகையாய் வந்தது. கண்களிலிருந்து வழிந்த நீரை துடைத்தப்படியே, "எதுவும் பண்ண முடியாதா?" என்று கேட்டாள்.&lt;br /&gt;"இது ரொம்ப ரொம்ப ரேரான கேஸ். ட்ரை பண்ணலாமே தவிர முடிவ பத்தி சொல்ல முடியாது. நீங்க டைவர்ஸ் அப்ளை பண்ணீங்கன்னா நான் உங்களுக்கு ஃபேவரா ரிப்போர்ட் தர்றேன்."&lt;br /&gt;"வேற வழி இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் உளர்ற? முதல்ல உட்காரு. இதெல்லாம் நான் ஈஜிப்ட் கதைல தான் கேட்டிருக்கேன். போயும் போயும் ஜேம்ஸ பண்ணுவானா இந்த வேலைய. லூசு, உட்காருன்னு சொல்றேனில்ல."&lt;br /&gt;"எனக்கு பயமா இருக்கு."&lt;br /&gt;"ஏன் அநாவசியமா பயப்படுற?"&lt;br /&gt;"ஏன் நெக்ரோபிலியா வருது தெரியுமா? செத்தவங்க மேல பயம் இருந்தா அது வரும். ஜேம்சுக்கு இந்த பயம் சின்ன வயசுல இருந்தே இருக்குன்னு அவனே சொல்லியிருக்கான். உன்னால எனக்கு டைவர்ஸ் வாங்கி தர முடியுமா முடியாதா ஜூலி" என்று கோபமாக கேட்டாள் ஜெனிலியா.&lt;br /&gt;"சரி, அவசரப்படாத. சொல்றத நல்லா கேளு. ஜேம்சுக்கு எதுவும் தெரிய வேணாம். எனக்கு  ஒரு வாரம் டைம் கொடு. அப்பறமா நோட்டீஸ் அனுப்புவோம்."&lt;br /&gt;"அவன் என் மேலயும், ஜான்சன் மேலயும் எவ்வளவு பாசம் வச்சிருக்கான் தெரியுமா?" என்று அழுதாள் ஜெனிலியா.&lt;br /&gt;"அப்ப டைவர்ஸ் வேணாம் இல்ல?"&lt;br /&gt;"ம்கூம்..வேணும்."&lt;br /&gt;&lt;br /&gt;ஜெனிலியாவிடம் பேசிய அந்த டாக்டரை கைது செய்து விட்டனர். அதற்கு காரணம் அட்வகேட் ஜூலி தான் என செய்தி வெளியாகி இருந்தது. உடனே ஜூலியை பார்க்க சென்றாள் ஜெனிலியா.&lt;br /&gt;"உன்ன தான் நான் பார்க்கனும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். சின்ன கேசா வந்துக்கிட்டிருந்தது. உன்னால நான் இப்ப ரொம்ப பிசி ஆயிட்டேன். வா மேல போய் பேசலாம்."&lt;br /&gt;"என்னாச்சு?"&lt;br /&gt;"அந்த டாக்டர் ஃப்ராடு. யாரு பணம் கொடுத்து என்ன செய்ய சொன்னாலும் செய்வான். அவன் மேல இப்ப ஏகப்பட்ட கேஸ். உன் விஷயத்துக்கு வருவோம். க்ரீன் மெட்டல் கம்பெனியோட 34% ஷேர் உங்க ரெண்டு பேருகிட்டயும் இருக்கு. உங்க முடிவு இல்லாம தனியா ஜேக்கப்சால எதுவும் பண்ண முடியாது. அவங்கிட்ட 28% ஷேர் தான் இருக்கு. அதனால டாக்டர் மூல்யமா  உனக்கு ஜேம்ஸ் மேல வெறுப்பு வர வச்சு டைவர்ஸ் வாங்கிட்டா, உங்க ஷேர் உடைஞ்சுடும். புரியுதா?" என்றாள் ஜூலி.&lt;br /&gt;ஜெனிலியாவிற்கு மீண்டும் உயிர் வந்தது போலிருந்தது.&lt;br /&gt;"உனக்கு ஜேம்ஸ் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்ப சொல்லி போன வாரம் வந்திருந்தான்."&lt;br /&gt;"ஏன்?" என்று அதிர்ந்தாள் ஜெனிலியா.&lt;br /&gt;"உனக்கும் உங்க ஆபிசுல இருக்கிற இன்னொருத்தனுக்கும் தொடர்பு இருக்கிறதா ஒரு வீடியோ டேப் ஜேம்சுக்கு கிடைச்சிருக்கு."&lt;br /&gt;"அத அவன் நம்புறானா?"&lt;br /&gt;"உன் விஷயமாவது நம்புற மாதிரி இருக்கு. ஆனா நீ அவசரப்பட்ட மாதிரி நான் அவசரப்படல" என்று வாசலில் நின்று புன்னகைத்தான் ஜேம்ஸ்.&lt;br /&gt;"இதுவும் அந்த ஜேக்கப்ஸ் வேலை தான்" என்றாள் ஜூலி.&lt;br /&gt;ஜெனிலியா கண் கலங்கினாள். கீழே ஏதோ உடையும் சத்தம் கேட்டது.&lt;br /&gt;"ஜான்சனும் வந்திருக்கார் போலிருக்கே!"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    &lt;p style="text-align: right; font-size: 8px"&gt;Blogged with &lt;a href="http://www.flock.com/blogged-with-flock" title="Flock" target="_new"&gt;Flock&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-8413406038447428335?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/8413406038447428335/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=8413406038447428335' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/8413406038447428335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/8413406038447428335'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2007/12/untitled.html' title='மேற்கு'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-2980366737131041780</id><published>2007-12-05T03:30:00.001-08:00</published><updated>2007-12-06T02:23:08.816-08:00</updated><title type='text'>ஒரு நாள்</title><content type='html'>மாலை நான்கு மணி...&lt;br /&gt;&lt;br /&gt;"முரளி சார்... மேனஜர் கூப்பிடறார்."&lt;br /&gt;பல மாதங்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வை பற்றியதாக தானிருக்கும் என்று மகிழ்ச்சியாக சென்றவரிடம், "கோவர்தன் ரெண்டு நாளா ஆபீஸ் வரல போலிருக்கு. அவரு பார்க்க வேண்டிய ஒரு ஃபைல நாளைக்கே மூவ் பண்ணியாகனும். மீனா கிட்ட ஃபைலிருக்கு. இன்னைக்கு நைட்டு அத முடிச்சிட்டு போங்க சார்" என்று சொல்லி முரளியின் முனறலுக்கு ஆளானார் மேனஜர்.&lt;br /&gt;முரளி தனது இருக்கைக்கு வந்தவுடன், "சீதா... நான் தான் பேசுறேன். வீட்டுக்கு வர லேட்டாகும். நான் இங்கயே சாப்பிட்டுகிறேன். பரத் வன்ட்டானா?" என்று வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்புக் கொண்டு கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு பத்து மணிக்கு தான் வீட்டிற்கு சென்றார் முரளி.&lt;br /&gt;"எப்ப வந்தான்? தூங்குறானா!"&lt;br /&gt;"அஞ்சரை மணிக்கு தான் வந்தான். ஏதோ அட்ரஸ் ப்ராப்ளமாம். பேங்க்குக்கு போயிட்டு வந்திருக்கான். நாளைக்கும் பாஸ் போர்ட் ஆபீசுக்கு போகனுமாம். குமார் வந்து படத்துக்கு கூட்டிட்டு போயிட்டான்."&lt;br /&gt;"படத்துக்கா? இப்ப ரொம்ப முக்கியமா.... சரி, காலையில ஏழு மணிக்கு எல்லாம் போகனும்."&lt;br /&gt;"நாளைக்கு கரன்ட் பில் கட்ட கடைசி நாளு."&lt;br /&gt;காலையில் போகும் பொழுது தருகிறேன் என்று தூங்க சென்று விட்டார். காலையில் புறப்படுவதற்கு தயாராகி, பரத் அறையை கடக்கும் பொழுது எட்டிப் பார்த்தார்.&lt;br /&gt;'இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி கவலை இல்லாம தூங்க முடியும்!'&lt;br /&gt;&lt;br /&gt;ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்த ஃபைலை சரி பார்க்க மதியம் இரண்டு ஆனது. அதன் பிறகு, தான் பார்க்க வேண்டிய வேலைகளில் ஈடுப்பட்டார் முரளி.&lt;br /&gt;"என்ன மிஸ்டர் முரளி...நான் ரொம்ப முக்கியமா பார்க்கனும்னு சொல்லியும் நீங்க ஒரு ஃபைல தான் பார்த்திருக்கீங்க. இன்னொரு ஃபைல் அப்படியே இருக்கு. முடியலன்னா  ஓபன்னா சொல்லலாம் இல்ல. இப்ப மணி நாலு ஆகுது. ஏழு மணிக்குள்ள வேலைய முடிங்க. நான் வெயிட் பண்றேன்."&lt;br /&gt;&lt;br /&gt;மாலை ஐந்து மணி...&lt;br /&gt;&lt;br /&gt;"பரத்தம்மா..அவரு அக்கா இன்னைக்கு வர்றாங்களாம். கொஞ்சம் மளிகை சாமான் எல்லாம் வாங்கனும். நீங்க ஃப்ரீயா இருந்தா போய் வாங்கிட்டு வர முடியுமா? நான் அவங்கள ரிசீவ் பண்ண போகனும். அதனால் தான்."&lt;br /&gt;&lt;br /&gt;சீதா பக்கத்து வீட்டு பெண்மனிக்காக மளிகைக் கடைக்கு சென்று விட்டு வரும் பொழுது, பரத் வீட்டு வாசலிலயே உட்கார்ந்திருந்தான்.&lt;br /&gt;"ஏன் இவ்வளவு லேட்?"&lt;br /&gt;"பேங்க் பாஸ் புக்ல இருக்கிற அட்ரசும், ரேஷன் கார்ட்ல இருக்கிற அட்ரசும் ஒன்னா இருக்கனுமாம். பேங்க் பாஸ் புக்குல ஒரு எழுத்து விட்டு போச்சு. அதான் பேங்க்குக்கு போனேன். மேனஜர கேட்கனும், அது இதுன்னு இழுத்துட்டாங்க."&lt;br /&gt;&lt;br /&gt;பரத்தை பார்க்க வந்த அவனது பள்ளி தோழன், "என்ன ஆன்ட்டி...பரத்த எங்கூட படத்துக்கு அனுப்ப மாட்டீங்களா?" என்று கேட்டான்.&lt;br /&gt;"ஏம்ப்பா... என்ன வம்புக்கு இழுக்கிற? நான் எதுவும் அப்படி சொல்லல."&lt;br /&gt;&lt;br /&gt;பரத் படம் பார்த்து விட்டு, இரவு பத்து நாற்பதுக்கு தான் வந்தான்.&lt;br /&gt;"அம்மா...காலையில எட்டு மணிக்கெல்லாம் கிளம்பனும். அப்ப தான் க்யூவல இருந்து தப்பிக்கலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் முரளி அவசரத்தில் மின் கட்டனத்திற்கு பணம் கொடுக்காமல் சென்று விட்டார். பரத்தும் கிளம்பிய பின், சீதா பக்கத்து வீட்டிற்குச் சென்றாள்.&lt;br /&gt;"வந்தனா அம்மா" என்றழைத்து விட்டு, "விருந்தாளி எல்லாம் போயாச்சா?" என்று கேட்டார்.&lt;br /&gt;"போயிட்டாங்க. யார் வந்தாலும் ஒரு நைட்டு தான். அதுவும் வேற வேலைய வர்றப்ப சும்மா வந்துட்டு போவாங்க. காலம் அப்படி மாறிடுச்சு."&lt;br /&gt;பொதுவாக பேசியிருந்து விட்டு, "இன்னிக்கு தான் கரன்ட் பில் கட்ட கடைசி நாளு. பரத் அப்பா பணம் தர மறந்துட்டார். நான் சாயந்திரம் திருப்பி தந்துடுறேன்" என்றாள் சீதா.&lt;br /&gt;"இதுல என்ன இருக்கு? நீங்க மெதுவாவே தாங்க. நானும் பணம் கட்ட மறந்துட்டேன். அப்படியே எங்களதையும் சேர்த்து கட்டிடுறீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி நாள் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. வீட்டிற்கு வந்தால் எதிர் வீட்டு பாட்டிக்கு நெஞ்சு வலி, துணைக்கு யாரும் இல்லை என்று சொல்லி மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர். பாட்டியின் மகள்கள் வந்தவுடன் வீடு திரும்ப சாயந்திரம் ஆகி விட்டது. சீதா வீட்டிற்கு வருவதற்கும் சிலிண்டர் வருவதற்கும் சரியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏம்ப்பா...நேத்து மதியம் போன் பண்ணதுக்கு இன்னிக்கு அஞ்சு மணிக்கு தான் வர்ற. சரி, அதை அப்படியே பக்கத்து வீட்ல கொண்டு போய் வச்சிடு."&lt;br /&gt;&lt;br /&gt;மாலை ஆறு மணி...&lt;br /&gt;&lt;br /&gt;"காலையில இருந்து க்யூவில நிக்கிறேன். ரொம்ப டயர்டா இருக்கு. படத்துக்கு வந்ததே பெரிய விஷயம். நீ தான் டிக்கெட் எடுக்கனும்" என்றான் பரத்.&lt;br /&gt;"சரி, நான் க்யூவில நிக்கிறேன். கவலைய விடு" என்று சொல்லும் பொழுதே அவனது செல் போன் ஒலித்தது.&lt;br /&gt;"ஒரு நிமிஷம் நில்லு. நான் தோ வந்துடுறேன்" என்று சொல்லி விட்டு, பரத் க்யூவில் நின்று டிக்கெட் வாங்கியதும் தான் வந்தான்.&lt;br /&gt;"சாரிடா."&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்ற எண்ணதிலேயே ரொம்ப நேரம் தூங்கி விட்டான். எழுந்தவுடன், "ஏன்மா எழுப்பல?" என்று கத்தினான்.&lt;br /&gt;"பத்து மணிக்கு தான பாஸ்போட் ஆபீஸ் திறப்பாங்க. ஏன் இப்ப கத்துற?"&lt;br /&gt;"இந்நேரம் க்யூ ஆரம்பம் ஆகியிருக்கும்" என்று முனறினான்.&lt;br /&gt;"சரி, போயிடலாம் கவலப்படாத. இப்ப நீ பக்கத்து வீட்டுக்கு போய் சிலிண்டர் எடுத்துட்டு வா. நான் ஆன்ட்டிகிட்ட முன்னாடியே சொல்லிட்டேன்."&lt;br /&gt;'முடியாது' என்று சொல்லலாம்னு தான் நினைத்தான். ஆனால் கால் இழுத்து சென்று விட்டது. வந்தனா தலை குனிந்த வாறே சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்தாள். பரத் அவள் வீட்டு வாசலில் நின்று இருந்து  அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். வந்தனா பரத்தை கடந்து சென்று, சைக்கிளில் ஏறும் முன் திரும்பிப் பார்த்தாள். பரத் தலைக் குனிந்து கொண்டான். வந்தனா சிரித்துக் கொண்டே சென்று விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாப்பா... காலேஜ் எல்லாம் எப்படிப் போகுது?" என்று விசாரித்தார் வந்தனாவின் தந்தை. அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த வந்தனாவின் தம்பி திலீப் பரத்தை முறைத்துக் கொண்டிருந்தான். பரத்தை மேற்கோள் காட்டி தான் இருவரையும் திட்டுவார் வந்தனாவின் தந்தை.&lt;br /&gt;"இந்த வருஷம் பப்ளிக் எக்சாம் எழுத போற. கொஞ்சம் அட்வைஸ் பண்ணு அவளுக்கு. சன்டேல நீ ஃபிரீயா இருந்தா மேக்ஸ் சொல்லி கொடு. நிறைய தப்பு பண்றா" என்பதற்கெல்லாம் வெறுமென தலையை மட்டும் ஆட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை பத்தாவது மதிப்பென் சான்றிதழலயும், ரேஷன் கார்ட்டிலும் பரத்தின் பெயரில் ஒரு எழுத்து மாறியிருப்பதாக சொல்லி தாலுக்கா அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அடுத்த க்யூ அவனுக்கு அங்கே காத்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'மூனு நாள் லீவுக்கு அங்க காலேஜ்ல வேற போய் நிக்கனும்' என்று முனறிக் கொண்டே வீட்டிற்குச் சென்றால் வீடு பூட்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா கோயிலுக்கு போயிருக்காங்கப்பா.  அதுவரைக்கும் வேணும்னா எங்க வீட்ல இரு. ஒரு கப் காஃபி சாப்பிட்டுட்டு, அப்படியே கேபிள் வரல என்னன்னு போய் கேட்டுட்டு வாயேன். உங்கம்மா வர்றதுக்கு ஏழு ஆகும்" என்று கையில் பரத் வீட்டு சாவியை வைத்துக் கொண்டே கேட்டாள் வந்தனாவின் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;பரத் தன் வாட்ச்சில் மணி பார்த்தான். ஆறு தான் ஆகியிருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-2980366737131041780?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/2980366737131041780/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=2980366737131041780' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/2980366737131041780'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/2980366737131041780'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2007/12/blog-post_05.html' title='ஒரு நாள்'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-8476622853935753935</id><published>2007-12-03T09:17:00.001-08:00</published><updated>2007-12-04T08:53:33.939-08:00</updated><title type='text'>வெள்ளைக்காரி</title><content type='html'>"அங்க யாருக்கிட்டயும் பேசப்படாது" என்று முதல் நாள் பள்ளிக்கு போகும் தனது பேத்தி செளந்தர்ய வர்தனியிடம் ஆயிரம் முறை சொல்லி அனுப்பினார் ராதே மாமி.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றிற்கும் தலையாட்டி விட்டு மகிழ்ச்சியாக பள்ளிக்குப் புறப்பட்டாள் செளந்தர்யா. பெரியவர்களின் மத்தியிலேயே இருந்து விட்டு, தன் வயது குழந்தைகளைப் பார்ப்பதற்கு மிக குதூகலமாக இருந்தது. ஆனால் பாட்டியின் வார்த்தைகளை மீறவில்லை. பள்ளி விட்டு வரும் வழியில் கூட்டத்தை பார்த்துக் கொண்டே வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"பால்கார மாணிக்கம் மாமாவும், ஆசாரி தாத்தா பொண்ணும் கிணத்துல விழுந்துட்டாங்களா அம்மா? பெரிய கிணத்துக்கிட்ட எல்லாம் நிக்கிறாங்க?" என்று கேட்டாள் செளந்தர்யா.&lt;br /&gt;லட்சுமி என்ன சொல்வது என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, "ஏம்மா அவா ரெண்டு பேரும் கிணத்துல விழுந்தா?" என அடுத்த கேள்வியும் கேட்டு விட்டு, "கிணத்துல ஜலம் தானம்மா இருக்கும். அங்க இவா ரெண்டு பேரும் என்ன பண்ணுவா?" என்று தொடர்ந்துக் கேட்டாள் செளந்தர்யா.&lt;br /&gt;லட்சுமி சிரித்து விட்டு, "அவா ரெண்டும் பேரயும் பேசக் கூடாதுன்னு உங்க பாட்டி மாதிரி பெரியவா எல்லாம் சொன்னதால, அவா ரெண்டு பெரும் சாமிகிட்ட போயிட்டா" என்றாள்.&lt;br /&gt;"கிணத்துல தான் சாமி இருக்காராம்மா? நம்ம வீட்டு சாமியறையில, கோயிலில இருக்கிறது எல்லாம் யாரு? சாமின்னு பாட்டி சொன்னாங்களே!"&lt;br /&gt;"அவர் எல்லா இடத்திலயும் இருப்பாரு. அதே மாதிரி எல்லாருகிட்டயும் இருக்கிறாரு. உங்கிட்ட, எங்கிட்ட, அப்பாகிட்ட, தாத்தா பாட்டி கிட்ட, ஆடு, மாடு. கோழி இப்படி எல்லா உயிர்லயும் இருக்கிறாரு."&lt;br /&gt;"அப்ப ஸ்கூலயும் இருப்பாரு இல்லம்மா?"&lt;br /&gt;"இருப்பாரு" என்று சிரித்தாள் லட்சுமி.&lt;br /&gt;"சாமிகிட்ட போன அக்காவும், அம்மாவும் பேசிக்குவாளாம்மா!"&lt;br /&gt;"ம்ம்..பேஷா பேசிப்பா."&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பில் ஒரு பையன் அனைவருக்கும் மாம்பழம் கொடுத்தான்.&lt;br /&gt;"நேக்கு வேண்டாம். எங்க பாட்டி திட்டுவா."&lt;br /&gt;"உங்க பாட்டிக்கு தெரியாம சாப்பிடு. எங்க வீட்ல எனக்கு உன்ன மாதிரியே அழகா தங்கிச்சி பாப்பா பிறந்திருக்கு" என்றவனிடம், "பாப்பா பெயரென்ன?" என்று கேட்டாள்.&lt;br /&gt;"தெரியல. பாப்பான்னு தான் எல்லாம் கூப்பிடுறாங்க" என்று பழத்தை நீட்டினான்.&lt;br /&gt;"வேணாம். நேக்கு பயமாயிருக்கு."&lt;br /&gt;"நீ சாப்பிடலன்னா எங்க பாப்பா கோவிச்சுக்கும்."&lt;br /&gt;செளந்தர்யா யோசித்து விட்டு, "நான் சாப்பிட்டுட்டேன்னு பாப்பாக்கிட்ட சொல்லு" என்று பழத்தை வாங்கிக் கொண்டு, "உன் பெயரென்ன?" என்று கேட்டாள்.&lt;br /&gt;"கட்டபொம்மன்" என்று அவன் சொன்னதற்கு செளந்தர்யா சிரித்தாள்.&lt;br /&gt;"ஏன் சிரிக்கிற?" என்று கேட்டான்.&lt;br /&gt;"யார் நோக்கு பெயர் வச்சா?"&lt;br /&gt;"எங்கய்யா தான். இது சாமி பெயரு."&lt;br /&gt;"சாமி பெயரா! அந்த சாமி எப்படியிருக்கும்? எந்த கோயில்ல இருக்கு?"&lt;br /&gt;"எனக்கும் தெரியல. ஆனா அந்த சாமி தான் வெள்ளக்காரங்க எல்லாரையும் கொன்னுச்சு."&lt;br /&gt;"வெள்ளக்காரங்கன்னா யாரு?" என்று கேட்டாள் செளந்தர்யா.&lt;br /&gt;"வெள்ளக்காரங்கன்னா..." என்று இழுத்து, "வெள்ளையா இருப்பாங்க. அவங்கெல்லாம் ரொம்ப கெட்டவங்க" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஊரிலியே செளந்தர்யா குடும்பம் தான் மிகுந்த சிவப்பு தோள் உடையவர்களாக இருந்தனர். தனது குடும்பம் தான் வெள்ளைக்காரர்கள் எனவும், தன்னை கட்டபொம்மன் சாமி கொன்றுவிடும் எனவும் பயந்தாள் செளந்தர்யா.&lt;br /&gt;"அப்பா... கட்டபொம்மன்னு ஒரு சாமி இருக்காராப்பா?"&lt;br /&gt;"இல்லடா கண்ணு."&lt;br /&gt;"இருக்காருப்பா. வெள்ளக்காரங்கள கூட கொன்னாரே!"&lt;br /&gt;"இதெல்லாம் யாருடா கண்ணு நோக்கு சொன்னா?"&lt;br /&gt;"எனக்கே எல்லாம் தெரியும்ப்பா."&lt;br /&gt;"சரி, ஆனா கட்டபொம்மன் சாமி இல்லடா. நம்மள மாதிரி சாதாரன ஆளு தான்."&lt;br /&gt;"நாமளும் வெள்ளையா தானப்பா இருக்கோம். நாம தான் வெள்ளைக்காரங்களா?"&lt;br /&gt;"வெள்ளக்காரங்க நம்ம நாட்டை விட்டு போய் இருபது வருஷம் ஆச்சு. இப்ப இங்க வெள்ளக்காரங்களே இல்ல."&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் பள்ளியில் கட்டபொம்மனை தேடி சென்று, "நாங்கெல்லாம் வெள்ளக்காரங்க இல்ல. அவங்கெல்லாம் எப்பவோ போயிட்டாங்க. என்னை உங்க சாமி கொல்லாது" என்று சிரித்தாள்.&lt;br /&gt;"நான் உங்கிட்ட பேச மாட்டேன். நான் மாம்பழம் கொடுத்தத ஏன் உங்க பாட்டிக்கிட்ட சொன்ன? நேத்து வீட்டுக்கு வந்து திட்டினாங்க. இனிமே உங்கிட்ட பேசக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க" என்று அழுவது போல் சொன்னான். &lt;br /&gt;"சாமி சத்தியமா நான் பாட்டிக்கிட்ட சொல்லல. இனிமே நீ எங்கிட்ட பேச மாட்டியா?"&lt;br /&gt;"வேணும்னா யாருக்கும் தெரியாம பேசுறேன்."&lt;br /&gt;"யாரும் திட்டாம நீ எங்கிட்ட பேசறதுக்கு நான் ஒன்னு சொல்லட்டுமா?"&lt;br /&gt;"என்ன?"&lt;br /&gt;"நாம ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு வர்ற வழியில இருக்கிற கிணத்துல விழுந்து சாமிகிட்ட போயிடலாம். அப்புறம் யாரும் உன்ன திட்ட மாட்டாங்க" என்றாள் செளந்தர்யா.&lt;br /&gt;"உண்மையாவா? யார் சொன்னா உனக்கு?"&lt;br /&gt;"எங்கம்மா. அவா பொய்யே பேச மாட்டா. ரொம்ப நல்லவா."&lt;br /&gt;"அப்படின்னா...சரி."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   &lt;p style="text-align: right; font-size: 8px"&gt;Blogged with &lt;a href="http://www.flock.com/blogged-with-flock" title="Flock" target="_new"&gt;Flock&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-8476622853935753935?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/8476622853935753935/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=8476622853935753935' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/8476622853935753935'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/8476622853935753935'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2007/12/blog-post.html' title='வெள்ளைக்காரி'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-2719416664341212142</id><published>2007-11-30T22:20:00.001-08:00</published><updated>2007-12-26T06:18:18.234-08:00</updated><title type='text'>வலது  கை</title><content type='html'>"நீ வேலைக்குப் போய் தான் ஆக வேண்டுமா?" என்று கையை தொட்டு பார்த்து கேட்டான்.&lt;br /&gt;"வேறு என்ன செய்வது?"&lt;br /&gt;"ஏன் நேற்றே நீ ஓய்வு சொல்லவில்லை?"&lt;br /&gt;"சொன்னேன். ஆனால் மறுத்து விட்டார்கள்."&lt;br /&gt;"சரி. நான் சொல்கிறேன் நீ போக வேண்டாம்."&lt;br /&gt;"இன்று அரசவையில் முக்கிய அரசியல் சந்திப்பு நிகழ்கிறது. நான் போகாமல் எப்படி வேலை நடக்கும்? நான் அரசரின் வலது கை ஆயிற்றே!"&lt;br /&gt;மிகவும் யோசித்து விட்டு, "உனக்கு காய்ச்சல் அதிகமாக உள்ளது. நீ சோர்ந்து போய் விழுந்து விடுவாய். உன் வேடத்தில் நான் வேண்டுமானால் போகிறேன்" என்றான்.&lt;br /&gt;"என் வேடத்திலா.....!!"&lt;br /&gt;"ஏன் சிரிக்கிறாய்?"&lt;br /&gt;"மாட்டினால் முதுகு தோலை உரித்து விடுவார்கள்."&lt;br /&gt;"அதையும் பார்த்து விட்டால் போச்சு" என்றான் கம்பீரமாக.&lt;br /&gt;&lt;br /&gt;பல நாட்களாக போர் மேகம் சூழ்ந்திருந்த நிலையில், பக்கத்து நாட்டு அரசன் சமாதானத்திற்கு தூது அனுப்பியிருந்தான். தூதுவரை இரத்தின கம்பளம் விரித்து, இராஜ மரியாதையுடன் உபசரித்தார்கள். அரசவையில் தூதுவருக்கு ப்ரத்யேகமாக சிறப்பு ஆசனம் அமைத்தனர். &lt;br /&gt;"எங்கள் அவை புலவர் தங்களை சிறப்பித்து இயற்றிய அருட்சுவை பாக்கள்" என்று ஓலையை பவ்யமாக குனிந்தவாறே அரியனை ஏறி மன்னரிடம் நீட்டினான் தூதுவன். மன்னர் முகமலர்ச்சியோடு ஓலையை வாங்கி கண்ணை மூடி நெற்றியில் ஒற்றும் பொழுது, தூதுவன் இடையில் வைத்திருந்த குறுவாளை எடுத்தான். மன்னர் கண் திறக்கும் பொழுது, அரியனையிலிருந்து கீழே விழுந்திருந்த தூதுவனின் நெற்றி பிளவுப்பட்டு இரத்தம் வழிந்தது. அவன் கையில் குறுவாளும், தரையில் சாமரமும் இருந்தது. சாமரத்தின் கனமான பிடி தூதுவனின் நெற்றியைத் தாக்கியிருந்தது. &lt;br /&gt;கீழே விழுந்த தூதுவன், மீண்டும் வெறி கொண்டது போல எழுந்து குறுவாளை வீச எத்தனிக்கும் பொழுது அவனது கையில் சிறு கத்தி ஒன்று ஆழமாக பாய்ந்தது. அதற்குள் வீரர்கள் தூதுவனை சூழ்ந்துக் கொண்டனர்.&lt;br /&gt;"ஆட்டின் வேடத்தில் நரி, மானின் வேடத்தில் புலி" என்று சிரித்து விட்டு, "யார் நீ?" என்று வலப் பக்கம் திரும்பி சாமரம் வீசும் பெண்ணைப் பார்த்துக் கேட்டார் மன்னர். அவள் தான் சாமரத்தாலும், கத்தியாலும் தூதுவனைத் தாக்கியவள்.&lt;br /&gt;தரையை நோக்கியவாறே, "மன்னிக்க வேண்டும் மன்னா.... நான் நமது நாட்டு படையில் சேவகம் புரியும் ஒரு காலாட் படை வீரன். என் மனைவிக்கு உடல் சுகமில்லாததால் நான் அவள் வேடமணிந்து வந்தேன்" என்று சாமரம் வீசும் பெண் வேடத்தில் இருந்தவன் சொன்னான்.&lt;br /&gt;"மனைவி மேல் அவ்வளவு பிரியமா?" என்று மன்னர் கை தட்டி சிரித்து விட்டு, "என் உயிரை நீ காப்பாற்றியதால், உனக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். உனக்கு என்ன வேண்டும் கேள்" என்றார்.&lt;br /&gt;"மன்னியுங்கள் மன்னா...நான் என் கடமையை தான் செய்தேன்" என்றான் குனிந்த தலை நிமிராமல்.&lt;br /&gt;"அப்படியா! சரி, கடமையை சரியாக செய்ததற்கு பரிசு தர விரும்பிகிறேன். உனக்கு வேண்டியதைக் கேள்."&lt;br /&gt;"எனக்கு எதுவும் வேண்டாம் மன்னா. பரம்பரைத் தொழில் என்று என் மனைவிக்கு பழக்கமில்லாத சாமரம் வீசும் வேலையை அரண்மனை மேற்பார்வையாளர் அளித்து விட்டார். பலவீனமான கையுடைய அவள், இந்த வேலையால் மிக சிரமப்படுகிறாள். அதனால் அவளை வேறு வேலையில் மாற்றினால்...." என்று இழுத்தி நிறுத்தி விட்டான்.&lt;br /&gt;மன்னர் சிரித்து விட்டு, "சரி உடல் சரியானவுடன் உன் மனைவியை, இராணியை வந்து பார்க்கச் சொல். இன்று முதல் நீ குதிரைப் படை வீரன். எந்த நேரத்திலும் என்னைப் பார்த்து தயங்காமல் எது வேண்டுமானாலும் கேட்கலாம்" என்று தனது வலது கையால் அவன் தோளை ஊக்குவிப்பது போல் தட்டினார்.&lt;br /&gt;"எதற்கும் நீ முதலில் சென்று இந்த வேடத்தை கலைத்து விட்டு வா. என் மனைவியின் ஒற்றர்கள் தவறான செய்தி அளித்து விட போகின்றனர்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   &lt;p style="text-align: right; font-size: 8px"&gt;Blogged with &lt;a href="http://www.flock.com/blogged-with-flock" title="Flock" target="_new"&gt;Flock&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-2719416664341212142?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/2719416664341212142/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=2719416664341212142' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/2719416664341212142'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/2719416664341212142'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2007/11/blog-post_2930.html' title='வலது  கை'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-1036736303569004041</id><published>2007-11-30T08:12:00.001-08:00</published><updated>2007-12-03T06:21:10.856-08:00</updated><title type='text'>மிர்சி</title><content type='html'>டாண்ட்டன் மிக சோர்ந்துப் போய் அமர்ந்திருந்தான். மனைவியும், குழந்தையும் விபத்தில் இறந்ததிலிருந்து உயிர் வாழ்வதிலியே விருப்பமின்றி அலைந்தான். இருந்த வேலையையும் தூக்கி எறிந்து விட்டு வந்து விட்டான். இனி அடுத்து என்னவென்று யோசித்த பொழுது தான் 'க்ரீன் ப்ளனட்(Green Planet)' கம்பெனி பற்றி ஞாபகம் வந்தது. எதற்கும் முயன்று பார்ப்போம்&amp;nbsp; என்று நம்பிக்கை இல்லாமல் தான் போனான். இவனை உட்கார வைத்து விட்டு அனைவரும் அவரவர் வேலையைப் பார்த்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;"உங்க பெயர் டாண்ட்டன். வயது 38. பதினாறு வருஷம் ஏர் ஃபோர்சுல வேலைப் பார்த்திருக்கீங்க. அங்க வேலை செஞ்ச டாக்டரையே காதலிச்சு கல்யானம் பண்ணிக்கிட்டீங்க. சமீபமா அவங்களும், உங்க குழந்தையும் ஆக்சிடென்ட்டுல இறந்துட்டாங்க. மனசு ஓடிஞ்சு போய் வேலைய விட்டுட்டீங்க. சாரி, இந்த இன்ஃபர்மேஷனெல்லாம் கலெக்ட் பண்றதுக்கு கொஞ்சம் டைம் அயிடிச்சு. உள்ள போய் சார நீங்க பார்க்கலாம். ஆல் தி பெஸ்ட்."&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக பல சுற்றுகளுக்கு பின், டாண்ட்டனுக்கு அந்த வேலை கிடைத்து விட்டது.&amp;nbsp; இருபது மாத பயிற்சிகளுக்குப் பிறகு, விண்கூடத்தை தனியாக இயக்குமளவு தேர்ந்திருந்தான் டாண்ட்டன். ஒருமுறை சென்று பூமி திரும்ப, எட்டு வருடங்கள் ஆகும். அந்த ஒரு காரணத்திற்காகவே அந்த வேலையில் விரும்பி சேர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் மக்கள் தொகை அதிகளவு பெருகியதால், கூடவே குப்பைகளும் கழிவுகளும் சேர்ந்து பெருகியது. அதை எப்படி எதிர் கொள்வதென புரியாமல் உலக நாடுகள் தவித்த பொழுது, க்ரீன் டர்னர் எனும் தொழிலதிபர் தனது க்ரீன் ப்ளனட் கம்பெனி மூலம் தீர்வு ஒன்றினை முன் வைத்தார். அவரது அறிக்கையின் படி, அனைத்து நாட்டு கழிவுகளையும் ஒரு தீவில் ஒன்றாக சேகரித்து அதை விண்வெளிக்கு கொண்டு சென்று ஒரு குறிப்பிட்ட சுற்றுப் பாதையில்(Orbit) விட்டு விடுவது. கழிவுகள் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும். சூரிய குடும்பத்தின் எல்லையில் இருக்கும் ப்ளூட்டோவின் சுற்றுப் பாதை சரியாக இருக்குமெனவும் குறிப்பிட்டிருந்தார். வில்டன் என்ற விஞ்ஞானியை தவிர அனைவரும் டர்னருக்கு பச்சைக் கொடி காட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, க்ரீன் ப்ளனட்ட மூடிட்டா இந்த பிரச்சனையை எப்படி சரி பண்றது?" என்று நிருபர் கேட்டதற்கு, "எல்லாவற்றையும் நிறுத்துட்டு மீண்டும் பழைய படி ஏர் கலப்பையை தூக்க வேன்டியது தான்" என்றார் வில்டன்.&amp;nbsp;&amp;nbsp; உலகம் சிரித்து விட்டு க்ரீன் டர்னரை ஊக்குவித்தது. இதுவரை பத்து வருடங்களில் ஏழு விண்கூடம் கழிவுகளோடு சென்றுள்ளது. அதில் இரண்டு திரும்பியும் விட்டது. அனைத்து விண் கூடம் கிளம்பும் முன்னும், வில்டன் அதில் செல்லவிருக்கும் நபரை தனியாக சந்தித்து பேசுவார். ஆனால் அவர் முயற்சிகள் அனைத்தும் தோல்வி தான் அடைந்தது. டாண்ட்டனிடமும் பேசி தோல்வி தான் சந்தித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனிமை விரும்பிய டாண்ட்டனுக்கு, எட்டு வருடங்கள் உலகை விட்டு பிரிவது ஆறுதலாக இருந்தது. கோடிக்கனக்கான எடையுள்ள இரசாயன மற்றும் மின் கழிவுகளோடு தனியாக புறப்பட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாம் வருட பயணத்தின் பொழுது, விண் கூடத்தில் ஏதோ மோதியது போலிருந்தது. மிக கவனமாக என்னவென்று ஆராய்ந்த பொழுது, இராட்ஷச சிறகுகள் கொண்ட பறவை போன்ற உருவம் தெரிந்தது. இது முதலில் மன பிரமையோ என்று நினைத்தான். மீண்டும் நான்கு வாரங்களுக்கு பிறகு அதே போல் ஒரு உருவம் மோதியது. சில தினங்களுக்குப் பிறகு, ஒரு சிறிய விமானம் போன்ற வாகனம் அவனது விண் கூடத்தை கடந்து வேகமாக சென்றது. சிறிது நேரம் யோசித்து விட்டு, விண் கூடத்தை தானியங்கி முறையில்(automatic mode)&amp;nbsp; வைத்து விட்டு விண் படகில்(space boat) அந்த வாகனத்தைத் தொடர்ந்தான். அந்த வாகனம் சிறு கிரகம்(asteroid) ஒன்றில் தரை இறங்கியது. அதில் சென்ற உருவம், அந்த கிரகத்தில் இறந்து கிடந்த இன்னொரு உருவத்தை நோக்கி சென்றது. பின்னாலேயே சென்ற டாண்ட்டன் அந்த இரு உருவங்களையும் பார்த்து அதிசயித்தான். மனிதனுக்கும், மிருகத்துக்கும் இடைப்பட்ட உருவத்தை பெற்றிருந்தனர். கீழே படுத்திருந்த உருவம் தனது மகள் மிர்சியை போல தோற்றமளித்தது. ஒரு இறந்த இராட்ஷச பறவை வானில் இருந்து வீழ்ந்தது. அதன் வாயில் உடைந்த இயந்திரத்தின் பொருள் போல் ஏதோ இருந்தது. பூமியில் இருந்த வந்த கழிவுகளில் ஒன்றாய் இருக்கலாம். இன்னும் பல வாகனங்கள் அக்கிரகத்திற்கு வருவது போலிருந்தது. பயத்தில் வின் கூடத்திற்கு வேகமாக சென்றான். &lt;br /&gt;&lt;br /&gt;'இது பிரமையா! இல்ல உண்மையா? தனியா மூனு வருஷமா இருக்கிறதால மூளை குழம்பி விட்டதா? ஒருவேள வில்டன் சொன்னதெல்லாம் சரி தானா!? இல்ல அவரு சொன்னதையே நினைச்சுக்கிட்டு இருந்ததால் எனக்கு இப்படி தோனுதோ?' என பலவாறு பார்த்ததை நம்பாமல் யோசித்துக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த பிரபஞ்சத்துல எல்லா பொருளும் ஒரு ஒழுங்கோட இயங்கிகிட்டிருக்கு. அதுல போய் நாம தலையிட்டா ஏதாவது பிரச்சனை வரும். அந்த பிரச்சனையால பூமிக்கு எந்த நஷ்டமும் இல்ல. பூமிய தவிர வேற எங்கயும் உயிர் இல்லன்னு சொல்றாங்க...ஆனா நிருபிக்கல. நிருபிக்காத பட்சத்துல இது தப்பான செயலா எனக்குப் படுது" என்று காட்டுவாசி போல இயற்கை உடை அணிந்திருந்த வில்டன் சொன்னது எல்லாம் டாண்ட்டனுக்கு கேட்டுக் கொண்டே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எட்டு வருடங்களுக்கு பின் வர வேண்டிய செய்தி, டாண்ட்டனிடமிருந்து ஆறாம் வருட முடிவிலேயே வந்தது. விண் கூடம் செயல் இழந்து விட்டதாகவும், கட்டுப்பாடுன்றி பூமியை நோக்கி வேகமாக வருவதாகவும் செய்தி அனுப்பி இருந்தான் டாண்ட்டன். அதன் பாதையை மாற்றி வேறு எங்காவது செலுத்துமாறு டாண்ட்டனுக்கு வந்த அறிவிப்பிற்கு, தன்னால் முடியவில்லை என்று பதிலளித்தான். உடனடியாக மீட்புக் குழு ஒன்றினை பூமியில் இருந்து அனுப்பி வைத்தனர். கட்டுப்பாடு இழந்த விண் கூடத்தினுள் நுழைய மீட்புக் குழுவால் முடியவில்லை. எல்லாவற்றையும் எரிச்சலோடு பார்த்துக் கொண்டிருந்த க்ரீன் டர்னர், மீட்புக் குழு கை விட்டவுடன் இராணுவத்தை அனுகி வழியிலேயே அதை தாக்க ஏற்பாடு செய்தார். இராணுவத்தின் அலட்சியத்தால் விண்கூடம் மிக வேகமாக பூமியை நோக்கி சென்று கொண்டிருந்தது. விண் கூடம் பூமியின் எந்த இடத்திலும் விழலாம் என்று பரபரப்பு நிலவியது. &lt;br /&gt;&lt;br /&gt;"கடல்ல விண் கூடத்த மூழ்கடிக்க முடியுமா?" என்று பூமியில் இருந்து கேட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு என்னமோ தீவ நோக்கி தான் விண் கூடம் வர மாதிரி இருக்கு. உடனடியாக தீவ காலி பண்ணுங்க. நான் முடிந்த வரை அதை கடலில் மூழ்கடிக்க முயலுகிறேன்" என்று அறிவித்தான் டாண்ட்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி முடியலைன்னா....நீங்களாவது தப்பியுங்க."&lt;br /&gt;&lt;br /&gt;க்ரீன் டர்னர் மிக சோர்ந்துப் போய் அமர்ந்திருந்தார். பல பில்லியன் செலவு செய்து உருவாக்கிய தங்க முட்டை இடும் தீவு அழிவதை மிகுந்த வருத்தத்துடன் பார்த்தார் க்ரீன் டர்னர். மீட்புக் குழு மற்றும் இராணுவத்தை சாமர்த்தியமாக ஏமாற்றிய டாண்ட்டன், இனி பிரபஞ்சத்துல யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என மகிழ்ச்சியாக கழிவுகளோடு சேர்ந்து தீவில் எரிந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;p style="text-align: right; font-size: 8px"&gt;Blogged with &lt;a href="http://www.flock.com/blogged-with-flock" title="Flock" target="_new"&gt;Flock&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-1036736303569004041?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/1036736303569004041/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=1036736303569004041' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/1036736303569004041'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/1036736303569004041'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2007/11/blog-post_30.html' title='மிர்சி'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-3887231123846351440</id><published>2007-11-25T06:50:00.001-08:00</published><updated>2007-11-25T06:50:09.399-08:00</updated><title type='text'>எதிர்பார்ப்பு</title><content type='html'>தினமும் யாராவது ஒருவர் சேர்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். நேற்று இரவு கூட ஒருவர் வந்து சேர்ந்ததாக பூபதி&amp;nbsp; கேள்விப்பட்டார். காலை தேநீரை அருந்தி விட்டு போய் விசாரிக்கலாம் என்று அறையின் எண்ணை தெரிந்துக் கொண்டார். அறுபதை தொட்ட சில நாட்களிலேயே இதயத்தில் அடைப்பு ஏற்பட்டது. உயிர் பிழைத்ததே பெரும் அதிசயம் என மருத்துவர்கள் வியந்தனர்.மீண்டும் பிறந்தது போல் இருந்தது பூபதிக்கு. சுற்றி இருந்த மனிதர்கள் எல்லாம் புதிதாக தெரிந்தனர். இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக பாவிக்க பழகிக் கொண்டார். எல்லோரையும் புரிந்து கொள்ள, அவர்களது நிலைமையில் இருந்து யோசிக்கலானார். அவர் தங்கியுள்ள முதியோர் இல்லத்தில், அவரை தெரியாதவர்களே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பாரதியார் பாடல் ஒன்றினை முனுமுனுத்தபடி, புதிதாக வந்திருப்பவரின் அறை கதவைத் தட்டினர் பூபதி.&lt;br /&gt;&lt;br /&gt;"நிர்மலா தான நீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்...நீங்க!"&lt;br /&gt;&lt;br /&gt;லட்சுமியை பெண் பார்க்க சென்று விட்டு, நிச்சயதார்த்த தேதியும் குறித்து விட்டு வெளியில்&amp;nbsp; வரும் பொழுது தான் நிர்மலாவை பார்த்தான் பூபதி. லட்சுமியை விட நிர்மலா அழகாக தெரிந்தாள். பலமுறை லட்சுமியுடன் வாக்குவாதம் ஏற்படும் பொழுது, 'உன்ன பார்க்கறதுக்கு முன்னாடி அந்த நிர்மலாவ பார்க்காம&amp;nbsp; போயிட்டேன்' என்று கத்தியிருக்கிறான் பூபதி. லட்சுமியும் இறந்து, ஒரே மகளான ப்ரியாவும் நிரந்திர குடியுரிமை வாங்கி&amp;nbsp;&amp;nbsp; வெளிநாட்டிலியே தங்கி விட்டாள். நான்கைந்து முதியோர் இல்லங்களில் சிறந்தது&amp;nbsp; எதுவென&amp;nbsp; அலசி ஆராய்ந்து, பூபதியாகவே சேர்ந்துக் கொண்டார். வாழ்க்கையில் அனைத்து கட்டங்களையும் கடந்து, நிரந்திர ஓய்வுக்கான நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று நிர்மலாவை பார்த்ததும், மனம் அனைத்தையும் வேகமாக பின் தள்ளி&amp;nbsp; அவளைப் பார்த்த&amp;nbsp; முதல் தினத்திற்கு சென்று நின்றது. உடலும், மனசும் லேசானது போலிருந்தது. முதல் முறை நிர்மலாவை கண்டப் பொழுது ஏற்பட்ட சிலிர்ப்பு ஏற்பட்டது. கண்ணாடியில் தன் உருவத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டார். சொல்ல முடியாத ஏதோ ஒன்று அவருள் நிகழ்ந்ததை உணர்ந்தார் பூபதி. &lt;br /&gt;இருவருக்கும் இடையில் உருவான&amp;nbsp; அழகான நட்பை, அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல நல்லதொரு நாளை எதிர்பர்த்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்களாவது பரவாயில்ல...பொண்ண பெத்தவரு. எனக்கு ரெண்டு பசங்க, ஆனா இன்னிக்கு என் நிலமைய பாருங்க. நான் சாவதற்கு முன்னயே அவங்க அழிஞ்சுடுவாங்க பாருங்க" என்றாள் நிர்மலா.&lt;br /&gt;&lt;br /&gt;முதியோர் இல்லத்தில் சேர்ந்த பிறகு எத்தனையோ பெற்றோர்களின் புலம்பலை கேட்டிருக்கார் பூபதி. அனைவரின் பேச்சிலும் துக்கம் இருக்குமே தவிர கோபம் இருக்காது. எப்படியும் முடிவில், 'அவங்களாவது நல்லா இருந்தா..சரி தான் சார்' என்று சமாதானம் அடைந்து விடுவர். ஆனால் நிர்மலாவை போல், பெற்ற பிள்ளைகளின் மேல் வெறுப்பை காட்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'இவ இவ்ளோ தானா !!'&lt;br /&gt;&lt;br /&gt;நாகரீக வளர்ச்சியில் மனிதன் வாழும் வீடுகள் எல்லாம் எலி பொந்துகளாக சுருங்கி விட்டன. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முயன்றே குடும்ப பாரத்தை சுமக்க முடியாமல் தவிக்கின்றனர். பணத்துக்கான தேடலில் உறவுகள் கண்ணுக்கு தெரிவதில்லை. கண்களுக்கு தெரியாத பொழுது அருகில் இருந்தால் என்ன, தொலைவில் இருந்தால் என்ன என்று தோன்றியது பூபதிக்கு. அந்த கால சந்நியாச தர்மம் போல முதியோர் இல்லமும் ஒரு தர்மமாகவே தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய இளைஞர்கள், இருபதுகளிலேயே மனதளவில் பலவீனம் ஆகின்றனர். அவர்களை குறை கூறுவதில் பூபதிக்கு விருப்பம் இல்லை. அன்பு காட்ட வேண்டிய வயதில், 'இப்ப படிச்சா தான் பின்னால் நல்லாயிருக்கலாம். போய் படி' என்று எந்நேரமும் அடக்கியே வளர்த்து விட்டனர். பிள்ளைகளை படிக்க வைத்தால், பின்னால் தன்னை அரவணைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் தான் பெற்றவர்கள் படிக்க வைக்கிறார்களோ என்ற சந்தேகம் பூபதிக்கு உண்டு. சிறு வயதில் பெற்றோர்களால் அரவணைக்கப்படாத குழந்தைகள் தான் பெரியவர்கள் ஆனதும் வளர்த்ததற்கு கூலி கொடுத்து ஒதுக்கி விடுகின்றனர் என்று வருந்தினார் பூபதி. தனது மகன்களையே புரிந்து கொள்ளாத நிர்மலா, மற்றவர்களையும் புரிந்துக் கொள்ள மாட்டாள் என பூபதி நம்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;'நல்லவேள...லட்சுமிய முதல்ல பார்த்தேன்.'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   &lt;p style="text-align: right; font-size: 8px"&gt;Blogged with &lt;a href="http://www.flock.com/blogged-with-flock" title="Flock" target="_new"&gt;Flock&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-3887231123846351440?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/3887231123846351440/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=3887231123846351440' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/3887231123846351440'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/3887231123846351440'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2007/11/blog-post_25.html' title='எதிர்பார்ப்பு'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-9202282541417378329</id><published>2007-11-24T08:22:00.000-08:00</published><updated>2007-12-03T06:17:03.655-08:00</updated><title type='text'>ஊடுருவு சக்தி-1</title><content type='html'>தகிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் ஹரிதர் மெதுவாக நவீன ஆராய்ச்சிக் கூடத்தை நோக்கி நடந்தான். இரகசிய எண்கள் கொடுத்து, ஆராய்ச்சிக் கூடத்தின் வாயிற் கதவை திறந்து உள்ளே சென்றான். சோப நித்திரையில் உறங்கிக் கொண்டிருந்த காளிகாவின் அருகில் போய் அமர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னாச்சு?" என்று கண் திறக்காமலே கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாம் சரியா தான் இருக்குது. நீ தான் அநாவசியமா பயப்படுற. அந்த வின் க்ரூசால்.. உன் எல்லைக்குள்ள ஊடுருவவே முடியாது."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன என் இடமுன்னு பிரிச்சு பேசுற. துணைக்கு நீ இருக்க மாட்டியா? அவனுக்கு வெறி&amp;nbsp; பிடிச்சிருக்கு. தனியா நான் என்ன பண்ணுவேன். எனக்கு ஆறுதலா இருப்பேன்னு நினைச்சேன்" என்றாள் காளிகா.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னை நம்பறயில்ல.... அப்ப வீணா கவலைப்படாம இரு" என்று படுத்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"எப்படி கவலைப்படாம இருக்கிறது? முன்னாடியே நிறைய பேர அடைச்சு வச்சிருக்கான். அதான் பயமா இருக்கு."&lt;br /&gt;&lt;br /&gt;'ட்ரிட், ட்ரிட்' என சப்தத்தோடு செய்தி ஒன்று வான் வழியாக ஆராய்ச்சி கூடத்தில் நுழைந்தது. காளிகா படித்து விட்டு, ஹரிதரையும் படிக்க அழைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னன்னு..நீயே சொல்லு."&lt;br /&gt;&lt;br /&gt;"வின் க்ரூசின் நடவடிக்கைகள் உலக நன்மைகளுக்கு எதிராக&amp;nbsp; தினமும் வலுப்பதால் , அவனைக் கொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அவனால்&amp;nbsp; ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால், உடனடியாக தலைமை குழுவிற்கு தெரியப்படுத்தவும். உங்களால் அவன் கொல்லப்பட்டாலும், தலைமைக் குழு இவ்விஷயத்தில் அக்கறைக் காட்டாது என்பதை உறுதிப்படுத்துகிறோம்."&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப தான் எனக்கு நிம்மதி" என்று மகிழ்ந்தான் ஹரிதர். ஆனால் காளிகாவின் முகம் வாடியது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் இப்படி பண்றாங்க? வின் க்ரூஸ்&amp;nbsp; எவ்வளவு பெரிய ஜீனியஸ்! எவ்வளவு நல்லது செஞ்சான், தலைமைக் குழு எல்லாத்தையும் மறந்துட்டாங்களா? அவன கைது பண்ணா போதாதா!" என்று வருத்தப்பட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ வின் க்ரூசை பார்த்திருக்கியா?" என்று கேட்டான் ஹரிதர்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல. ஆனா அவனோட 'தி ஹ்யூமன்ஸ் இன் தி வெர்ல்டு(The Humans in the World)' புக்க படிச்சிருக்கேன். நீங்க படிச்சிருக்கீங்களா? எவ்வளவு அருமையான புக் தெரியுமா? பாவம்..அநியாயமா இப்படி கொல்ல சொல்லிட்டாங்களே!" என்று கேட்டாள் காளிகா.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ ஏன் வீணா கவலைப்படுற? அவன் செத்து அஞ்சு வருஷம் ஆச்சு."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன உளர்ற?"&lt;br /&gt;&lt;br /&gt;ஹரிதர் எதுவும் பேசாமல் தன்னுடைய 'பாம் டாப்(Palm Top)' எடுத்து சில படங்களை காண்பித்தான். அதில் ஹரிதரும், வின் க்ரூசும் ஒன்றாக இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"நாங்க இரண்டு பேரும் சின்ன வயசிலிருந்தே ப்ரென்ட்ஸ். எப்பவும் ரெண்டு பேரும் ஒன்னா தான் சுத்துவோம். எட்டு வருஷத்துக்கு முன்னாடி, உலகை ஆள துடிக்குதுன்னு ரோபோவை எல்லாம் அழிக்க சொல்லி தலைமைக் குழுவுல இருந்து உத்தரவு வந்தது. ஆனா வின் க்ரூஸ் ஆசையா, அவனை மாதிரியே தயாரிச்ச ரோபோவை அழிக்காம மறைச்சான். இந்த உண்மை இன்னும் ரெண்டு&amp;nbsp; பேருக்கு தான் தெரியும்.&amp;nbsp; ஒன்னு நானு, இன்னொன்னு மான்ட்லே..வின் க்ரூசோட அசிஸ்டன்ட். திடீரென்னு, ஒரு நாள் வந்து நான் ரோபோவை அழிச்சுட்டேன்னு சொன்னான். எனக்கு புரிஞ்சிடிச்சு... அழிந்தது ரோபோ இல்ல வின் க்ரூஸ் தான்னு. இப்ப நீங்க சொல்ற வின் க்ரூஸ் அந்த ரோபோ தான். அது மான்ட்லே கட்டுப்பாடுல இருக்குது."&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு, "வரட்டும். ரோபோவுக்கு நாம யாருன்னு காட்டலாம்" என்றாள் காளிகா.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க ப்ரென்ட் அவரு புக்குல எழுதி இருப்பதெல்லாம் உண்மையா? கடல், குளம், பச்சை பசேல் பிரதேசம், பனி மலை அப்புறம் குறிப்பா வழவழப்பான தோல் கொண்ட பொண்ணுங்க, மழை இதெல்லாம்&amp;nbsp; கற்பனை தானே? இலட்சக்கணக்கான ஜீவராசிங்க, கோடிக்கணக்கான மக்கள்...அவங்களுக்குள்ள ஏகப்பட்ட பிரிவு..சண்டை..கல்யானம்..இன்னும் நிறைய எழுதியிருக்காரு . படிக்கிறதுக்கு நல்லா இருந்துச்சு. ஆனா நம்ப தான் முடியல" என்றாள் காளிகா.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் கேட்ட ஹரிதர் சிரித்து விட்டு, "ஓ.பி.* 1234ல் வாழுற உலகர்களான(Worlans)&amp;nbsp; நமக்கு ஓ.மு.*வில் வாழ்ந்த மனிதர்களை பத்தி சொன்னா நம்ப முடியாது தான். மனிதர்கள் தான் நம்ம முன்னோர்கள்னு நீ நம்பற இல்ல!" என்று கேட்டான் ஹரிதர். &lt;br /&gt;&lt;br /&gt;"நம்புறேன் ஆனா...அவங்களுக்கு மட்டும் ஏன் தோல் மென்மையா இருந்துச்சு?" என்று கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்னா மனிதர்கள் வாழ்ந்தப்ப யூ.வி. கதிர்கள் இல்ல. நம்மள மாதிரி அவங்களால அந்த கதிர்களை தாங்க முடியாது. அதனால தான் அழிஞ்சுட்டாங்க. நாம அவங்கள விட அறிவு, உடல் வலிமையில பல மடங்கு முன்னேறிட்டோம். இது இயற்கை நமக்கு கொடுத்த பரிணாம பரிசு" எனறு ஹரிதர் சொல்லும் பொழுதே ரேடார் சிக்னல் ஒலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயையோ...ரோபோ வந்துடிச்சு போலிருக்கு." &lt;br /&gt;&lt;br /&gt;*ஓ.பி. ஓசோன் அழிவிற்குப் பின் (A.O. After Ozone destruction)&lt;br /&gt;*ஓ.மு. ஓசோன் அழிவிற்கு முன் (B.O. Before Ozone destruction).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-9202282541417378329?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/9202282541417378329/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=9202282541417378329' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/9202282541417378329'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/9202282541417378329'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2007/11/1_2678.html' title='ஊடுருவு சக்தி-1'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-8984575287199149462</id><published>2007-11-24T08:21:00.000-08:00</published><updated>2007-11-28T07:45:21.578-08:00</updated><title type='text'>ஊடுருவு சக்தி-2</title><content type='html'>"நீ என்ன பண்ணி வச்சிருக்க? கன்ட்ரோலே இல்ல. ஃபர்ஸ்ட் லெவல் செக்யூரிட்டி ஃபேஸ் தானா திறந்துடிச்சு" என்று கோபப்பட்டாள் காளிகா.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் தான் அப்படி ப்ரோகிராம் பண்ணினேன்." &lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ரோபோவுக்கு யோசிக்கிற திறன் நம்மள விட கம்மி. ரோபோ ஒரு ப்ராப்ளத்துக்கு சொல்யூஷன் தான் தேடும். ஆனா மனிஷனிலிருந்து வந்த நாம, அந்த ப்ராப்ளத்தையே அழிச்சுடுவோம். நேரா ரோபோ செகன்ட் ஃபேஸை நோக்கி வரும். இப்ப சுலபமா பின்னாடியிருந்து அட்டாக் பண்ணிடலாம்" என்றான் ஹரிதர்.&lt;br /&gt;&lt;br /&gt;"இது மான்ட்லோவுக்கு தெரிஞ்சா...என்ன நடக்கும்?"&lt;br /&gt;&lt;br /&gt;'க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட்' டால் மாபெரும் இயற்கை சீற்றழிவு ஏற்படும் என மனிதர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்கள் நினைத்த நேரத்திற்கு முன்பாகவே பிரச்சனை தொடங்கியது. துருவங்களில் உள்ள பனி மலைகள் உருகி, தாழ்வான நிலப்பரப்புகள் மூழ்கின. மழை பேய்த்தனமாய் வலுத்து சூறாவளியாய் மிரட்டியது. இயற்கை தனது அனைத்து கோர கைகளுடன், ஒரே நேரத்தில் உலகின் எல்லா பகுதிகளையும் தாக்கின. பூமியை நிலவில் இருந்து பார்த்திருந்தால் நீர் உருண்டையாகவே காட்சியளித்திருக்கும். எவராலும் தீர்க்க முடியாத தீவிரவாதம், மதப் பிரச்சனை, இனப் பிரச்சனை, மொழிப் பிரச்சனை என அனைத்திற்கும் தீர்வு காண்பது போல் முற்றுப்புள்ளி வைத்தது பேரழிவு. &lt;br /&gt;&lt;br /&gt;மழை ஓய்ந்தது என்று மகிழ்ந்தவர்கள், அது தான் கடைசி மழை என்று தெரிந்த பொழுது அதிர்ச்சியடைந்தார்கள். சேரும், சகதியுமாக இருந்த நிலம் மெதுவாக வற்றியது. அதோடு நில்லாமல் கடல் நீரும் வற்ற ஆரம்பித்தது. ஓசோன் லேயர் முழுவதும் அழிந்து விட்டதால், யூ.வி. கதிர்கள் நேரடியாக உலகை தாக்கியது. பச்சை மரங்கள் எல்லாம் எரியத் தொடங்கியது. உயிரனங்கள் வெப்பம் தாளாமல் கருகி சாம்பல் ஆனது. மூன்று பங்கு நீரால் ஆன உலகம், மணற்பாங்கான கிரகமாக மாறியது. தப்பி பிழைத்தவர்கள் எண்ணக்கூடிய அளவிலேயே இருந்தனர். வாழ்வின் லட்சியமே இன்னொரு மனிதனை காண்பது என்றாகி விட்டது. கிடைத்ததை உண்டு நாடோடியாக வாழ்ந்து  வந்தவர்கள் அனைவரும் சேர்ந்தனர். தங்களுக்கு உலகர்கள் என்று புதுப் பெயர் சூட்டிக் கொண்டுடார்கள். இனப் பெருக்கத்தின் அவசியத்தை உணர்ந்ததால் திருமணம் எனும் சமூக கட்டுப்பாடுகளை எல்லாம் தகர்த்தனர். உலகர்களின் சந்ததியினர், புதிய உலகின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு பிறந்தனர். விஞ்ஞானத்தை அரிச்சுவடியில் இருந்து தொடங்காமல் மனிதன் விட்ட இடத்தில் இருந்து தொடங்கியதால், விஞ்ஞானத்தில் அசுர வளர்ச்சி அடைந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;யூ.வி. கதிர்களின் வெப்பத்தைத் தாங்கும்படியாக அடுத்த தலைமுறை உண்மை உலகர்கள் தோன்றினார்கள். இந்த உண்மை உலகர்களின் தோற்றத்தில் இருந்து தான் ஓசோன் ஆண்டுகள் கணக்கிடப்பட்டன. ஓசோன் ஆண்டுகளின் தொடக்கம் பேரழிவிற்கு பின்னர், சுமார் முந்நூற்றைம்பது ஆண்டுகள் கழித்து ஆரம்பித்தது. தாகம், குளிர், பசுமை என்ற சில விஷயங்கள் அகராதியில் மட்டுமே இடம் பெற்ற புரியாத சொல்லாக மாறியது. பார்ப்பதற்கு மனிதர்கள்  போல் இருந்தாலும் உலகர்களின் உடல் ஏகப்பட்ட மாறுதல்கள் பெற்றிருந்தது. உலகர்களின் ஜீரன சக்தி அபிரிதமானது. எந்தவொரு உணவும் வயிற்றுக்குள் சென்றவுடன் வெந்து தாதுப் பொருட்களாகவும், வெற்று பொடிகளாக பிரிந்து விடும்.தாதுக்கள் சக்தியாக எலும்பு, நரம்பு என யாவற்றிற்கும் கொண்டு செல்லப்படும். பொடிகள் கழிவுகளாக நிலத்தில் விடப்பட்டன. மனிதனுக்கு இரத்தம் போல, உலகருக்கு தாதுப் பொருட்களால் ஆன படிமங்கள். இரத்தத்தைப் போல் படிமங்கள் அவ்வளவு சீக்கிரமாக வெளியேறாது.  அதனால் உலகரின் பலம் மனிதனை விட பல மடங்கு அதிகமாகயிருந்தது. உலகில் நீரே இல்லை. அதனால் உலகருக்கு வியர்வை, சிறுநீர் இல்லை. அதனால் அவர்கள் முன் பக்க உறுப்புகளின் வேலை பாதியாக குறைக்கப்பட்டு, ஒரே வேலைக்காக முழுதும் அர்ப்பனிக்கப் பட்டிருந்தன. அர்ப்பனிக்கப்பட்ட ஆணின் முன்னுறுப்புகளில் இருந்து உபலங்கள் வெளியேறும். தனது பயண தொடக்கத்தில் கெட்டியாக இருந்த உபலங்கள்(Crystals), உடல் சூட்டால் ஆவியாக ஊடுருவி கருப்பைக்குள் நுழையும். ஆவியின்  வழியில் கருக்கள் ஏதாவது இருந்தால், அதையும் அழைத்துக் கொண்டு கருப்பைக்குள் சென்று சிறு உலகரின் உயிரைத் தோற்றுவிக்கும்.  &lt;br /&gt;&lt;br /&gt;உலகர்கள் விண்வெளி ஆராய்ச்சியில்  மனித சாதனைகளை தூசி எனக் கருதும்படி பால் வீதியைக் கடந்தனர். அன்ட்ரோமேடா கேலக்சியின் நட்சத்திர குடும்பங்களை அலசினார்கள். 'ரெவிட்' என்றொரு நட்சத்திரத்திற்கு பெயர் வைத்தனர். பதினைந்து கிரகங்கள் ரெவிட்டை சுற்றி வந்தது. அதில் 'செலின் 21' என்று பெயர் வைத்த கிரகத்தில் தான் உலகர்கள் தண்ணீரை முதன் முதலாக பார்த்தனர். வின் க்ரூசின் புத்தகத்தை முன் வைத்து  விஞ்ஞானிகள் தண்ணீரின் குண நலன்களை பற்றி புகழ்ந்து தள்ளினார்கள். பூமிக்கு வயதாகி விட்டதால். 'செலின் 21'ற்கு நிரந்தரமாக குடிபெயர்ந்து விடலாமென யோசித்தனர். அதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்ய, வின் க்ரூசை  தலைமைக் குழு அழைத்தது. இந்த கருத்து மான்ட்லோவுக்கு பிடிக்கவில்லை. வின் க்ரூசின் ரோபோவை கொண்டு அனைவரையும் பூமியிலேயே சிறைப் பிடிக்க முயற்சி செய்தான். &lt;br /&gt;&lt;br /&gt;தலைமைக் குழுவில் இருந்தவர்களை நேரடியாக எதிர்க்க முடியாமல் வின் க்ரூசின் ரோபோவை கொண்டு எதிர்த்தான் மான்ட்லோ. கடைசியில் ரோபோவும் அழிந்து விட்டதால், நேரடியாக இறங்கி அனைவரையும் பூமியிலேயே சிறைப்படுத்த திட்டம் தீட்டினான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-8984575287199149462?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/8984575287199149462/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=8984575287199149462' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/8984575287199149462'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/8984575287199149462'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2007/11/2_4923.html' title='ஊடுருவு சக்தி-2'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-2705600976538653643</id><published>2007-11-24T08:20:00.000-08:00</published><updated>2007-11-28T07:06:44.297-08:00</updated><title type='text'>ஊடுருவு சக்தி-3</title><content type='html'>"ஒரு சந்தோஷமான செய்தி சொல்லனும்" என்றான் ஹரிதர்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்கிட்ட ஒன்னு கேட்கனும்" என்றாள் காளிகா.&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லட்டுமா, கேட்கிறியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, சொல்லு."&lt;br /&gt;&lt;br /&gt;"தலைமைக் குழுவுல இருக்கிற டாக்டர் லாராவுக்கும், மான்ட்லோவுக்கும் வாக்குவாதம் நடந்திருக்கு. அப்ப மான்ட்லோவ லாரா கொன்னுட்டாங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"யார் சொன்னா?" &lt;br /&gt;&lt;br /&gt;"மை ஸ்வீட்  ப்ரென்ட் ஜேனட்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஸ்வீட் ப்ரென்டா? சரி, உன் முழுப் பெயர் லெவின் ஹரிதரா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்கென்ன இப்ப?" &lt;br /&gt;&lt;br /&gt;"செலின் 21க்கு ஒரு குழு அனுப்ப போறாங்களாம். உன்னையும் வரச் சொல்லி தலைமைக் குழுவிலிருந்து கூப்பிட்டிருக்காங்க" என்றாள் காளிகா.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் போல."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் நீ போல! வின் க்ரூஸ் புக்குல கூட நீ வரத் தெரியுமா? 'எல்லாரும் என்னை அறிவாளின்னு சொல்றாங்க. ஆனா எங்கிட்ட அறிவாளி யாருன்னு கேட்டா , நான் லெவினை தான் சொல்லுவேன்'னு  உன்னை புகழ்ந்து எழுதியிருக்காரு. நீ தான் அந்த குழுவுல இடம் பெற சரியான ஆளு. நான் நீ வருவேன்னு ரிப்ளை பண்ணிட்டேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் என்னை கேட்காம இப்படி பண்ண? தலைமைக் குழுவுல இருக்கிறவங்களுக்கு என்னத் தெரியும்? எனக்கும் மான்ட்லோவுக்கும் பிரச்சனை இல்லன்னா, நான் கண்டிப்பா வெளிப்படையான ஆதரவு கொடுத்திருப்பேன். மான்ட்லோவோட குணம் மட்டும் தான் கெட்டுப் போச்சு. ஆனா கடைசி வரைக்கும் தெளிவா யோசிச்ச அறிவாளி அவன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த பூமியில இப்ப என்ன குறைச்சல்? தண்ணின்னு ஒன்னு இருந்துச்சு...இப்ப இல்ல. இதே மாதிரி 'செலின் 21'ன்லயும் தண்ணி இல்லாம போகும். திரும்பி எங்கயாச்சும் ஓடுனும். எவ்வளவோ கஷ்டத்த  அனுபவிச்ச மனுஷனுக்கு வராத யோசனை, ஒரு கஷ்டமும் தெரியாத தலைமைக் குழுவுக்கு வந்தது ரொம்ப கொடுமை. நான் சொல்றேன்..நாளைக்கே பூமியில மழை பெய்யும். நீங்க எல்லாரும் போங்க. நான் மட்டும் இருக்கேன்" என்று கோபமாக  வெளியேறி விட்டான். கடல், பூங்கா, அருவி, குளம், ஆறு, கோயில் என தனிமையான இடம் எதுவுமே இல்லாததால் ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்துக் கொண்டு தனியாக நிலவிற்கு சென்றான்.&lt;br /&gt;"என்ன ஜேனட் துரத்திட்டாளா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல.. ஆக்சிஜன் தீர்ந்துடுச்சு" என்று காலி சிலிண்டரை தூக்கிப் போட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"எப்ப போற?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆய்வுக் குழு எப்பக் கூப்பிட்டாலும்."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் எப்ப ஜேனட்கிட்ட போறேன்னு கேட்டேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் ஏன் அங்கெல்லாம் போறேன்? உனக்காக செலின் 21ல ஒரு அழகான இடம் பார்த்துட்டு வர்றேன்" என்று கண்ணடித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னை அனுப்பிட்டு நீ மட்டும் இங்க தனியா இருக்க போறியா?" என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்தாள் காளிகா. &lt;br /&gt;&lt;br /&gt;"நான் அப்படி சொல்லலியே! எங்க இருக்கலாம்னு நீ முடிவு பண்ணு. உங்கூட நான் இருக்கிறத முடிவு பண்ணிட்டேன்" என்று சிரித்துக் கொண்டே  காளிகாவின் கையை பிடித்துக் கொண்டான் ஹரிதர்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, ரொம்ப வழியாத. செலின் 21க்கு அனுப்புற ஆய்வுக் குழுவ கேன்சல் பண்ணிட்டாங்களாம். ஏன்னு சொல்லு?"&lt;br /&gt;&lt;br /&gt;'தெரியாது' என தோள் குலுக்கினான் ஹரிதர்.&lt;br /&gt;&lt;br /&gt;"பசிஃபிக் பள்ளத்தாக்குல இன்னும் நிக்காம மழைப் பெய்யுதாம். உலகம் முழுக்க மழை வருவதற்கு சான்ஸ் இருக்காம். நேத்து நீ கோபத்துல சொன்னது அப்படியே நடக்குது. ஒரு சின்ன மாறுதல். நீ மட்டும் உலகத்துல தனியா இருக்க மாட்ட. நாங்க எல்லாரும் இருப்போம்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய், சும்மா...விளையாடத."&lt;br /&gt;&lt;br /&gt;"நிஜமாப்பா!" என்று சொல்லி விட்டு, "சரி, இந்த சந்தோஷத்த கொண்டாட நாம மனிதர்கள் மாதிரி கல்யானம் பண்ணிக்கலாமா?" என்று கேட்டு ஹரிதரை கட்டி பிடித்துக் கொண்டாள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-2705600976538653643?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/2705600976538653643/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=2705600976538653643' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/2705600976538653643'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/2705600976538653643'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2007/11/3.html' title='ஊடுருவு சக்தி-3'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-2229077232033764895</id><published>2007-11-21T08:38:00.000-08:00</published><updated>2007-11-22T20:33:30.150-08:00</updated><title type='text'>கெளசி</title><content type='html'>கரண் வீட்டுக்குள் நுழையும் பொழுது, கெளசல்யாவும் கிஷோரும் எதையோ தேடிக் கொண்டிருந்தனர். கரண் வந்ததையும் கூட இருவரும் கவனிக்கவில்லை.  அவர்கள் இருவரின் முகத்தில் தெரிந்த பதற்றத்தைப் பார்த்த கரண் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். சாய்வு நாற்காலியில் அமர்ந்து செய்தி தாளைப் புரட்ட ஆரம்பித்தான். இது அவனக்கு மிக பிடித்தமான அன்றாட செயல் அல்லது பொழுதுப் போக்கு என்று கூட சொல்லலாம். &lt;br /&gt;&lt;br /&gt;"எங்கடா வச்ச? சரி, காலையில் கிடைச்சுடும். சாப்பிடலாம் வா" என்றவள் கரணைப் பார்த்து விட்டு, "நீங்க எப்ப வந்தீங்க?" என்று கேட்டாள் கெளசல்யா.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன தேடுறீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"என் ரஃப் நோட்ட காணோம்" என்று விசும்பினான் கிஷோர்.&lt;br /&gt;&lt;br /&gt;"ரஃப் நோட்டுக்கா...இவ்வளவு டென்ஷன்!" &lt;br /&gt;&lt;br /&gt;"அதுல அவன் வரைஞ்ச படம் எல்லாம் இருக்காம்."&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் கிஷோர் எழுந்ததும் அவன் தேடியதை கையில் வைத்தாள் கெளசல்யா. கரணும், கிஷோரும் எதையாவது தினமும் தேடிக் கொண்டேயிருப்பனர். கெளசல்யாவிற்கு இவர்கள் தொலைத்ததை தேடுவதற்கே நேரம் சரியாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இரவு பதினொரு மணிக்கு, கரண் எழுந்த பொழுது கெளசல்யாவை காணவில்லை. சமையலறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. தன் மனைவியின் கைப்பையை அவளுக்கு தெரியாமல் ஆராய்வதில், மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான் கரண். ஏனென்றால் கெளசல்யாவிற்கு தன் கைப்பையை யார் தொட்டாலும் பிடிக்காது. கெளசல்யா வருவதற்கு முன் கைப்பையை ஆராய்ந்து விட்டு, சமையலறைக்கு சென்றான். கெளசல்யாவின் தேம்பலை கேட்டு, சமையலறை வாசலிலேயே மறைந்து நின்றான்.உதட்டுக்கு பூசும் சிறு வண்ண சாயக் குப்பி(lipstick)  ஒன்று உடைந்திருந்தது. கண்களில் இருந்து வழிந்த நீரைத் துடைத்து விட்டு , தரையை சுத்தம் செய்தாள். கெளசல்யாவின் வினோதமான செயலைக் கண்டு வியந்தான் கரண். அழுதுக் கொண்டிருக்கும் அவளை எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாமென படுத்துக் கொண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;காலையில் அலுவலகம் செல்லும் வழியில், கரணிடம் வண்டியை நிறுத்த சொல்லி அவசரமாக போய் ஒரு புது சாயக் குப்பியை வாங்கி வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஏன் உடைக்கனும்?...ஏன் இப்ப இவ்வளவு அவசரமா வாங்கனும்?'  &lt;br /&gt;&lt;br /&gt;மாலை வந்தவுடன், கெளசல்யாவின் கைப்பையில் சாயக் குப்பி இருக்கிறதா என்று சோதித்தான். ஆனால், சாயக் குப்பிக்கு பதிலாக பேப்பர் வெயிட் ஒன்றிருந்தது. நேற்றிரவு அழுததைப் பற்றி கேட்கலாமா வேண்டாமா என்று மிகவும் யோசித்தான் கரண்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன பிரச்சன்னையாக இருக்கும்? எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்னு நினைக்கிறாளோ!'&lt;br /&gt;&lt;br /&gt;பலமுறை யோசித்து விட்டு, மனோதத்துவ நிபுனரை ஒருவரை சந்திக்க சென்றான். எல்லாவற்றையும் கேட்டு விட்டு,"உங்க மனைவிய பார்க்காம எந்த முடிவுக்கும் வர முடியாதே!" என்றார் மருத்துவர்.&lt;br /&gt; &lt;br /&gt;"அதில்ல சார்.. சின்ன சின்ன விஷயத்தையெல்லாம் நான் பெரிசு படுத்தறனோன்னு சந்தேகமா இருக்கு" என்றான் கரன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரம் மெளனத்திற்குப் பின், "அடிக்கடி உங்க மனைவி கோபப்படுவாங்களா? சாதாரன விஷயத்துக்கெல்லாம் டென்ஷன் ஆகி கத்துவாங்களா?" என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் இல்ல சார்."&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்குள்ள சண்டை நிறைய வருமோ?"&lt;br /&gt;&lt;br /&gt;"ரொம்ப சாஃப்ட் டைப் சார். அதிர்ந்து கூட பேச மாட்டா."&lt;br /&gt;&lt;br /&gt;"அவங்க அப்பா, அம்மாவுக்கு ஒரே பொண்ணா ?" என்று கேட்டார்  மருத்துவர்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம். ரொம்ப பாசமா இருப்பாங்க. இரண்டு பேரும் வேலைக்கு போறதால ஹாஸ்டலுல விட்டிருந்தாங்க. அதனால இன்னும் பாசமா இருப்பாங்க. அவளுக்கு அவங்க ஒரு குறையும் வச்சதில்ல."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ! அது சரி, நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ரொம்ப சந்தோஷமா தான் சார் இருக்கோம்" என்றான் கரண்.&lt;br /&gt;&lt;br /&gt;"சண்டை வராததாலோ, சிரிச்சு பேசறதாலோ நீங்க சந்தோஷமா இருக்கிறதா சொல்ல முடியாது. உங்கள மாதிரி ஆளுங்ககிட்ட இருக்கிற பிரச்சனையே, கூடவே இருப்பீங்களே தவிர அவங்களுக்குள்ள என்ன நடக்குதுன்னு தெரியாது. எப்பவும் மெட்டீரியலிஸ்டிக்காவே பேசிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவா ஹாஸ்டலுல இருந்தவங்களுக்கு க்ளெப்டோமேனியா(kleptomania) வர்றதுக்கு சான்ஸ் இருக்கு. எல்லோரும் இருந்தாலும், தனக்கு யாருமே இல்லன்னு நினைச்சிப்பாங்க. இந்த மாதிரி ஏக்கம் வரும் பொழுதெல்லாம், மன அழுத்தம் அதிகமாகும். அந்த சமயத்துல, ஏதாவது ஒரு அற்பமான பொருள திருடிக்குவாங்க. பேனா, பென்சில், லிப்ஸ்டிக் அப்புறம்  பேப்பர் வெயிட் இப்படி ஏதாவது எடுத்த பிறகு தான் அவங்க மனம் சமாதானம் ஆகும். இது திருட்டு இல்ல. சரியா சொல்லனும்னா, அவங்கள சுத்தியிருக்கிறவங்களோட அக்கறையின்மை.  அவங்கள ஆறுதலா, அவங்க மனம் திருப்தியடையுற மாதிரி ட்ரீட் பண்ணாலே போதும். தானா இந்த பழக்கம் மறைஞ்சுடும்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்க மனைவி தான் இப்படி திருடுறோம்னு நினைச்சு வருத்தப்படுறாங்கன்னு நினைக்கிறேன். அதனால தான் அழுவுறாங்க. நீங்க சொன்ன லிப் ஸ்டிக் கூட அப்படி தான் திருடி, அந்த வருத்தத்துல உடைச்சு, எடுத்த இடத்திலேயே வைக்க புதுசு வாங்கியிருக்காங்க" என்று சொல்லி விட்டு, "இதெல்லாம் ஒரு அசம்ப்ஷன் தான். வேறு ஏதாவது பிரச்சன்னையா இருந்தா நேர்ல கூட்டிட்டு வாங்க. பார்க்கலாம்" என்றார் மருத்துவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரச்சனையினை எப்படி அனுகலாம் என்று யோசித்தான் கரண். அலுவலுக நேரம் முடிய பத்து நிமிடங்கள் இருந்த பொழுது, கெளசல்யாவின் பெயரிற்கு பூங்கொத்து ஒன்று அனுப்பி வைத்தான். கூடவே, 'உன்னையும், உன் அன்பையும் எதிர்நோக்குபவன்' என்று குறிப்பும் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கெளசல்யாவின் மேஜை மேலிருந்த தரை வழி தொலைப்பேசி ஒலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"மேடம், பொக்கே கிடைச்சுதுங்களா? உங்களுக்காக உங்க ஆபீஸ் வாசல்ல காத்திருக்கேன்" என்று குரல் மாற்றி பேசி விட்டு அழைப்பை துண்டித்தான் கரண்.&lt;br /&gt;&lt;br /&gt;'வர்றேன்டா' என்று மனதில் நினைத்துக் கொண்டே கிளம்பினாள் கெளசல்யா. அலுவலக வாசலில் கரண் வண்டியோடு நின்று கொண்டிருந்தான். &lt;br /&gt;"போலாமா கெளசி."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல..நீங்க போங்க. எனக்கு ஒருத்தவன் பொக்கே கொடுத்தான். அவன் முகத்த பார்த்துட்டு வர்றேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"அதான் தினமும் பார்க்கிறீயே!"&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்களா போன் பண்ணீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"அது சரி. உன்ன ஏமாத்துறதுக்கு ஒரு கர்சீப் போதும் போல இருக்கு!" என்று கேட்டான் கரண். கெளசல்யா சிரித்துக் கொண்டே வண்டியில் ஏறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாய்வு நாற்காலியில் அமருவதற்கு பதிலாக சமையலறை கட்டில் சாய்ந்து, கெளசல்யாவுடன் பேசிக் கொண்டே செய்தி தாள் படித்தான். தாயின் முகத்தை தேடும் சிறு குழந்தை போல, கெளசல்யாவையே சுற்றி வந்தான் கரண். இரவில் தூங்கும் பொழுது கூட, கெளசல்யாவின் கையை இறுக பிடித்துக் கொண்டு தான் தூங்கினான் கரண். எப்பொழுதும் கெளசல்யாவை தனியாகவே விடுவதில்லை கரண்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னை ஆபீஸ்ல எல்லாம் கிண்டல் பண்றாங்க. என்ன செஞ்ச? உன் புருஷன் இப்படி உன்னையே சுத்தி வர்றாருன்னு கேட்கிறாங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"அதுங்க கிடக்குதுங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது அதுங்களா!" என்று சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"கெளசி..உனக்கு ஏதாவது நிறைவேறாத ஆசை இருக்கா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல."&lt;br /&gt;&lt;br /&gt;"ப்ச்...சும்மா சொல்லு."&lt;br /&gt;&lt;br /&gt;கெளசல்யா யோசித்து விட்டு, "நான் பைக் ஓட்ட கத்துக்கிட்டு, உங்கள பின்னாடி வச்சு ஓட்டனும்" என்று கண் சிமிட்டி புன்னகைத்தாள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-2229077232033764895?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/2229077232033764895/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=2229077232033764895' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/2229077232033764895'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/2229077232033764895'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2007/11/blog-post_21.html' title='கெளசி'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7850939883982974148.post-181729339496921339</id><published>2007-11-20T09:26:00.000-08:00</published><updated>2007-12-04T09:10:32.052-08:00</updated><title type='text'>புதிர் கோணங்கள்</title><content type='html'>ஊரே ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்க, லிண்டா மட்டும் உறக்கம் வராமல் எதிர் வீட்டு மாடியைப் பார்த்தவாறு புகைத்துக் கொண்டிருந்தாள். சிறு வயதிலேயே தந்தையை இழந்த லிண்டா, தன் தாயையும் மூன்று வருடங்களுக்கு முன் இழந்திருந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;யாருமற்ற மாளிகையில், சரியாக கண் தெரியாத வயதில் மூத்த வேலைக்காரியுடன் தனிக் காட்டு இளவரசியாக வாழ லிண்டா பழகிக் கொண்டாள்.பிரபு குடும்பங்களுக்கு நிகரான பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசவள். போதா குறைக்கு கெளரவம் மிக்க அரசாங்க வேலையில் வேறு வீற்றிருந்தாள்.இறைவன் அழகிலும் குறை வைக்கவில்லை. கால் நூற்றாண்டை நெருங்கும் வயது இருக்கும்.&lt;br /&gt;       &lt;br /&gt; எதிர் வீட்டு மாடியில் விளக்கு இரண்டு முறை ஒளிர்ந்து, மீண்டும் காரிருள் பரப்பியது. இதைக் கண்ட லிண்டாவின் முகம் பிரகாசித்தது. லிண்டா கையுறையை தேடி அணிந்து, பனி படர்ந்த இருளில் இறங்கி நடந்தாள். எதிர் வீட்டில் இருந்து பதுங்கி வந்த உருவம் லிண்டாவை இறுக கட்டி பிடித்துக் கொண்டது.&lt;br /&gt;  "ஸ்வீட்டி...இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்க."&lt;br /&gt;  "இன்னிக்கு மட்டும் தானா?" என்று செல்லமாக கோபித்துக் கொண்டாள் லிண்டா.&lt;br /&gt;  "என்னிக்கும் என் தேவதை அழகு தான். ஆனா இன்னிக்கு பேரழுகு."&lt;br /&gt;  "சரி, சரி போதும். எல்லாம் வந்துட்டிருப்பாங்க. நாம தான் கடைசியா போகப் போறோம்."&lt;br /&gt;  "முகமூடி எடுத்துட்டு வந்தியா?"&lt;br /&gt;  "மறப்பனா!!" என்று கேட்டாள் லிண்டா.&lt;br /&gt;இருவரும் திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தனர். ஒருவர் கையை ஒருவர் இணைத்துக் கொண்டு, குளிருக்கு அடக்கமாக ஒட்டியபடி நடந்தனர். நட்சத்திர மதிப்பு வாய்ந்த ஹோட்டல் பின்புறம் சென்றனர். முத்தமிட்டுக் கொண்டே, முகமூடியை எடுத்து அணிந்தனர். ஹோட்டலின் பின்புற கதவை திறந்துக் கொண்டு, மெதுவாக சமையலறையைக் கடந்து நடு ஹாலிற்கு வந்தனர். ரம்மியமான மெல்லிசையின் பின்னணியில் நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்தியின் ஒளியில் புதிய உலகம் ஒன்று உருவாகி இருந்தது. முகமூடி அணிந்த பலர் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தனர். இரவு மணி பன்னிரெண்டு முடிந்து அரை மணி நேரம் தான் கழிந்திருந்தது.ஆடி ஆடி களைத்தவர்கள் அங்கங்கே வைக்கப்பட்டிருந்த மது பான அரங்குகளில் பணம் செலுத்தி பானம் வாங்கி பருகினர்.&lt;br /&gt;நாற்பதை தொட்ட ஜெனிஃபருக்கு மூச்சு வாங்கியது. தள்ளாடியபடியே அருகில் இருந்த நாற்காலியில்  அமர்ந்தாள்.&lt;br /&gt;  "இதுங்க அடிக்கிற கூத்த கண்ணால பார்க்க முடியில. எங்கம்மாவுக்கு மட்டும் உடம்பு சரியா இருந்தா இந்த வேலையை என்னிக்கோ விட்டிருப்பேன். சமூகத்துக்கு விரோதமா இங்க நடக்கிறத அரசும் கண்டுக்கறதில்ல. எங்கிட்ட மட்டும் அதிகாரம் இருந்துச்சுன்னா, எல்லார் முகமூடியும் அவிழ்த்துட்டு பகல்ல ரோட்டுல ஓட விடுவேன்" என்று பொறிந்து தள்ளினான் க்ரூக்ஸ்.&lt;br /&gt;  "மெதுவா பேசு. பார்க்கிற வேலையும் போயிடும். யார் எப்படி போன நமக்கென்ன? பணம் ஒழுங்கா வருதான்னு பாரு. அம்மாவுக்கு மருந்து வாங்கனுமில்ல!" என்று க்ரூக்சுடன் அரங்கில் நின்றிருந்த ஹென்றி கேட்டான்.&lt;br /&gt;  "ச்சே...இந்த அரசாங்க அதிகாரி எல்லாம் என்ன பண்றாங்க?"&lt;br /&gt;  "மெதுவா பேசு. அவங்களும் இங்க தான் இருப்பாங்க. ஏன் முகமூடி போட்டிருக்காங்கன்னு தெரியல? தடுக்க வேண்டிய அவங்களும் இங்க தான் இருப்பாங்க."&lt;br /&gt;  "உடம்புல போட்டிருக்கிற  துணி அவிழ்ந்தா கூட கவலைப் படமாட்டாங்க. ஆனா முகமூடி மட்டும் அவிழாமா கவனமாக பார்த்துப்பாங்க" என்று சிரித்தான் க்ரூக்ஸ்.&lt;br /&gt;  "எக்ஸ்க்யூஸ் மீ. ரெண்டு க்ரேப்ஸ்" என்றாள் லிண்டா.&lt;br /&gt;லிண்டாவின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான் க்ரூக்ஸ். ஹென்றி லிண்டாவின் வேன்டுகோளை ஏற்றான்.&lt;br /&gt;  "இன்னிக்கு  நான் ஏன் லேட்னு நீ கேட்கவே இல்லையே?" என்று லிண்டாவின் முதுகை தொட்டாள் ஜெனிஃபர்.&lt;br /&gt;  "உங்க புருஷன் எப்பவும் போல குடிச்சுட்டு வந்து பிரச்சனை பண்ணியிருப்பார்" என்றாள் லிண்டா.&lt;br /&gt;  "அவன் கிடக்கிறான். என் பொண்ணுக்கு உடம்பு சரியில்ல."&lt;br /&gt;க்ரூக்ஸ் முகமூடி அணிந்த இருவரையும் கண்களால் அலசிக் கொண்டிருந்தான். லிண்டா இரண்டு டம்ளர்களை எடுத்துக் கொண்டு நடந்தாள்.&lt;br /&gt;  "ஹலோ..மீதி பணத்த வாங்கின்னு போங்க" என்று கை தட்டினான் க்ரூக்ஸ்.&lt;br /&gt;  "போயிட்டு போறாங்கன்னு இல்லாம, கூப்பிட்டு கொடுடா" என்று முனறினான் ஹென்றி. க்ரூக்ஸ் திரும்பி ஹென்றியை முறைத்தான்.&lt;br /&gt;  "பரவாயில்ல...நீங்களே வச்சுக்கிங்க" என்று புன்னகைத்தாள் லிண்டா. முகமூடி அணிந்திருந்தாலும் லிண்டாவின் புன்னகை அவள் கண்களில் பேரொளியாக தெரிந்தது. அந்த பேரொளி ஏற்படுத்திய பிரமிப்பில் இருந்து மீளும் முன், "முதலாளி எங்களுக்கு சம்பளம் தர்றார்" என்றான் ஹென்றி.&lt;br /&gt;  "என்ன அதிசயமா  இருக்கு?இப்பெல்லாம் சர்வர் யாரும் டிப்ஸ் வாங்குறதில்லையா?" என்று எகத்தாளமாக கேட்டாள் ஜெனிஃபர்.&lt;br /&gt;  "வாங்குறோம். ஆனா உங்கள மாதிரி இருக்கிறவங்க கிட்ட வாங்குறதில்லை" என்றான் க்ரூக்ஸ்.&lt;br /&gt;  "எங்கள மாதிரின்னா?" என்று கோபத்தோடு குரலை உயர்த்தினாள் ஜெனிஃபர்.&lt;br /&gt;  "ஜெனிஃபரின் குரல் உயர்ந்ததை எண்ணி சிரித்தான் க்ரூக்ஸ். வறுமையின் சாயலும், நேர்மையின் கம்பீரமும் க்ரூக்சின் முகத்திற்கு தனி அழகை தந்தது. க்ரூக்சின் முகம் அவனது குறும்பு சிரிப்போடு லிண்டாவின் மனதில் பதிந்தது.&lt;br /&gt;  "அத நான் என் வாயால வேற சொல்லனுமா?"&lt;br /&gt;  "எங்கள பார்த்தா உனக்கு அவ்வளவு கேவலமா இருக்கா? நாங்க நினைச்சா உனக்கு இந்த வேலை கூட  இருக்காது."&lt;br /&gt;  "என்ன பண்ணுவீங்க?" என்று மேலும் சிரித்தான் க்ரூக்ஸ்.&lt;br /&gt;  "தைரியம் இருந்தா, உன் பெயர சொல்லு பார்ப்போம்."&lt;br /&gt;  "வின்சென்ட் க்ரூக்ஸ். உங்க பெயரையும் தைரியமா சொல்லுங்க பார்ப்போம்."&lt;br /&gt;  "ப்ளீஸ்...வாங்க நம்ம அறைக்கு போலாம்" என்று லிண்டா ஜெனிஃபரின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்.&lt;br /&gt;அங்கிருந்த மற்றவர்கள் இரண்டிரண்டு பேராக சேர்ந்து அவர்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றனர்.&lt;br /&gt;  &lt;br /&gt;ஓரின சேர்க்கை. ஆணும், ஆணும் அல்லது பெண்ணும்,பெண்ணும் புணரும் புதிய கலாச்சாரம் துவங்கிய காலக்கட்டம் அது. இதை சமூகத்தில் அருவருப்பான சங்கதியாக பாவித்தனர். அரசு இப்பழ்க்கத்தை சட்ட விரோதம் என அறிவித்திருந்தது.ஆனால் சில ஹோட்டல்கள் வியாபார நோக்கில் ஓரின சேர்க்கையாளர்கள் ரகசியமாக சந்திக்க வசதி ஏற்படுத்தி தந்திருந்தது.&lt;br /&gt;  &lt;br /&gt;அடுத்த நாளே க்ரூக்ஸ் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டான். அதை தாயிடம் சொல்லும் தைரியம் இல்லாததால், இரயில் நிலைய பிளாட்பார பென்ச்சில் போஇ படுத்துக் கொண்டான் க்ரூக்ஸ். வேலை போன கவலையை விட, மீண்டும் அந்த பெண்ணின் அழகிய கண்களை எப்பொழுது பார்ப்போம் என்ற கவலை மிகுதியாக இருந்தது. வேலை இல்லாத காரணத்தால், எப்பொழுதையும் விட சீக்கிரமாகவே அன்று வீட்டிற்கு சென்றான் க்ரூக்ஸ். தாயை தொந்தரவு செய்ய விருப்பமில்லாமல், பின்னால் தோட்டத்து மர ஊஞ்சலில் படுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தான். ஜன்னல் ஓரமாக கடந்து செல்லும் பொழுது, சிரிப்பொலி கேட்டு ஜன்னல் கதவை கை விட்டு திறந்து பார்த்தான். க்ரூக்சின் தாய், பக்கத்து வீட்டுக்காரியின் மடியில் அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார். இருவரும் தன்னை மறந்த நிலையில் இருந்ததோடு மட்டுமில்லாமல், ஆடைகள் இன்றியும் இருந்தனர். சட்டென்று கதவை மூடி விட்டு தலையை பிடித்துக் கொண்டான். மிகவும் நொந்து, பிரமை பிடித்தவன் போல் நடக்க ஆரம்பித்தான். எங்கு சென்றோம், என்ன செய்தோம் என்ற பிரக்ஞை இல்லாமல் பல மணி நேரங்கள் கழித்து வீட்டிற்கு நடைப்பிணமாக வந்து சேர்ந்தான்.&lt;br /&gt;  &lt;br /&gt;அடுத்த இடி தலையில் விழத் தயாராக இருந்தது. அவனது தாய் தற்கொலை செய்துக் கொண்டாள். எவ்வளவு மருந்துகள் சாப்பிட்டும் நோய் குணமடையாததால் இறந்து விட்டாள் என அக்கம்பக்கத்தினர் சொன்னார்கள். க்ரூக்சின் வேதனை அவன் கண்களில் இரண்டு மெல்லிய தண்ணீர் கோடுகளை வரைந்தது.&lt;br /&gt;  &lt;br /&gt;அழுது அழுது வீங்கிய கண்களுடன் பக்கத்து வீட்டுக்காரி க்ரூக்ஸ் அருகில் வந்தாள்.&lt;br /&gt;  "நீ வந்துட்டு போனது எங்களுக்கு தெரியும். அதான் உங்கம்மா ரொம்ப உடைஞ்சு போயிட்டா? இனிமேல் உன் முகத்தில் எப்படி முழிக்கிறதுன்னு அவசரப்பட்டுட்டா. நான் எவ்வளவோ சொன்னேன். 'இருபது வருஷமா பழகிகிட்டு இருக்கோம்.ஒரு நாள் எப்படியும் தெரிய தான போகுது.. வருத்தபடாத..எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்னு' சமாதானம் சொல்லிட்டு போனேன்."&lt;br /&gt;  'என்ன..இருபது வருஷ பழக்கமா?' என்று மேலும் அதிர்ச்சிக்கு உள்ளானான்.&lt;br /&gt;  "இத்தனை நாள் என் உயிரா இருந்தவளே போயிட்டா. ஆனா நீ அவள பத்தி தப்பா நினைச்சிட கூடாதுன்னு தான் உங்கிட்ட பேசுறேன். நீ ரொம்ப சின்னப் பையன். உனக்கு சொன்னாலும் புரியாது."&lt;br /&gt;க்ரூக்சிற்கு அவள் பேசியது மேலும் வெறுப்பை அதிகரிக்க தான் வைத்தது. மேலும், இருபத்தி ஏழு வயது ஆன தன்னை சிறுவன் என்று சொன்னது அவனுக்கு எரிச்சலை உண்டாக்கியது.&lt;br /&gt;  "உங்கம்மாவும், நானும் குழந்தையில் இருந்தே ரொம்ப நெருங்கிய தொழிங்க. அவளுக்கு பதிமூனு வயசுலயும், எனக்கு பதினாறு வயசுலயும் கல்யாணம் ஆச்சு. பதினாலு வயசுல நீ பிறந்த. நீ பிறக்கிறப்ப உங்கம்மாவே ஒரு குழந்தை. 'ப்ளேக்' வந்து உங்கப்பா இறந்துட்டாரு. இருபது வயசுலேயே உங்கம்மா விதவை ஆயிட்ட. என் புருஷனுக்கு நான் நாலாவது மனைவி. அவருக்கு ஏழு குழந்தைங்க. கல்யாணத்தப்ப அவருக்கு அம்பத்தி ஆறு வயசு. எங்களுக்கு குழந்தை  இல்ல. ஏன்னா..அவரால முடியலன்னு கூட சொல்லலாம்.&lt;br /&gt;  உங்கம்மாவும், நானும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா இருந்தோம். எதேச்சையா நடந்த ஒன்றிரண்டு ஸ்பரிசங்கள் எங்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்திச்சு. இப்படி ஆரம்பிச்சதுக்கு நாங்க காலப் போக்கில் அடிமை ஆயிட்டோம்.&lt;br /&gt;  உங்கம்மா கூட எத்தனையோ தடவ தப்பு பண்றோம்னு வருத்தப்படுவாங்க. அப்பெல்லாம் நான் தான் திரும்பி அவ மனச மாத்தி சுயநலமா என் உணர்ச்சிகளுக்கு வடிகால தேடிக்கிட்டேன். எல்லா தப்பும் என் மேல தான். நான் தான் பாவி. உங்கம்மா ரொம்ப நல்லவ. அவள மட்டும் தப்பா நினைச்சிடாத" என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.&lt;br /&gt; 'வந்துட்டாங்க...பெருசா பேச. எனக்கெல்லாம் உணர்ச்சி இல்ல. நான் கட்டுப்பாடா இல்ல? தப்பு பண்ணிட்டு, தப்பில்ல...நல்லவன்னு சொல்லிட்டா, நல்லவள் ஆயிட முடியுமா?'&lt;br /&gt;  &lt;br /&gt;தனிமையும், வேலையின்மையும் க்ரூக்சை பாடாய்ப்படுத்தியது. அடுத்த வேலை உனவிற்கே வழியில்லாமல் க்ரூக்ஸ் தவித்தான்.   'அப்பா இறந்தப்பா இருபது வயசு பொண்ணா அம்மாவும் இப்படி தான என்னை வச்சுக்கிட்டு தவிச்சிருப்பாங்க?' என்று மனதின் ஓரத்தில் ஒரு கேள்வி எழுந்தது.&lt;br /&gt;  'எல்லாம் சரி தான். ஆனாலும் அவங்க பண்ணது தப்பு' என்று மனதின் இன்னொரு ஓரம் சொன்னது.&lt;br /&gt;  &lt;br /&gt;அரசு வேலைக்கான விளம்பரம் செய்தி தாளில் வந்திருந்தது. அந்த வேலைக்கான விண்ணப்ப படிவம் ஒன்றை வாங்கி பூர்த்தி செய்து, சான்றுகளை சரி பார்த்து, அரசு அதிகாரியிடம் ஒப்புதல் பெற சென்றான். கொடுப்பவரின் முகத்தை பார்க்காமலே படிவத்தை வாங்கினாள் லிண்டா. படிவத்தில் இருந்த பெயர் ஏதோ நெருட க்ரூக்சின் முகத்தைப் பார்த்தாள்.&lt;br /&gt;  'அதே பிரகாசிக்கும் கண்கள்.'&lt;br /&gt;  'வேலைக்கு வந்திருக்கியா? எப்படி கிடைக்குதுன்னு பார்க்கிறேன்.'&lt;br /&gt;  "பெயர்?"&lt;br /&gt;  "வின்சென்ட் க்ரூக்ஸ்."&lt;br /&gt;  "முன்னாடி எங்க வேலை பார்த்தீங்க?"&lt;br /&gt;  "ஹோட்டலுல சர்வர இருந்தேன்."&lt;br /&gt;  "ஏன் அந்த வேலைய விட்டீங்க?"&lt;br /&gt;  "விடலை.. அனுப்பிட்டாங்க."&lt;br /&gt;  "என்னது? அனுப்பிட்டாங்களா..! ஏன்?" என்று குரலில் ஆச்சரியத்தை காட்டினாலும் உள்ளூற மகிழ்ந்தாள்.&lt;br /&gt;  "என் நேர்மையில் குறை கண்டுபிடிச்சாங்களாம்."&lt;br /&gt;  "ஹலோ... என்ன சார் இப்படி பொறுப்பில்லாம பதில் சொல்றீங்க. என்னை மன்னிச்சிடுங்க. இது ரொம்ப பொறுப்பான வேலை சார் இது" என்று படிவத்தை தள்ளி விட்டாள் லிண்டா. படிவம் மேஜையின் மீது இருந்து கீழே விழுந்தது. க்ரூக்ஸ் எந்த சலனமும் இல்லாமல் லிண்டாவை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;  "ப்ளீஸ்...இடத்த காலி பண்றீங்களா?"  என்று மேஜையை தட்டினாள். க்ரூக்சின் பார்வை தீட்சன்யத்தைப் பொறுக்க முடியாமல் தடுமாற ஆரம்பித்தாள்.&lt;br /&gt;  "வேணும்னா ஒன்னு பண்ணுங்க. அந்த ஹோட்டல் மேனஜர் கிட்ட நன்னடத்தை சான்றிதழ் வாங்கிட்டு வாங்க. ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கிறேன்" என்று லிண்டா சொன்னதை காதில் வாங்காமல், பையிலிருந்து சில்லறையை எடுத்து மேஜை மீது வைத்தான் க்ரூக்ஸ்.&lt;br /&gt;  "அன்னிக்கு வாங்காமலே போயிட்டீங்க!" என்று சிரித்து விட்டு க்ரூக்ஸ் போய் விட்டான்.&lt;br /&gt;  லிண்டாவிற்கு தூக்கி வாரிப் போட்டது. அவள் சுதாரிக்கும் முன், க்ரூக்ஸ் அங்கிருந்து வெளியேறிருந்தான். க்ரூக்ஸ் ஏதாவது தன்னைப் பற்றி வெளியில் சொல்லி, தன்னை அவமானப்படுத்தி விடுவான் என நடுங்கினாள் லிண்டா.&lt;br /&gt;&lt;br /&gt;  "அன்னிக்கு ஒருத்தவன் நம்மக்கிட்ட வம்பு பண்ணானில்ல..அவன் என்னை கண்டுபிடிச்சிட்டான். அவன பார்த்து, உன்மைய வெளியில சொல்லாமா இருக்கிறதுக்கு எவ்வளவு பணம் தரனும்னு கேட்க அவன் வீட்டுக்கு போனேன். ஆனா அவன் யாருகிட்டயும் சொல்லாம ஊர விட்டு ஓடிட்டான்" என்று மகிழ்ச்சியாக சொன்னாள் லிண்டா.&lt;br /&gt;  "சரி, அவன் ஒழிறான் விடு. புதுசா ஒரு முகமூடியை பெரிசா வாங்கனும்" என்று சொல்லியவாறே முகமூடி அணிந்து கொண்டே ஹோட்டல் பின்புற கதவில் நுழைந்தனர்.&lt;br /&gt;வேறு ஏதவாது ஊரில் வேலை தேடி கொள்ளலாம் என்று க்ரூக்ஸ் யாரிடமும் சொல்லமால் கிளம்பி விட்டான். இரண்டு நாட்கள் அலைச்சலுக்குப் பின், ரிச்சர்ட் ஹாரி என்ற ஒரு மருத்துவரிடம் வேலையில் சேர்ந்தான். அங்கேயே தங்கி, மருத்துவமனையை  பராமறிக்கும் பெரிய வேலை. ஆனால் மருத்துவமனை மூன்று அறைகளோடு சிறியது தான். அதில் ஒரு அறை முழுவதும் புத்தகங்கள் இருந்தது. இன்னொரு அறையில் கட்டில் போடப்பட்டிருந்தது. மீதமிருந்த அறையில் எப்பொழுதும் மருத்துவர் மட்டும் தனியாக உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார். ஒரு நோயாளி கூட, க்ரூக்ஸ் வேலையில் சேர்ந்த நாளில் இருந்து வரவில்லை. இதுவரை ஒருவர் கூட மருத்துவரிடம் வந்ததில்லை என பிறகு தான் தெரிந்து கொண்டான். அந்த ஊரில் யாருக்கு எந்த பிரச்சனை வந்தாலும் பாதிரியாரிடம் தான் சென்றனர். தனக்கு சம்பளம் தருவாரா என க்ரூக்சுக்கு சந்தேகம் எழுந்தது. ஆனால் ரிச்சர்ட் சொன்ன சம்பளத்தை விட அதிகமகவே தந்தார். ஒன்றும் வேலை இல்லாததால் க்ரூக்சும் அங்கிருக்கும் ஏதாவது புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான். நாளடைவில் க்ரூக்சும், ரிச்சர்டும் நல்ல நண்பர்கள் ஆகி விட்டனர்.&lt;br /&gt;  &lt;br /&gt;க்ரூக்ஸ் வேலைக்கு சேர்ந்த ஒன்றரை மாதத்திற்கு பின், முதல் தடவையக இரண்டு நபர் ரிச்சர்ட்டை காண வந்திருந்தனர். க்ரூக்சும், ரிச்சர்ட்டும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அர்த்தமாக சிரித்துக் கொண்டனர்.&lt;br /&gt;குரலை செருமிக் கொண்டு, "சொல்லுங்க என்ன பிரச்சனை?" என்று கம்பீரமாக கேட்டான் ரிச்சர்ட். இருவரும் எதுவம் பேசாமல் தலை குனிந்தவாறே இருந்தனர். மெதுவாக அதில் ஒருவன்  தயங்கியபடியே, " நாங்க இரண்டு பேரும் தொழிற்சாலையில் வேலை செய்றோம். எங்களுக்கு யாரும் இல்ல. ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் கொஞ்சம் தான் பணம் கிடைக்கும். இந்த ஊர்ல என் கஷ்டம் புரிந்த ஒரே ஆளு இவன் தான். ஏன்னா..இவனும் அதே கஷ்டம் தான் படுறான். அதே நிறைவேறா கனவுகள். ஓரே எதிர்பார்ப்புகள்.இப்படி தான் எங்க நெருக்கம் வளர்ந்துச்சு" என்று நிறுத்தினான்.&lt;br /&gt;மற்றொருவன், "அப்படியே..நாங்க மனசாலும், உடம்பாலும் ஒன்னு சேர்ந்துட்டோம். எல்லாம் நல்லப் படியாக தான் நடந்துட்டிருந்துச்சு. ஆனா இந்த விஷயம் எப்படியோ நம்ம பாதிரியாருக்கு தெரிஞ்சிடிச்சு. இப்படி பண்ணா சீக்கிரம் செத்துருவீங்கன்னு மிரட்டினாரு. இனிமே நாங்க இரண்டு பேரும் பேசக் கூடாதுன்னு சொல்லிட்டாரு" என்றான்.&lt;br /&gt;  "வர..வர..தனி மனித விஷியங்களில் எல்லாம் பாதிரியார் தலையிட ஆரம்பிச்சுட்டாரு. சரி, இங்க எதுக்கு வந்தீங்க?" என்று கேட்டான் ரிச்சர்ட்.&lt;br /&gt;  "எங்களுக்கு ஏதாவது நோய் வருமான்னு தெரிஞ்சிக்கறதுக்காக?" என்றான் முதலாமவன்.&lt;br /&gt;  "அதில்ல...நாங்க சந்திக்கிறதுக்கு எங்களுக்கு ரகசியமா ஒரு இடம் வேணும். உங்களுக்கும் பாதிரியாருக்கும் ஆகாதுன்னு கேள்விப்பட்டோம்" என்றான் இரண்டாமவன்.&lt;br /&gt;  "பக்கத்து ரூம் காலியா தான் இருக்கு. எப்ப வேணும்னாலும்  உபயோகப்படுத்திக்கிங்க" என்றான் ரிச்சர்ட்.&lt;br /&gt;  "பணம்..ஏதாவது?"&lt;br /&gt;  "நான் ஒன்னும் ஹோட்டல் வச்சில்ல" என்றான் ரிச்சர்ட்.&lt;br /&gt;அவர்கள் சென்றவுடன்,"நம்ம நிலைமைய பர்த்தியா?" என்று சிரித்தான் ரிச்சர்ட்.&lt;br /&gt;  "நீங்க ஏன் இப்படி தப்புக்கு உடந்தையா இருக்கீங்க?" என்று கோவமாக கேட்டான் க்ரூக்ஸ்.&lt;br /&gt;  "என்ன தப்பு?"&lt;br /&gt;  "அதான்..இப்ப வந்தவங்கள ஓரே அறைக்கு போக அனுமதிச்சிட்டீங்களே! இயற்க்கைக்கு மாற இப்படி அசிங்கம் பண்றாங்களே..தப்பில்ல?"&lt;br /&gt;  "யாரு உனக்கு இது செயற்கையானதுன்னு சொன்னங்க?"&lt;br /&gt;  "இதெல்லாம் வெளிப்படையா யாரவது சொல்லுவாங்களா?"&lt;br /&gt;  "சரி, வெளிப்படையா பேசலைன்னா நீயே ஏதாவது முடிவுக்கு வந்துடுவியா? நாம, அந்த இரண்டு பேர் எல்லாம் இயற்கைக்குள்ள இருக்கிறவங்க. அந்த உணர்ச்சியும் இயற்கையானது. இது எப்படி தப்பு ஆகும்னு தெரியல. மருத்துவ ரீதியா எனக்கு தெரிஞ்சு எந்த பாதிப்பும் இல்ல. இன்னும் ஆழமா ஆராய்ச்சி நடக்குது. வேணும்னா பாரு சீக்கிரமே அரசும் இதை அங்கீகரிக்கும்" என்றான் ரிச்ச்ர்ட்.&lt;br /&gt;  "அப்ப..அந்த பழக்கம் சரிங்கிறீங்களா?"&lt;br /&gt;  "சரின்னு சொல்லலை...தப்பில்லன்னு சொல்றேன்."&lt;br /&gt;    &lt;br /&gt;கார் மேகங்கள் சூழ்ந்து வானம் ஓரே இருட்டாய் காட்சியளித்தது. இரவு ஒரு மணி ஆகியும் எதிர் வீட்டில் விளக்கு ஒளிராததைக் கண்டு குழம்பினாள் லிண்டா. எதிர் வீட்டு சுவர் ஏறி குதித்து, மாடிக்கு கம்பியை பிடித்து ஏறினாள். சத்தம் கேட்டு ஜெனிஃபர் வெளியில் வந்து,           "நீயா?" என்று அதிர்ந்தாள்.&lt;br /&gt;  "உங்களுக்கு உடம்பு சரியில்லையா?"&lt;br /&gt;  "இல்ல. என் பொண்ணுக்கு தான்."&lt;br /&gt;  "தூங்கிட்டாளா?"&lt;br /&gt;  "தூங்கிட்டா."&lt;br /&gt;  "அப்ப வாங்க போலாம்" என்றாள் லிண்டா.&lt;br /&gt;  "எங்க ஹோட்டலுக்கா! ஏன் உன்னால ஒரு நாள கூட பொறுத்துக்க முடியாதா? இப்பெல்லாம் என் பொண்ணுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போகுது. ஆனா உனக்கு உன் சுகம் தான் முக்கியம். கல்யாணம் ஆகி குழந்தைன்னு ஒன்னு பிறந்தா தான் என் தவிப்பு உனக்கு புரியும்" என்றாள் ஜெனிஃபர்.&lt;br /&gt;மாடியில் இருந்து தலை குப்புற விழுந்தது போல் உணர்ந்தாள் லிண்டா.&lt;br /&gt;"என் பொண்ணுக்கு வேற பதினாலு வயசாகுது. இரண்டுங்கெட்டான் வயசு ஆரம்பிக்குது. நான் அவ பக்கத்தில் இருக்கனும்னு ஆசப்படுறேன். அவளும் நம்மள மாதிரி ஆயிடக் கூடாதில்ல?"&lt;br /&gt;பதிலேதும் பேசாமல் மெளனமாக வந்த வழியே போய் விட்டாள் லிண்டா. ஜெனிஃபருடன் பழகியதற்காக முதல் முறையாக வருத்தப்பட்டாள்.&lt;br /&gt;  &lt;br /&gt;லிண்டாவிற்கு ஜெனிஃபரின் பெயர் கூட தெரியாது. லிண்டாவின் தாய் இறந்த பொழுது, துக்கம் விசாரிக்க பத்தோடு பதினொன்றாக வீட்டிற்கு நுழைந்தாள். பிறகு தினமும் வந்து ஆறுதல் சொன்னாள். லிண்டாவிற்கு தன் மீது அக்கறை செலுத்த மனிதர்கள் இல்லையே என்று வருத்தப்பட்ட சூழலில் எல்லாம் ஜெனிஃபர் வந்ததால், ஜெனிஃபர் மேல் அளவு கடந்த அன்பு லிண்டாவிற்கு எழுந்தது.&lt;br /&gt;நன்றாக பழக ஆரம்பித்த ஒரு நாள், " என் புருஷன் என்னை தினமும் குடிச்சுட்டு வந்து மிருகத்த அடிக்கிற மாதிரி அடிக்கிறான். சிகரெட்டுல சுடுறான்" என்று துணிகளை அவிழ்த்து காண்பித்தாள் ஜெனிஃபர்.&lt;br /&gt;முதலில் கண்ணை மூடிய லிண்டா ஜெனிஃபரின் உடம்பைப் பார்த்து அதிர்ந்து கண் கலங்கினாள். இது தான் சமயம் என்று லிண்டாவை வெறும் உடம்புடன் கட்டி பிடித்துக் கொண்டு, "உனக்கும் என் நிலைமை வரக் கூடாது. ஆம்பிள்ளைங்க எல்லாம் வக்கிரம் பிடிச்சவங்க" என்றாள் ஜெனிஃபர். ஜெனிஃபர் மேல் இருந்த அன்பு, அவள் படும் துன்பம், உரசல் தந்த ஆனந்தம் என லிண்டாவும் ஜெனிஃபரின் இச்சைக்கு தடை சொல்லவில்லை. ஆண்கள் மேல் வெறுப்பை லிண்டாவிற்கு வளர்த்துக் கொண்டே இருந்தாள் ஜெனிஃபர்.&lt;br /&gt;  'குழந்த ஒன்னு பிறந்தா தான் தவிப்பு புரியுமாமே! நான் ஆம்பிள்ளைங்கள கல்யாணமும் பண்ண கூடாதுன்னு சொன்னதெ அவங்க தான். அவங்க பொண்ணு எங்கள மாதிரி ஆயிடக் கூடாதாம். அப்ப நான் எக்கேடு கெட்டாலும் அவங்களுக்கு பரவாயில்ல. பொண்ணுக்கு உடம்பு சரியில்லையாம்! எனக்கு உடம்பு சரியில்லாத பொழுது, எல்லாம் அங்க வந்த சரியா போகும்னு இழுத்துட்டு போனாங்களே. ச்சே..இத்தன நாளா அவங்களுக்கு என் உடம்பு தேவைப்பட்டிருக்கு. எவ்வளவு பெரிய அசிங்கத்த பண்ணிட்டோம். பகல்ல ஒரு வாழ்க்க, இரவுல ஒரு வாழ்க்க. சரியான தூக்கம் இல்ல. எப்ப மாட்டிகிட்டு மானம் போகுமோன்னு ஒரு பயம் வேறு. இனிமே அவங்க பக்கமே திரும்பக் கூடாது' என்று பலவாறு யோசித்தப்படியே தூங்கி விட்டாள். பல நாட்களாக சூழ்ந்திருந்த கரு மேகம், லிண்டா தூங்கி எழும் பொழுது தென்படவில்லை.&lt;br /&gt;  &lt;br /&gt;மூன்று மாதங்களுக்குப் பிறகு, க்ரூக்ஸ் தன் ஊரிற்கு மீண்டும் வந்தான். நேராக சென்று ஹென்றியை பார்த்து விட்டு வீட்டிற்கு சென்றான். இரவு பதினொரு மணியில் இருந்து இரண்டு மணி வரை ஹோட்டலின் பின்புற தெருவில் மறைந்து, லிண்டாவிற்காக காத்திருந்தான். ஆனால் லிண்டாவை தவிர யார் யாரோ வந்தார்கள். தன் அதிர்ஷ்டத்தை நொந்தவாறே வீட்டிற்கு திரும்பினான் க்ரூக்ஸ்.&lt;br /&gt;காலையில் ஹென்றி வந்து எழுப்பி, செய்தி தாளை நீட்டி படிக்கச் சொன்னான். 'மருத்துவர் ரிச்சர்ட் ஹாரி மர்மமான முறையில் வெட்டப்பட்டு இறந்தார். பாதிரியார் சம்பந்தபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறார்' என்று செய்தி வந்திருந்தது.&lt;br /&gt;மீண்டும் வேலைப் போனதை நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் பொழுதே, பக்கத்து வீட்டுக்காரி வந்து விசாரித்துக் கொண்டிருந்தாள். கிளம்பி செல்லலாம் என பக்கத்து வீட்டுகாரி திரும்பும் பொழுது, வாசலில் லிண்டா நின்றிருந்தாள்.&lt;br /&gt;  "நீ ஊர விட்டு போன அன்னிக்கு, இந்த பொண்ணு உன்னைத் தேடி வந்துச்சுப்பா" என்று சொல்லி விட்டு போய் விட்டாள்.&lt;br /&gt;லிண்டா தலை குனிந்துக் கொண்டு நின்றிருந்தாள்.&lt;br /&gt;  "உங்கள எப்படியும் பார்த்துடனும்னு நேத்து ஹோட்டல் பின்னாடி காத்திருந்தேன். நீங்க வரலியா..உடம்பு சரியில்லன்னு நினைச்சு கவலைப்பட்டேன். ஆனா நல்லா தான் இருக்கீங்க போலிருக்கு. எப்படி நான் வந்தது தெரியும்?" என்று கேட்டான் க்ரூக்ஸ்.&lt;br /&gt;  "இந்த தெருவுல ஒருத்தர் கிட்ட நீங்க வந்தா சொல்ல சொன்னேன். அவர் தான் சொன்னாரு. அன்னிக்கு உங்க படிவத்த தள்ளி விட்டதுக்கு மன்னிச்சுடுங்க. அன்னைக்கே உங்ககிட்ட மன்னிப்பு கேட்க தான் வந்தேன். இப்பெல்லாம் நான் அங்கெல்லாம் போறதில்ல. பண்ண தப்ப நினைச்சு இப்ப வருந்துறேன்" என்றாள் லிண்டா.&lt;br /&gt;  "என்ன தப்பு பண்ணீங்க?"&lt;br /&gt;  "ஏன் திரும்பி அதையே ஞாபகப்படுத்துறீங்க? அவங்களோடு பழகுறதை விட்டுட்டேன். இனிமே அந்த தப்ப பண்றதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்."&lt;br /&gt;  "அதெல்லாம் தப்பு இல்லைங்க. நான் தான் கிணத்து தவளையா இருந்தேன் நினைச்சா நீங்களும் அப்படி தான் இருந்திருக்கீங்க."&lt;br /&gt;லிண்டா க்ரூக்ஸ் சொன்னதை கேட்டு அதிசயித்து, "சரி, எனக்காக ஏன் காத்திருந்தீங்க?" என்று கேட்டாள்.&lt;br /&gt;  "அந்த பிரகாசமான கண்ண பார்க்கலாம்னு தான்" என்று புன்னகைத்தான் க்ரூக்ஸ்.&lt;br /&gt;  ஒரு நிமிடம் மெளனமாக இருந்து விட்டு, " நான் ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன். வேலைக்கு சேர்ந்துக்கிறீங்களா?" என்று கேட்டாள்.&lt;br /&gt;  "திரும்பி சர்வராவா?" எனக் கேட்டு, மேலே பார்த்து யோசித்தான் க்ரூக்ஸ்.&lt;br /&gt;  "பிடிச்சிருந்தா முதலாளியா சேர்ந்துக்கோங்க."&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7850939883982974148-181729339496921339?l=samrajyapriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://samrajyapriyan.blogspot.com/feeds/181729339496921339/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7850939883982974148&amp;postID=181729339496921339' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/181729339496921339'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7850939883982974148/posts/default/181729339496921339'/><link rel='alternate' type='text/html' href='http://samrajyapriyan.blogspot.com/2007/11/blog-post.html' title='புதிர் கோணங்கள்'/><author><name>சாம்ராஜ்ய ப்ரியன்</name><uri>http://www.blogger.com/profile/01805293419589369979</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.birdsasart.com/baaimage/rtp39.jpg'/></author><thr:total>1</thr:total></entry></feed>
